Posted in

யாதுமாகியவள்

This entry is part 1 of 21 in the series 27 ஜூன் 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

காவல்காரியாய் சில நேரம்

எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும்

புலனாய்வு அதிகாரியாய் சில நேரம்

எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும்

வழக்கறிஞராய் சில நேரம்

எங்கள் பிணக்குகளை விசாரித்து

தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம்

பல வேடம் போடும் அம்மா

எப்போதும் வீட்டுச் சிறையில்

கைதியாய்!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationபிளிறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *