புரியாத கவிதை

This entry is part 7 of 11 in the series 15 அக்டோபர் 2017

நிலாரவி.

யாருக்கும் புரியாத
கவிதையை எழுதுவதே
கவிதை என்றானபின்
எனது கவிதையை
எழுதத்துவங்கினேன்

இது புரியும் பட்சத்தில்
நான் தோற்றவனாகிறேன்
நீங்கள் ஜெயித்துவிடுகிறீர்கள்
புரியாமல் போவதில்
வெற்றி எனக்குத்தான்

எப்பொழுதும்
வாசகனை ஜெயிப்பது தானே
எழுதுபவனின் வெற்றி
எனினும்
எழுதியவனின் பொருளும்
வாசகனின் புரிதலும்
எதிர்கொள்ளும் திசையொன்றில்
ஜெயிப்பவர் யாரோ?

ranusri70@yahoo.in

Series Navigation”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *