This entry is part 3 of 10 in the series 17 மார்ச் 2019

இரும்படுப்பு அருவாமனை

என்று கூவிப் போகிறாள்

கைக்குழந்தையுடன்

கூடை முறம் வேணுமா

கேட்டுப் போகிறார்

கிழவி ஒருவர்

பால்காரரின் கணகண ஒலி

இன்னும் பரிதாபமாய்க்

கேட்டுக் கொண்டிருக்கிறது

சாணை பிடிப்பவரின்

வண்டிச் சக்கரம்

சும்மா சுற்றுகிறது

ஓலைக் கிலுகிலுப்பைக்

கொடுத்து அரிசி வாங்குபவள்

எங்கே போனாளோ?

பூம்பூம் மாடு இல்லாமல்

மேளச் சத்தம் மட்டுமே

வந்து கொண்டிருக்கிறது

எல்லாமே நவீனமானால்

மரபெங்கே போகும்

என்ற கேள்வி எழுகிறது.

Series Navigationதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)அறுந்த செருப்பு