Posted in

கைமாறு

This entry is part 3 of 4 in the series 5 ஜனவரி 2020

என் ஓவியங்களுக்கு

வண்ணங்களாய்

வந்தவர்க்கு

வேரறியாக் காலத்தில்

நீர் தந்த கரங்களுக்கு

படரத்துடித்தபோது

கூரையாய் ஆனவர்க்கு

வாழ்க்கைப் பாதையில்

எழுபதைத் தாண்ட

செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு

கூவி விற்ற பொருளுக்கு

காசு தந்தவர்க்கு

வியர்வை காய

விசிறி விட்டவர்க்கு

வாழ்க்கைச் சிலேட்டில்

தப்பாய் எழுதியதை

யாருமே அறியாமல்

கண்ணீரால் அழித்தவர்க்கு

என் முட்களை

மன்னித்தவர்க்கு

சூரைக் காற்றில்

இரும்புக் கோட்டையாகி

என்னை இடியாமல்

காத்தவர்க் கெல்லாம்

என் கைமாறு என்ன?

முற்றிச் சாய்ந்த நாற்று

மண்ணுக்கும் மழைக்கும்

தரும் கைமாறுதான்

அமீதாம்மாள்

Series Navigationஅருளிச்செயல்களில் மச்சாவதாரம்2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *