Posted in

தும்மல்

This entry is part 4 of 12 in the series 15 மார்ச் 2020

சுரேஷ் சுப்பிரமணியன்

விருப்பம் போல்

வருவதில்லை என்றாலும்

விரும்பியர் நினைக்கும் பொழுது

வருவதால் தும்மல்

எனக்கு பிடிக்கும்

அப்பா நினைக்கிறாரா

அம்மா நினைக்கிறாரா

அக்கா நினைக்கிறாரா

அருமை மனைவி நினைக்கிறாளா

அல்லது

அவள் நினைக்கிறாளா என

ஐயம் வருவதுண்டு

யார் நினைத்தால் என்ன

யாரோ நினைவில் 

நாம் இருக்கிறோம் என்ற

நினைப்பே 

பெருமை தருவதாய் இருக்கும்

தும்மும் பொழுது. 

            – சுரேஷ் சுப்பிரமணியன்

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *