சி. ஜெயபாரதன், கனடா
முடக்கு வாத நோய் வதைத்து
மடக்கும் போது,
நடக்க முடியாது கால்கள்
பின்னித்
தடுமாறும் போது,
படுக்கை மெத்தை முள்ளாய்
குத்தும் போது,
படுத்தவன் மீண்டும்
எழுந்து நிற்க இயலாத போது,
வாழ நினைத்த போதும்
வாழ முடியாத போது,
இறுதி இயலாமை
உறுதி.
தவிக்கும்
மனத்துக்குத்
தெரிவது, மீளாத
ஒரே பாதை !
பயணத்தின் முடிவு
ஒன்றே !
====
என் பயணத்தின் முடிவு
சி. ஜெயபாரதன், கனடா
முடக்கு வாத நோய் வதைத்து
மடக்கும் போது,
நடக்க முடியாது கால்கள்
பின்னித்
தடுமாறும் போது,
படுக்கை மெத்தை முள்ளாய்
குத்தும் போது,
படுத்தவன் மீண்டும்
எழுந்து நிற்க இயலாத போது,
வாழ நினைத்த போதும்
வாழ முடியாத போது,
எழுத முனையும் கவிதை தனைக் கை
நழுவ விட்ட போது,
வரைய வந்த வானவில் கண்ணீர்
மறைத்த போது,
இறுதி இயலாமை
உறுதி.
தனித்துப் போய் தவிக்கும்
மனத்துக்குத்
தெரிவது, மீளாத
ஒரே பாதை !
பயணத்தின் முடிவு
விடுதலை !
==============