மௌனி

This entry is part 8 of 9 in the series 18 ஜூன் 2023

ஆர் வத்ஸலா

உனது மூன்று முகங்களை

கண்டு உன் பால்

ஈர்புற்றவள்

நான்

ஒரு மகனின் ஆதூரத்துடன்

அணுகி

எனக்கு தேவையானதை

நான் கேட்காமலேயே

தந்தாய்

ஒரு நண்பனாக என்னுடன்

விவாதித்தாய்

பல்வேறு விஷயங்களை

வியக்கத்தக்க வகையில் 

நாம் கருத்தொருமித்தோம்

ஒரு கண்டிப்பான ஆசானாக

எனக்கு சிலதை

மிக நன்றாக கற்றுக் கொடுத்தாய்

பிறகு வந்தது ஒரு நீள்மௌனம்

குதறிப் போட்டுக்

கொண்டு

பல்லாண்டு 

என்னை

காயங்கள் ஆறி

நான் மீளும் நேரமிது

இப்போது புதிதாகக் காட்டுகிறாய்

நான்காம் முகத்தை

முன்பின் தெரியாத

ஒரு நான்காவது மனிதனைப் போல்

எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்தெழும்

அன்பொழுகும் வாழ்த்துக்களுக்கு 

உதட்டளவில் நன்றியும்

பதில் வாழ்த்துகளும்

கூறிப் போகிறாய்

கருணை காட்டு –

மீண்டும் மௌனி,

தயவு செய்து, 

எனது தீர்மானங்களை

கண நேரம் மறந்து

நான் உன்னை

வாழ்த்தித் தொலைத்தாலும்

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம்  பத்தொன்பது          CE 1900தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *