This entry is part 8 of 11 in the series 1 டிசம்பர் 2024

முகவரி கேட்டு 

அலைந்துக்

கொண்டிருந்தார் 

தபால்காரர். 

அவரா

என்று எளனமாக பார்த்தான் 

சந்தைக்காரன். 

அதோ மூலையிலுள்ள 

புத்தகக் கடையில் தேடுங்கள்

என்றான் மார்வாடி

பெண்ணின் மூக்குத்தியை 

எடைப்போட்டுக் கொண்டே. 

அவரா 

நேத்து தான் 

அந்த மூலை பழைய 

புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார். 

நாலு 

பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை 

வாங்கி சென்றார் 

நாலு ரூபா பாக்கியுடன். 

அவரா 

ஜிப்பாவோடு 

அலைவரே

தோளில் ஜோல்னாப்பையோடு. 

அவரா 

முனைத்தெரு 

டீக்கடையில் 

பேசீக்கொண்டே இருப்பாரே. 

அவரா 

வேல வெட்டி இல்லாம 

எழுதிக்கொண்டிருப்பரே.

அவரா 

லைப்ரரில 

கடைசி 

ஆளா 

வெளிய போவரே. 

ஓ!

அவரா. . ,

ஆமாம் 

அவர் என்ன 

கட்சி தலைவரா,

வட்டமா  

மாவட்டமா 

கொ.ப.செ..ரா..

சிரித்தார்கள் 

ஏளனமாக .

தபால்காரர் 

இலக்கிய இதழை 

பூட்டிய வீட்டின் 

திண்ணையில் வைத்து சென்றார். 

பசியோடு வந்த பசு 

நக்கித் தின்றது பசி தீர.

தூரத்தில் 

வந்தான் எழுத்தாளன் 

பசியோடு. 

  – ஜெயானந்தன்.

Series Navigationசுகமான வலிகள்களவு போன அணுக்கப்பை