அணையா நெருப்பு

This entry is part 7 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன்

அன்று வெள்ளை ஆடை
அணிந்த மகான் ஏற்றியது.
இன்றும் அணையவில்லையாம்.
வழிவழி வந்தவர்கள்
தொடர்கிறார்களாம்.
வாய்ச்சொல்லில் மட்டுமன்று
வள்ளன்மையிலும்
இருக்கிறார்கள்.
நாளாக நாளாக
மரங்கள் பட்டுப் போகின்றன.
குளங்கள் வற்றிப் போகின்றன
மனங்கள் மரத்துப் போகின்றன
சாலை ஓரத்தில்
கையேந்துவரைப் பார்த்தால்
கண்களை மூடுகிறார்.
இன்றும்
அணையா நெருப்பு
அவரவர் வயிற்றுள்ளே!

Series Navigationஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’ நாவலை அறிமுகப் படுத்த வேண்டிஇல்லறப் பேரவை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *