திசைகாட்டி

0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 22 in the series 22 ஏப்ரல் 2018

கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும்

திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு

முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின்

எதிரொலிகளாய் சில குரல்கள்

திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே…..

போகுமாறும் சேருமிடமும் தெரிந்து

ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு

கிளைபிரியும் பாதைகள் _

அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

அஃறிணை உயர்திணைகள்_ அசுர, தேவ கணங்கள்

அர்த்தனர்த்தங்கள்_ அதிரூப நர்த்தனங்கள்

ஆவென்று வாய்பிளந்திருக்கும் அதலபாதாளங்கள்

’வா, சற்றே உட்கார்ந்து இளைப்பாறு’

என்று அன்போடு அழைக்கும் சுமைதாங்கிக்கற்கள்

அத்தனையும் அத்துப்படி.

அகவொளியில் துலங்குமொரு வரைபடம் தீட்டி

பகலிரவாய் வழியோடியவாறு _ இப்படி

அவரே யவருக்கு திசைகாட்டி.

Series Navigationமொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *