ஸிந்துஜா படைப்புகள்
ஸிந்துஜா கவிதைகள்
1 சுடும் உண்மை இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை விளக்குகள் அணைப்பதில்லை. 2. ஞானம் உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம் என் நாவல்களைப் பாராட்டவும் விழா எடுக்கவும் ஒரு குழு தேவை. ஏஜன்ட்டுகள் விண்ணப்பிக்கவும். 4 இந்தியா எனது இந்தியா முதலாமவர் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு வக்கீல் ஆபீசில் [Read More]
பெண்கள் பெண்கள் பெண்கள்
ஸிந்துஜா 1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள். 3 எதிரே வருபவளைப் பார்க்காமல் போகிறவன் காதுகளில் துப்புகிறாள் எரிச்சலுடன்: மூஞ்சியைப் பாரு. 4 பெண்ணென்னும் மாயப் பிசாசு [Read More]
அழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்
“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி விழுந்து கிடக்கறதும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா? மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு.. [Read More]
மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து
ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த [Read More]
கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்
முன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல்,நாவல் ? ஊஹூம் ! ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட . ஸிந்துஜா 4 இந்தக் காலத்தில்தான் அரைக் கிளாஸ் தாண்டுவதற்கு முன்பே ட்யூஷன் வைக்கும் பழக்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இது தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். இராமாயண காலத்தில் [Read More]
இரு கவிதைகள்
ஸிந்துஜா 1. நிழல்கள் இருளின் பிரம்மாண்டம் இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து பிளக்க வருகிறது இருளை. ரத்தமின்றி ரணகளம் அடைந்து சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். சாவு அல்ல. வெட்டுப்பட்டுத் தடுமாறி அலைக்கழியும் தருணம் ஒளியின் கீழ்ப் படரும் இருளின் குழந்தைகள். ஒளி அவற்றை விரட்டிப் பிடிக்க ஓடி வரும் பொழுதில் [Read More]
அம்பலம் – 2
தமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள் ரியலிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு எழுதும் நாவல்கள் தமிழின் தலை சிறந்த நாவல்கள். சிறு பத்திரிகைகளில் எழுதுபவன் தீவிர [Read More]
அம்பலம்
ஸிந்துஜா சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது. சில “இலக்கியஎழுத்து”க்களை படிக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது.கீழ்க்கண்ட வரிகளை படிக்கும் போது என்ன ஒரு ‘உதார்’ என்று தோன்றவில்லை? “முன்னகர வேண்டும் என்னும் விழைவோ ஒரு வித [Read More]
புத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “
ஸிந்துஜா “அழுவாச்சி வருதுங் சாமி ” சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும் மனிதர்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் தினமும் காணும் பூச்சிகள் , பொட்டுகள்தான். அவர்கள் லட்சிய தாகம் எடுத்து [Read More]
கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3
ஸிந்துஜா 3 இரண்டாம் வகுப்புக்குப் போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வீட்டில் இருந்த இன்னொரு பையனான மணியுடன் போகிறேன் என்று அழுது ஆகாத்தியம் பண்ணினேன். அவன் அப்போது [Read More]