கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

This entry is part 6 of 8 in the series 21 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் […]

ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம்

This entry is part 4 of 8 in the series 21 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும். காலை 10 மணிக்குத் தொடங்கி மலை 5 மணிவரையும் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. […]

வெ.அனந்த நாராயணன் நூல்கள்

This entry is part 2 of 8 in the series 21 ஏப்ரல் 2024

This is Venkat Anantha Narayanan aka வெ.அனந்த நாராயணன் aka டெக்ஸன். Some of my poems and essays have appeared on Thinnai before. But, it has been many years since I sent anything to Thinnai for publication. I have lived in Atlanta for the last 10 years and am finally thinking of retiring soon.  As part of […]

அதுவே போதும்

This entry is part 5 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்

தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு

This entry is part 2 of 4 in the series 31 மார்ச் 2024

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 23 ஆம் திகதி 2024 அன்று சொற்கோ வி. என். மதிஅழகன் அவர்களின் ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு’ என்ற நூல் ஸ்காபரோ சிவிக் சென்ரரில் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சுமார் 2:00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானபோது, திரு. சோம சச்சிதானந்தன் தமிழ்த்தாய் வாழ்தும், செல்வி கிஸோரி ராஜ்குமார் கனடாப் […]

கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்

This entry is part 2 of 4 in the series 17 மார்ச் 2024

கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும். குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு […]