இராம. வயிரவன் rvairamr@gmail.com பங்குச்சந்தை நிலவரத்தைப் போல, வாழ்க்கையும் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையானாலும் சரி, வங்கியின் வட்டிவிகிதம் மாறினாலும் சரி, மழைவந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பங்குகள் கிடிகிடுவென ஏறும்! அடுத்தநாளே மளமளவெனச்சரியும்! எல்லாவற்றுக்கும் காரணம் ‘செண்டிமெண்ட்’ என்பார்கள் அந்தத்துறையில் இருப்பவர்கள். அதைப்போலத்தான் வாழ்க்கையும் ரோலர் கோஸ்ட்டர் விளையாட்டைப் போல ஏறுவதும், இறங்குவதும், விழுவதும் எழுவதுமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது! எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி […]
கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. குரு என்று எவரிடமும் பாட்டு கற்றுக் கொள்ளாமல் தானே சுயமாக சாதக வலிமை மூலம் இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஜி.என்.பி., மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தொடங்கி இன்றும் கச்சேரிகள் செய்பவர். 90 வயதாகும் இவர் இன்று வாழ்கிற கர்நாடக இசைப் பாடகர்களிலேயே மிகவும் மூத்தவர். இன்றைய தலைமுறையினருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் அறிமுகம் செய்விக்கும் வகையில் […]
புனைப்பெயரில்… போனமுறை திரு.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது நடந்த ஸ்டாக் மார்க்கெட் கூத்து பலரின் வாழ்வை தெருவிற்கு கொண்டு வந்தது எங்காயாவது இருக்கட்டும் எப்படியும் போகட்டும் என அவர் உள்துறை மந்திரியாக இருந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால், மன்மோகனுக்குத் தான் நாம் நிம்மதியாக இருப்பது பிடிக்காதே…. திரும்பவும் இப்போது நிதி, ப.சி கையில். தற்போது அவரின் லட்சியம், ஸ்டாக் மார்கெட்டை ரிவைவ் பண்ணுவதாம்..? எப்படி, இந்திய இன்சுரன்ஸ் கம்பெனிகள், பிஎஃப் பணம் […]
கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012 கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம் நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும், கணிதவியலில் பட்டமும் […]
நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார். வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள். மிகச் சரியாகச் […]
ஹெச்.ஜி.ரசூல் இமாம் ஷாபி தரும் விளக்கமொன்று இவ்வாறு விரிகிறது. முசுக்கட்டை மரத்தின் இலை, அதன் சுவை ஒன்றுதான். ஆனால் அதை பட்டுப்புழு தின்றுவிட்டு பட்டுநூலைத் தருகிறது. தேனீ தின்றுவிட்டு தேனைத் தருகிறது. இவ்வார்த்தைகளை நாம் இச்சூழலில் பொருத்திப் பார்க்கலாம். குர்ஆன் ஒன்று. எனினும் காலந்தோறும் அதன் விளக்கவுரை நுட்பமாக விரிவாக பல்வித அர்த்தப் பரிமாணங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. காலம், அறிவுச்சூழல், பிரதேசம், பண்பாட்டின் இறுக்கம் சார்ந்து அதன் அர்த்தங்கள் அகலமும் கனமும் பெறுகின்றன. ஒற்றை […]
இராம. வயிரவன் (25-Aug-2012) உருளைக்கிழங்கையும் கேரட்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வானலியில் ஒரு கறண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்திருக்கிற உருளைக்கிழங்கு மற்றும் கேரட் துண்டுகளை அதிலே போட்டு சிறிது உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொள்ளலாம். உருளைக்கிழங்கும் கேரட்டும் நன்கு வெந்துவிடும். சற்று நேரத்தில் இறக்கி வைத்து விட்டால் உருளைக்கிழங்கு கேரட் பொறியல் தயார். ‘என்ன இது கட்டுரை வேறு மாதிரியாகப் போகிறதே..’ […]
சினிமா தியேட்டருக்குப் போவது கடும் அலர்ஜி தரும் அனுபவமாக எனக்கு முதன் முதலில் ஆனது அன்றைய ஜகன்மோகினி படத்தைப் பார்க்கப்போனபோது. மந்திரவாத மாஜிக் படம் என்று சிறுவர்கள், பெண்கள் பக்கம் கூட்டம் ஒருபக்கம் என்றால், ஜெயமாலினி தரிசனத்திற்காக ஆண்கள் வரிசையில் கைலியை மடித்துக்கட்டி மல்லுக்கட்டும் இளைஞர் கும்பல் இன்னொரு பக்கம் என்று கூட்டம் அலைமோதியது. படம் தொடங்க மணியடிக்கப்போகிறார்கள், டிக்கெட் இல்லை என்று சொல்லி விடுவார்கள் என்றெல்லாம் பேச்சு பரவ ஆரம்பித்தது. அப்போதுதான் அது நிகழ்ந்தது. […]
திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கோவில், குளம், பூசைகள், வழிபாடுகள் என அனைத்தும் செய்து முடித்த தம்பதியருக்கு ஆண்டவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குலம் தழைக்க வந்த குழந்தையை தெய்வமாகக் கொண்டாடினார்கள். தவழுகிற பருவத்தில் தவழ்ந்து, பால் பற்களும் சரியான காலத்தில் முளைத்து, நடைபயிலும் பருவத்திலும், உணவு உண்ணும் பழக்கத்திலும் மற்ற குழந்தைகளைப் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் தம் இரண்டு வயதுவரை வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் […]
இராம. வயிரவன் (11-Aug-2012) நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடைவெளிகளைத் தொடர்வது சந்தோசமாகத்தான் இருக்கிறது. தங்கமீன் இணைய இதழில் ஏழு மாதங்கள் இடைவெளிகள் கட்டுரைத்தொடர் வெளிவந்தது. அதன்பிறகு சில இடைவெளிகளால் இடைவெளித் தொடர் நின்றுபோனது. இப்போது மீண்டும் தொடர்கிறேன். முந்தய கட்டுரைகளைப் படிக்க விரும்புவோர் தங்கமீன் இணைய இதழைப் புரட்டுங்கள். கடந்த இதழ்களில் என் கட்டுரைகளைக் காணலாம். முகவரி இதோ: http://thangameen.com/ அங்கே சென்று படிக்கமுடியாதவர்கள், கவலை வேண்டாம் என்னோடு தொடருங்கள். நானே சுருக்கமாக உங்களுக்குச் […]