பிடிக்காத வாத்தியாரின் பாட நேரங்களில் கூர்ந்து கவனிக்கிறார்கள் அடுத்த பாட வாத்தியாரை வரவேற்க போகும் மணியோசையை அந்த நாளின் இறுதி பாடத்தின் கடைசி பத்து நிமிடங்களில் போர்கால அடிப்படையில் ஆயத்தமாகிறார்கள் விடுப்பு மணியின் மூன்றாவது மணி யாரும் கேட்காமல் ஆனாதையாய் வகுப்பறையில் உட்கார்ந்தபடியே ஒளிந்துக் கொள்கிறார்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாட்களில் கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே கத்துக் கொடுத்தார் ஆசிரியர் முதன் முறையாக வீட்டுப்பாடம் முடித்தும் படித்தும் வந்தவனிடம் அவர் ஒன்றும் கேட்கவில்லை வாத்தியார் அடிக்கும்போது […]
மெல்ல என்னை இழந்து கொண்டிருந்தேன் திடுமென வீசிப்போன புயலில் தன்னருகதை இழந்த சிறு துகள்களாய் என் ஒட்டு மொத்தமும் ஒடுங்கி விட்டிருந்தது வீசியெறிந்ததொரு அலையின் எதிர் நீச்சல்காரனாய் சிதைந்த உடம்புகளோடும் இழந்த துடுப்புகளோடும் அந்நிகழ்வுகளின் அரூபங்கள் வழியே பின் தொடர வேண்டியதுள்ளது. முற்றுமாய் தங்கள் மௌனங்கள் களைந்த என் வார்த்தைகளை சிலர் பறித்துக் கொண்டிருப்பார்கள் இன் முகமாய் முன் இளித்து என் பித்தட்டு வழியே ரகசியங்களை பை நிறைய திணித்துக் கொள்வார்கள் பலர் ஒரு ஓரமாய் ஒடுங்கிய […]
எழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் […]
வீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம் குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில் ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.. பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட குழந்தையொன்றைக் கைப்பிடித்து நடத்திவருவதைப் போலிருக்கிறது நான் இழுத்துவரும் ட்ராலி, என் நடையின் நேர்கோட்டுக்குப் பின்னால் உருண்டுவந்தபடி.. “செல்போன் சார்ஜர் எடுத்து வச்சியா?” “பனியா இருக்கு, ஸ்வெட்டர் போட்டு போ” அக்கறைக்குரல்கள் துரத்தல்களாய்க் கேட்க பிரியாவிடைபெற்று நடக்கிறேன், விடிந்தால் விரியும் மீண்டுமொரு விடுதி நாள்..
தேர்வு மையத்திற்கு கூட வரவில்லை என்றால் அப்பாவுக்கு என் மேல் அக்கறை இல்லை கூடவே சென்று நிழல் பார்த்து உட்கார சொன்னால் ஏன் அப்பா இப்படி படுத்தறீங்க என்று சடைத்து கொண்டாள் என் மகள் மகள் என்றாலும் பெண்தானே புரிந்து கொள்ள முடியவில்லை
நான் வெளியேறுகையில் என்னைத் தொடர்ந்து புன்னகைத்தபடி வருவதில்லை நீ வாசல்வரை முன்பு போல கட்டிலிலே சாய்ந்து என்னையும் தாண்டி கதவினூடாகப் பார்த்திருக்கிறாய் தொலைதூரத்தை அமைதியாக பறக்கிறது பட்டம் மிகத் தொலைவான உயரத்தில் நூலிருக்கும் வரை தெரியும் உனக்கும் என்னை விடவும் நன்றாக – இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
வீசி எறிந்தால் விண்மீனாகு மண்ணில் புதைத்தால் மண்புழுவாகு அடித்தால் பொன்னாகு பிளந்தால் விறகாகு கிழித்தால் நாராகு தாக்கும் அம்புகளை உன் தோட்டக் கொடிகளுக்குக் கொம்புகளாக்கு புயலிலும் பூகம்பத்திலும் தான் தன் சுழற்சிக்குச் சுருதி கூட்டுகிறது பூமி சுற்றிச் சுற்றி எரிகிறது பொய்த் தீ பொறாமைத் தீ தீ..தீ..தீ.. தீயின் வெளிச்சத்தில் பாதை தெரிவதைக் கவனி. . . பயணி. . . பஞ்சபூதமும் உனக்குள்ளே பரந்தாமனும் உனக்குள்ளே பயணி. . . அமீதாம்மாள்
என் நிழலுக்குள்ளேயே அவன் நிழல்கூட விழாதுதான் அடங்கி நடந்துகொண்டிருந்தான் குழந்தை. கேள்விகள் காம்பாய் வளைந்திருக்க அவன் பதில்கள் அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன. ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும்போதே தடம் மாறியதறியாது வேறொன்றில் நின்று கொண்டிருக்கும் மனம் குழந்தைக்கு மட்டுமில்லாது எனக்கும் ஆனதில் மீன்களின் ஞாபகம் வியாபித்திருக்கும் குளத்தின் நினைவில் கருக்கொண்டிருந்த கவிதை விளைத்தமௌனத்தில் துணுக்குற்றவனின் கவனம் ஈர்க்க ” ஒரு ஊரில் ” என ஆரம்பித்தால் சொல்லிவிடப் பயிற்றுவித்திருந்த ராஜவம்சத் தொடரைச் சொல்லத் தூண்டியபோது சொல்லாது வேரோடு அறுத்து […]
பெருங் கோட்டைச் சுவர் தாண்டி உள் நுழையத் தேரோடும் தார் சாலையின் இருமருங்கும் புது வீடுகள்.. முப்பது ஆண்டுகளுக்கு முன்பான ஊர் நெஞ்சுள் விரிகிறது.. நிரம்பித் தழும்பும் பெருமாகுளம் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப் போகும் சிறுவர் கூட்டம்.. குளம் களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்.. கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக் களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள் ஓயாதப் பறவைகளின் குரல் சவக் கோட்டை மேல்ப் பறக்கும் பருந்துக் கூட்டம்.. மாலையில் நாற் தெருவும் குழந்தைகள் இளைஞர்கள் விளையாட்டு […]
தன் கோப்பையின் தேநீரை அவள் துளித்துளியாய்ப் பருகிக் கொண்டிருந்தாள். யாருடன் அருந்துவது., யாருக்குப் பகிர்வது., யாருடையதை எடுத்துக் கொள்வது எனத் தீர்மானித்தபடியே. சூடாகத் தேநீரும் பாலும் கலக்கும் போது ஆவிகள் நடனமிடுவது பிடிக்கும் அவளுக்கு. இயல்பாய் இருக்கும் அவள் நடனத்தைப் போல மெல்ல மேலெழும்பி மணம் பரப்புகின்றன அவை. இனிப்புக் கட்டிகளை விருப்பத்தின் பேரிலேயே இணைத்துக் கொள்கிறாள். ஸ்பூனால் கலக்கும்போது “யந்திர”த்தில் இருந்து எழும் அதிர்வுகளையும் ஓசைகளையும் ஒத்திருந்தது அது. ஒத்திசைவுகளோடு கலக்கப்பட்ட ஒரு தேநீரை அவள் […]