இறந்து கிடக்கும் ஊர்

This entry is part 19 of 30 in the series 22 ஜனவரி 2012

பெருங் கோட்டைச் சுவர் தாண்டி உள் நுழையத் தேரோடும் தார் சாலையின் இருமருங்கும் புது வீடுகள்.. முப்பது ஆண்டுகளுக்கு முன்பான ஊர் நெஞ்சுள் விரிகிறது.. நிரம்பித் தழும்பும் பெருமாகுளம் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப் போகும் சிறுவர் கூட்டம்.. குளம் களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்.. கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக் களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள் ஓயாதப் பறவைகளின் குரல் சவக் கோட்டை மேல்ப் பறக்கும் பருந்துக் கூட்டம்.. மாலையில் நாற் தெருவும் குழந்தைகள் இளைஞர்கள் விளையாட்டு […]

சந்திரலேகா அல்லது நடனம்..

This entry is part 17 of 30 in the series 22 ஜனவரி 2012

தன் கோப்பையின் தேநீரை அவள் துளித்துளியாய்ப் பருகிக் கொண்டிருந்தாள். யாருடன் அருந்துவது., யாருக்குப் பகிர்வது., யாருடையதை எடுத்துக் கொள்வது எனத் தீர்மானித்தபடியே. சூடாகத் தேநீரும் பாலும் கலக்கும் போது ஆவிகள் நடனமிடுவது பிடிக்கும் அவளுக்கு. இயல்பாய் இருக்கும் அவள் நடனத்தைப் போல மெல்ல மேலெழும்பி மணம் பரப்புகின்றன அவை. இனிப்புக் கட்டிகளை விருப்பத்தின் பேரிலேயே இணைத்துக் கொள்கிறாள். ஸ்பூனால் கலக்கும்போது “யந்திர”த்தில் இருந்து எழும் அதிர்வுகளையும் ஓசைகளையும் ஒத்திருந்தது அது. ஒத்திசைவுகளோடு கலக்கப்பட்ட ஒரு தேநீரை அவள் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)

This entry is part 12 of 30 in the series 22 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிக்கலான அரவங்கள் செம்மையான சொற்கள் அல்ல புரியாத வற்றைப் பிடித்து உரிய தாக்குவேன் ! கிளைகளில் துவங்கிக் கீழே இறங்கி வேர்களிலும் தீப்பற்றி வெந்தழிகிறது ! பூரா மரமும் புகைந்து சாம்பலாச்சு ! *கிதர் பசுமை மனிதன் பற்றிய கதைகளும் கிதரே கூறிய கதைகளும் மீண்டும் தெரிய வந்தன ! மறைந்து போய் விட்ட புராதனக் கதைகள் என்று நினைக்கப் பட்டவை ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)

This entry is part 11 of 30 in the series 22 ஜனவரி 2012

எழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னைப் பார் கண்ணாடியில் முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

நழுவும் உலகின் பிம்பம்

This entry is part 4 of 30 in the series 22 ஜனவரி 2012

இளங்கோ * வெகு நேரமாய் தலையசைத்துக் கொண்டிருந்த பூவில் எறும்பொன்று நடுங்குகிறது வீசும் காற்று புரியாமல் கைவிரித்துத் தாங்கிப் படர்ந்த பச்சைக் காம்பில் சிலிர்ப்போடுகிறது உச்சி நிழல் பிறகு தூறலோடு தொடங்கிய சிறு மழை உருட்டுகிறது துளிகளை அதில் நழுவும் உலகின் பிம்பம் எறும்பின் உடலை வளைத்து கீழிறக்குகிறது மணலில் நெளியும் புழுவைக் கடந்து வெயில் காயும் மேட்டின் துளைக்குள் நுழைய.. பேச்சற்று சொற்ப வெளிச்சக் கீற்றோடு மௌனமாய் அசைகிறது வனம் ******

அறியான்

This entry is part 2 of 30 in the series 22 ஜனவரி 2012

எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான் எதற்கும் எதிலும் தானேதான் என்றான் அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான் தானே தானே என்றவனை தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல் தேதி அறிந்தான் நேரம் அறிந்தான் இட எல்லை குறித்தான் என்றாலும் தடுக்க இயலாமல் னான் இப்போது அடங்கிக் கிடப்பான் இவன் மின்சாரமும் வீடும் நிவாரணமும் உப்பும் சோறும் உறவும் மீண்டும் கிட்டியதும் மீண்டும் “தானே” என்பான் தன்னை மீறிய இயற்கை அறியான்!

பொங்கல் வருகுது

This entry is part 27 of 30 in the series 15 ஜனவரி 2012

சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வருகுது ! புத்தரிசி பொங்க வருகுது ! மகிழ்ச்சி பொங்கி வருகுது ! எங்களை எல்லாம் இன்பத்தில் முங்க வருகுது !  நாவில் தங்க வருகுது !  கும்பி குளிர வருகுது ! கும்மி அடிக்க வருகுது !  அன்பில் அணைக்க வருகுது ! விழாவில் இணைக்க வருகுது ! புத்தாடை மங்கையர் உட்கார்ந்து முற்றத்தில் வண்ணக் கோல மிட்டுப் பால் பொங்கல் இனிதாய்ப் பொங்கப் போகுது ! வெண் பொங்கல் […]

அன்று கண்ட பொங்கல்

This entry is part 22 of 30 in the series 15 ஜனவரி 2012

ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன சாரநாத் சக்கரங்களைக் கட்டை வண்டியில் பூட்டி சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில் காவி-வெள்ளை -பச்சை பூசி தேசியமயமாக்கி… உமிப்போர்வையில் உறக்கம்போட்ட விதை நெல்லை எழுப்பி வந்து ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து… பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி… பஞ்சாங்கம் புரட்டி மேட்டுர் அணையை வானொலியில், செய்தித் தாளில் எதிர்பார்த்து… சேற்றில் கால்புதைத்து பாட்டுப் பாடி பொய்களைப் புடுங்கி உண்மைகளை நட்டு வைத்து… டெமக்ரானில் தாளடிப் பூச்சியை சந்தித்து என்ட்ரோ சல்ஃபானில் தத்துப் பூச்சியைக் […]

ரம்யம்/உன்மத்தம்

This entry is part 21 of 30 in the series 15 ஜனவரி 2012

ரம்யம் வசந்தகாலத்தின் முதல் பழங்களை அணில் ருசிக்கும் பறவைகளின் சப்தம் சன்னமான இசை மேகங்களற்ற வானம் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான் பாறையில் மோதிய கணத்தில் சிறகு முளைத்தது அந்தி வானத்தில் கூடு திரும்பும் பறவைக் கூட்டம் பருந்தின் நிழல் கண்டு அஞ்சும் புறாக்கள் லேசான தூறல் ரம்யமான மாலை கிழக்கு வானத்தில் வானவில் அலைகள் சொன்ன கதைகளை கரை யாரிடம் சொல்லும் குளம் எப்படி நிலாவை சிறை பிடித்தது தோட்டத்து மலர்களில் அவள் கூந்தலை அலங்கரிக்கப் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்

This entry is part 18 of 30 in the series 15 ஜனவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் […]