Posted in

நன்றி நவிலல்

This entry is part 31 of 41 in the series 13 மே 2012

கோமதி நடராஜன்

உடல்வலிமையும் ,மனவலிமையும்,
நிறைந்திருந்த நாளில்,
பூமியில் பதிந்த,
மலையைப் பெயர்த்துத் தரச்சொன்னார்,
நெம்பி எடுத்துத் தந்தேன்.
வேரோடியிருந்த ,
மரத்தைப் ,பிடுங்கித் தரச் சொன்னார்,
கிள்ளி எடுத்துக் கொடுத்தேன்.
மனமும் சோர்ந்த ,
உடலும் களைத்த ,
இன்று
தரையில் கிடந்த ஊசியைக் கேட்டார்,
”ஊசிதானே ,உன்னால் ஆகாதா ”என்றேன்
மலையையும் மறந்தார்
மரத்தையும் மறந்தார்
”உன்னால் ஒரு பிரயோசனமில்லை”
என்றவாறு அகன்றார்.

Series Navigationதோல்வியில் முறியும் மனங்கள்..!முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *