முள்வெளி அத்தியாயம் -9

This entry is part 4 of 29 in the series 20 மே 2012

“சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா.

“நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ”

“கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?”

“லுக் லதா. ஆஸ் அ டாக்டர் மட்டும் நான் இதைச் சொல்லலே. டூ யூ வாட்ச் யுவர் பிகர் இன் த மிர்ரர்?”

லதா சில நொடிகளுக்குப் பிறகு “பாஸ்ட் ஒன் மன்தா ஐ ஆம் நாட் அட் ஆல் கம்போஸ்ட்.”

“ஐ கான்ட் பிலீவ்”

லதா ஒரு துளி என்பது போல கண்ணாடிக் குப்பியில் இருந்த மதுவை அருந்தினாள்.

“உன் கிட்டே எவ்வளவு டைம் இருக்கு சங்கீத்?”

“கமான் லதா. உனக்காக எவ்வளவு வேணாலும் டைம் இருக்கு. பால்கனியிலே உட்காரலாமா?’

லதா செடிகள் நிறைந்த பால்கனியைத் தேர்ந்தெடுத்தாள்.

‘மூணு பக்கம் பால்கனிங்கறது ஒன்டர் ஃபுல் டிஸைன் இல்லே? ஹூ வாஸ் தட் ஆர்க்கிடெக்ட்?”

“ராஜேந்திரன். ஹீ ஈஸ் நாட் ஆன் ஆர்க்கிடெக்ட். பட் எ க்ரியேடிவ் மைன்டட் பர்ஸன்.”

‘ஐ உட் லைக் டு மீட் ஹிம்’

“யூ கான்ட் சங்கீத்”

“ஒய்?”

“அதப்பத்திப் பேசத் தான் உன்னை வரச் சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணினேன்”

லதா குரலின் நடுக்கத்தை கவனித்து சடேரெனத் திரும்பி சங்கீதா லதாவின் முகத்தைப் பார்த்தாள். கன்னங்கள் வரை கண்ணீர். “லதா வாட் ஈஸ் திஸ்? நீயா அழறே? ஐ ஹாவ் நெவெர் ஸீன் யு இன் டியர்ஸ்”. காங்கிரீட் சாய்வில் அமர்ந்திருந்த சங்கீதாவின் தோளில் சாய்ந்து விம்மி அழுதாள் லதா.

அவள் தலையைத் தடவியபடியே சங்கீதா “நீ மெயில்லே சொல்லியிருந்தது ராஜேந்திரனைப் பத்தித் தானா?” என்றாள். ஆமாமென்று தலையை அசைத்தாள் லதா.

“நான் தான் ரிப்ளையில சொல்லியிருந்தேனே சச் அஃபயர்ஸ் மீட் எ டெட் என்ட் ஸூனர் தேன் லேடர்”

“தட் ஈஸ் நாட் த இஷ்யூ நௌ”

“தென்?”

“ஒன் மினிட்”. அறைக்குள் சென்று திரும்பிய லதாவின் கையில் ஒரு கத்தைக் காகிதம். “இதப் படிச்சுப் பாரு”. “முடிச்சு” என்று தலைப்பிட்டிருந்த சிறுகதை.

**__
**__**
** காலை மணி ஆறு.
இன்றைக்கு மொஸைக் லோடு வரப் போகிறதென்றால் அன்பு தான் லாரியை ஓட்டியபடி வருவான். வளர்மதிக்கு அவன் வருகை மிகவும் நம்பிக்கை அளித்தது. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கலாவின் படிப்பு முடிந்து விடும். ரிசல்டுக்க்காகக் காத்திருக்கக் கூட வேண்டாம். அன்பு வீட்டைப் பொருத்த வரை அவனுக்குத் தங்கச்சி என்று யாருமில்லை. அக்காக்களைக் கட்டிக் கட்டிக் கொடுத்தாகி விட்டது. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. கூலிக்காரர்கள் யாராவது சொணங்கினால் ‘குடிகாரப்பயலுவளா’ என்று அதட்டுப் போடுவான். லாரிச் சத்தம் கேட்டதும் ஒரு டீத்தண்ணீயாவது அவனுக்கு வைத்துத் தர வேண்டும். அக்கா அக்காவென்று அவன் கூப்பிடுகிற அழகே தனி. கலாவை மனதில் வைத்துக் கொண்டு தான் கூப்பிடுகிறானோ என்று அவளுக்கு ஐயமுண்டு. கலா இப்போது தூங்கிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. புள்ளிகளை இணைத்து இணைத்து அழகான கோலமும் வந்து விட்டது. அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டாள். கோலப் பொடி டப்பாவை அதன் இடத்தில் வைத்தபடியே “ஏய் கலா.. எந்திரிடி. விடிஞ்சு மணி ஆறாயிடிச்சு. பொம்பளப் புள்ளே இன்னும் என்னடி தூக்கம்?”

“இன்னிக்கி ஞாயித்துக் கிளமைதானேம்மா…” போர்வைக்குள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள் கலா.

“ஒரு குடம் குடிக்கத் தண்ணி எடுத்தா. மீனு, மட்டனு எல்லாம் நீதான் வாங்கியாரணும். மசாலா அரைக்கவே எனக்கு நேரம் பத்தாதுடீ”

“கொஞ்ச நேரத்துல எந்திரிக்கறேம்மா. அங்கே அண்ணி வெறட்டரா. இங்க வந்தா நீயும் விட மாட்டேங்கறே”

“புள்ளைய எதுக்குடீ இப்பமே எளுப்பறே?” பின்னாலிருந்து ராசுவின் குரல் கேட்டது.

“இங்கின பஞ்சாயத்துக்கு ஆளில்லேன்னு புலம்பினாங்களா? கேட்டாண்ட போங்க. லோடு வர்ற நேரம் ஓணரும் வருவாரு..”

“ஓணரு அப்பா காலத்திலேயிருந்து எனக்கு சர்வீஸு. என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாரு..”

“அதானே ரொம்ப அள்ளிக் கொடுக்கறாங்க பாரு.. வயசுப் பொண்ணு… நாளைக்கிக் கட்டிக் கொடுக்கற எடத்தில இப்டித் தூங்கிக்கிட்டிருந்தா என்ன நெனப்பாங்க?”

“அவுளுக்கென்னடி இப்போ வயசாச்சு.. சின்னப் புள்ளே..”

“வவுத்துலே நெருப்பக் கட்டிக்கிட்டிருக்கிறது நான்யா… நீங்க வேணா அவள மடியில வெச்சுக் கொஞ்சுங்க.. மருமவ இப்பவே தன் சொந்தத்திலே இவளத் தள்ளி விடலாமான்னு பிளானு போடறா..”

அப்பா அம்மா சண்டை கலாவை எழுப்பப் போதுமானதாக இருந்தது. “முகத்தைக் களுவிக்கிட்டு வா சீக்கரம். தலையச் சீவி வுடறேன்.” லாரியின் ஹாரன் சத்தம் கேட்க ராசு வாசலை நோக்கி விரைந்தான்.

பத்து நிமிடங்களுக்குள் கலா குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். தேனீருக்கான ஏற்பாட்டை செய்து அடுப்பைத் தணித்து வைத்து விட்டு முன் வாசற்பக்கம் சென்றாள் வளர்மதி.

ஓணர் காரிலிருந்து இறங்காமலேயே ராசுவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். கூலியாட்கள் டைல்ஸை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். மேஸ்திரி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தான். லாரியின் முன்பக்கம் தரையில் அன்பு குனிந்த படி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. ” என்ன தம்பி வண்டியிலே ஏதும் ரிப்பேரா?” என்றாள்.

“ஒண்ணுமில்லேக்கா… இந்தத் துணி சிக்கிக்கிட்டிருக்கு அதை எடுத்துக்கிட்டிருக்கேன். நம்பர் பிளேட்டுக்கு அருகே ஒரு கருப்புத் துணி தொங்கிக் கொண்டிருந்தது. அதன் முடிச்சை அவன் நிரடிக் கொண்டிருந்தான்.

” டீக்கிச் சொல்லிடாதீங்க. நான் போட்டு வெச்சிரிக்கேன்..” என்றாள்.

“உங்க கையாலே டீ குடிக்கக் கொடுத்து வெச்சிருக்கணுன்க்கா” என்றான் வாய் நிறைய.

வளர்மதி தேனீரை பல டம்ளர்களில் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். அன்புவுக்கு முன்னர் அனைவரும் தானே முன் வந்து கோப்பைகளை எடுத்துக் கொண்டனர். அன்பு இன்னும் அந்தத் துணியுடன் போராடிக் கொண்டிருந்தான். “முதல்ல டீயைக் குடிங்க தம்பி. என்ன துணியீ அது?”

நம்பர் ப்ளேட்டை மறைச்சிக் கட்டினோம் . ரொம்ப நாளா ஒரு ட்ராஃப்பிக் போலீஸுக்காரன் துட்டையும் வாங்கிக் கிட்டுத் தொல்லையும் குடுத்துக்கிட்டே இருந்தான். அதான் நம்பர் ப்ளேட்டில துணியைக் கட்டிட்டு வண்டியால பின்னாடியிருந்து ஒரு தட்டுத் தட்டினேன். ”

“செத்துட்டானா?” என்றாள் வளர்மதி பதறியபடி.

“செத்திருக்க மாட்டான். ஹெல்மெட் போட்டிருந்தான். அவனோட மோட்டார் சைக்கிள் ரோட்டோரம் சரிஞ்சு கீளே விளுந்தான். எலும்பெல்லாம் நொறுங்கிருக்கும்.” இந்த முறை அவன் விரல்களில் முடிச்சு விடுபட்டு அவிழ்ந்தது.

**__
**__**
** “அவரு ரைட்டரா? அதான் அவரோட சேர்ந்து எமோஷனல் ஆயிட்டியா?” என்று வாசிப்பிலிருந்து தலையை நிமிர்த்தினாள் சங்கீதா. இப்போது லதாவின் முகம் இயல்பாயிருந்தது.

“கொஞ்சம் என்னோட இந்த் மோமெண்டோட ஸ்ட்ரெஸ்ஸைப் புரிசுக்க சங்கீத்”
“சொல்லு”
“இந்தக் கதையையும் சேத்து அவரோட இருபத்தினாலு கதை ஸீரியலா ஷூட் ஆகிக்கிட்டிருக்கு”
“நல்லது தானே”
“அது அவரு சுய நினைவோட இருந்தப்போ எனக்கு ரைட்ஸ் எழுதிக் கொடுத்தது”
“இப்போ என்ன ஆச்சு?”
“ஹீ ஈஸ் அன்டர் ட்ரீட்மென்ட் ஃப்ரம் பெசன்ட் நகர் டாக்டர் சிவராம்”
“ஃபேமஸ் சைக்யியாட்ரிஸ்ட் . எங்க அண்ணனோட ஃப்ரெண்ட்”
“அதான் சங்கீத். ராஜேந்திரனோட ப்ரஸென்ட் ஸ்டேடஸ் என்னன்னு நீ கேட்டு சொல்லணும்”
“டன். ஓகே? உன்னோட ஆக்ட்சுவல் ஸ்ட்ரெஸ் என்ன?”
“எங்க ப்ரெண்ட்ஷிப்பை பிஸினஸ் ஆக்கிட்ட மாதிரி ஒரு கில்டி ஃபீலிங்க்”
“டோன்ட் பீ ஸ்டுபிட்” என்றாள் சங்கீதா.

**__
**__**
** கட்டிலை விட்டு எழுந்தான் ராஜேந்திரன். கட்டில், மேஜை, நாற்காலி இவற்றுக்கும் எனக்கும் இரண்டு கால்கள் மட்டுமே வித்தியாசம். பயனைப் பொருத்து அவற்றிற்கு ஒரு அடையாளம். எனக்கு வேறு அடையாளம். வேண்டுமளவு வீட்டுக்குள் சிறைப்பட இயல்வது மட்டுமே ஒற்றுமை. அதனால் எனக்கும் அவற்றைப் போலவே வீட்டுக்குள் இடம் உண்டு. பயன்பாட்டு அடிப்படையிலான அடையாளத்துள் சிறைப்பட்டால் எங்கேயும் இடம் உண்டு.

பால்கனி கதவைத் திறந்து வெளியே பார்த்தான். தோட்டத்தில் ‘செக்யூரிட்டி’யுடன் வேலைக்காரி பேசிக் கொண்டிருந்தாள். வரவேற்பறைக்கு வந்து வாசற் கதவைத் திறக்க முயன்றான். வெளிப்பக்கமாய்ப் பூட்டியிருந்தது.

திரும்ப அறைக்குள் வந்து மேஜையில் அமர்ந்தான். காகிதங்களை வெகு நேரம் வெறித்துப் பார்த்தபடி இருந்தான். பிறகு எழுத ஆரம்பித்தான்.

தெப்பக் குளத்தில் கடைசிப் படி வரை
இப்போது இறங்க இயலும்
சேறும் சகதியும் எஞ்சின
நடுமண்டபத்தைச் சுற்றி
தவளைகளும் சிறுவர்களும்
துள்ளிக் குதித்திருக்க

**__
**__**
** அசோக் நகர் பூங்காவின் இடைப்பட்ட நடைபாதையில் அனேகர் நடை பயின்று கொண்டிருந்தனர்.

வெங்கடாசலம் பூங்காவைக் கண்களால் துழாவியபடியே உள்ளே நுழைந்தார். இடது பக்கம் உள்ள நடை பாதை வழியாக நடந்தபடியே இருந்தார். திரும்பும் இடத்தில் “வெங்குட்டு ஐயா.வாரும்” என்ற பரிச்சயமான குரல் கேட்டது. ரெங்கசாமியே தான்.

“உமக்காக இடம் பிடிச்சி எவ்வளவு நேரம் சாமி காத்திருக்கிறது?”

“வழக்கமா லேட்டா வருவீர். நான் இடம் புடிப்பேன். இன்னிக்கி என்ன விசேஷம்? கொஞ்சம் தெளிச்சலா இருக்கீரு?”

“விஷயம் இருக்கு வெங்குட்டு ஸார். ஒரு காலத்தில ஆபீஸில ரெக்ரியேஷன் கிளப்புல பாட்டுப் பாடினாக் கிண்டலடிப்பானுங்களே. இப்பம் நான் பாடின பாட்டு டிவியிலே வரப் போவுது”

“கையக் குடும். அப்படி என்ன பாட்டு பாடப் போறீர்?”

“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே. எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே….” பெரியவர் சற்றே உரத்துப் பாட ஆரம்பிக்க, பலரும் திரும்பிப் பார்த்தார்கள்.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *