வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1

This entry is part 24 of 31 in the series 13 அக்டோபர் 2013

Inline image 1 

 (1819-1892) 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

நொடித்துப் போய் நோகச் செய்யும்

நதிகளி லிருந்தும்,

என் தளர்ச்சி நிலையி லிருந்தும்

மீட்சி யில்லை எனக்கு !

அவை யில்லாமல் நான்

எதுவும் இல்லை !

அவை மூலம் உன்னதம்

அடையத் தீர்மானம் செய்தேன்,

மனிதருள் நான்

தனித்து நின்ற போதும்.

என் குரலே ஒருங்கிசைத்து

எதிரொலிக்கும்

ஆண்குறியைப் பாடி !

இனப் பெருக்கத்தைப் பாடி,

தேவை யான

உன்னத சிசுக்கள்  

உருவாக்கும் முறையைப் பாடி,

அவை மூலம்

உன்னத மனிதர் படைக்கும்

உடலுறவுத்

தூண்டலைப் பாடி,

கூடிக் கலந்து,

தடுப்பில்லா மோகத்தில் எனது

படுக்கைத் துணைவியின்

பாட்டைப் பாடி,

எந்த ஒரு மேனிக்கும்

ஒவ்வோர் மனித உடலுக்கும்

உள்ளதோர்

ஒப்புமைக் கவர்ச்சி !

யாராக நீயோ

ஒப்பு நோக்கும் உடம்பு

உன்னுடையது !

தீரா இன்பம் தருவது !

இரவும், பகலும்

பற்களால் கடித்தென்னைத்

தின்பது கவர்ச்சி !

பச்சை உறவு நிமித்தங்கள்

பாதாள உணர்ச்சிகள்,

பாடுகிறேன் நான் அவற்றை !

இதுவரைக் காணாத

எதையோ தேடிச் செல்கிறேன்

பல்லாண்டு களுக்கு முன்பு

ஆழ்ந்து நான்

தேடிய போதினும் !

ஆத்மாவின் மெய்க் கானத்தை

பாடுகிறேன்,

எங்காவது தகுதி யுள்ள

இடத்தில் !

 

++++++++++++++++++++++

 

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6.      http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (October 2, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்புண்ணிய விதைகள் – சிறுகதை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *