வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்தவெளிப் பாட்டு -3)

 

ஆத்மாவின் வெளிப்பயணம்.

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

ஆத்மாவின் வெளிப் பயணம்

இங்கு தான் துவங்குது

வெளிப் பயணத்தைத் தூண்டுவது

உள்ளெழுச்சி தான்.

சக்தி மிக்க

வாசற் கதவுகள் வழியாக,

வெளிவரும் பயணம், தூண்டும்

வினாக்கள்

மூலமா கத்தான் !

ஏனிந்த வேட்கை எழுந்திடும் ?

இருளடைந்த

இந்தச் சிந்தனைகள் 

ஏன் தோன்றும் ?

என்னைச் சுற்றி அருகில்

ஏன் ஆடவர் மாதர்

இருக்கிறார் ?

பரிதி ஒளிக் கதிர்களால்

விரிந்திடும் என் குருதிப் பரிமாணம்.  

என்னை விட்டு அவர்கள்

நீங்கும் போது ஏன்

பாய்மரக் கயிறு போன்ற

என் உவப்பு நாண்கள்

தரை மட்டத் துக்கு மூழ்கிடும்

தொய்ந்து போய் !

இன்னிசைச் சிந்தனைகள்

என்மீது படிய

எனக்கு நிழல் தரா மரங்கள்

எதற்குள்ளன ?

[குளிர், வேனிற் காலங்களில்

அந்த சிந்தனை

தொங்கிடும் அம்மரங்களில்.

கனிகள் சிந்தும்  

கடந்து செல்கையில்]

உடனே நான் பகிர்ந்து

கொள்வ தென்ன

முன்பின் தெரியாதவ ரோடு !

என்னருகில் அமர்ந்திடும்

காரோட்டி யோடு

பகிர்ந்து கொள்வ தென்ன ?

கடற்கரையில்

நடந்து நான் நிற்கையில்

வலை வீசி

மீன் பிடிப்போனிடம்

பகிர்ந்து கொள்வ தென்ன ?

ஓர் மாதுடனும், மனிதனுடனும்

நல்லுற வோடு

சுதந்திரமாய்ப் பழகிவர எனக்கு

உதவி செய்வது எது ?

என்னுடன்

சுதந்திரமாய்ப் பழகி வர

அவருக்கு

உதவி செய்வது எது ?

+++++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

  1. Jayabarathan [jayabarathans@gmail.com] October 2, 2014
Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *