ஒரு தீர்ப்பு

1
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 22 in the series 8 மார்ச் 2015

 

நதியையும் புனித தாய் என்றாய்
நாட்டை தாய் என்றாய்
ஆனால்
தாயை
மொழியை அன்னை என்றாய்
நீ
ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை.
தாய்..
அவள் சிரிப்பும் கண்ணீரும்
உனக்கு அரச்சனைப்பூக்கள் தான்.
அவள் பிரமாண்டமாய் நிற்கிறாள்
ஒரு பெண்ணாக..!
ஆனால் உன் மனைவி எனும்
பெண்ணுக்கு நீ அர்ச்சனை செய்ததையெல்லாம்
அள்ளிக்கூட்டினால்
இந்த ஆகாயமே
சல்லடையாய் கிழிந்து தொங்கும்.
பெண் எனும் கோவில் உன் தாய் ஆனபோது
நீ ஆத்திகன் ஆனாய்.
மனைவி எனும் பெண் கோவில் ஆகும்போது
நீ நாத்திகன் ஆனாய்
ஆணாதிக்கம் என்ற சொல்லும் அலுத்துப்போனது.
டி.என்.ஏ ..ஆர்.என்.ஏ சமன்பாடுகள் சில‌
மாறிப்போனதால்
அவளை நோக்கி உன் கையில்
சாட்டையா?
இன்னும் உயிரியலின் இந்த நுண்கணிதம்
தெரியாத நீ
மிருகமாகவே தான் வலம் வருகிறாய்.
உன் ஆணவத்தை
நீயே “ஆவணப்படுத்தி”க்கொண்டாய்.
உலகம் பூராவும்
உன் கோரைப்பல் பட்டுமே
ஊடக உரிமை எனும்
வெளிச்சத்தில்
குரூரம் காட்டுகிறது.
பரபரப்பு விளம்பரத்தில்
பணம் குவிக்கும் புல்லுருவிகளின்
மகசூலில்
இந்த பெண்மை எனும்
உண்மை மகரந்தங்கள்
வெறும் கொச்சைப்படுத்தப்பட்ட‌
தூசிகளாய்
தூவிக்கிடக்கின்றன.
பெண்மையை அசிங்கப்படுத்திவிட்டு
ஆயிரம் தடவை
“மகளிர் தின”ங்களால்
கழுவிக்கொண்டாலும்
அசுத்தம் மறைவதில்லை.
ஆம்..ஆண்மை
நியாயத்தை நிலை நாட்டுவதில்
“ஆணமையற்று”ப்போன அந்த அசுத்தம்
மறைவதில்லை.
பெண்களின் இந்த‌
வெற்றுப் பொம்மை சமுதாயத்தில்
என்ன உயிர் இருக்கப்போகிறது?
நமது நியாயங்களெல்லாம்
“இருட்டறையில் பிணந்தழீஇய அற்று..”
இதை விட‌
எவனும் கடுமையாய்
தீர்ப்பு சொன்னதில்லை!
=======================
Series Navigationதொடரகம் – நானும் காடும்தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !
author

ருத்ரா

Similar Posts

Comments

  1. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    அன்பார்ந்த “திண்ணை” வாசக நண்பர்களே

    “ஒரு தீர்ப்பு” என்ற என் கவிதையில் முதலில் உள்ள சில (7)வரிகள்
    வரிசை பிறழ்ந்து தட்டச்சில் தடுமாறி விழுந்துள்ளன.அதை திருத்தம்
    செய்து காட்டியிருக்கிறேன்.பிழைக்கு வருந்துகிறேன்.

    அன்புடன் ருத்ரா

    ஒரு தீர்ப்பு
    ===================================================ருத்ரா

    நாட்டை தாய் என்றாய்
    நதியையும் புனித தாய் என்றாய்
    மொழியை அன்னை என்றாய்
    ஆனால்
    தாயை
    நீ
    ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை.

    …………

    ………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *