ஒரு துளி கடல்

This entry is part 20 of 26 in the series 26 ஏப்ரல் 2015


சேயோன் யாழ்வேந்தன்

என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை
என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை
என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை
உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை
உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை
அது ஒரு துளி நீர்தான்
என்றுனக்குப் புரியும்போது
நான் பருகிக்கொள்வேன்
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஇரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *