தூக்கத்தில் தொலைத்தவை

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 23 in the series 21 ஜூன் 2015

சேயோன் யாழ்வேந்தன்

தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை
வீறிட்டழுகிறது
தன் கைக்குக் கிடைத்த ஒன்று
காணாமல் போனதுபோல்
உள்ளங்கைகளைப் பார்த்தபடி
கூப்பாடு போட்டழுகிறது
எதைக் கொடுத்தும்
சமாதானமாகவில்லை
என்ன தொலைத்ததென்று
அதற்குச் சொல்லவும் தெரியவில்லை
தொலைத்தது சுதந்தரமோ என்னமோ?
பெற்ற சுதந்தரத்தைப்
பேணிக் காக்கத் தெரியாத
நானெப்படி உதவுவேன் –
கனவின் இருளில்
கைப்பொருள்தன்னை
தொலைத்த குழந்தைக்கு?
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationதொடுவானம் 73. இன்பச் சுற்றுலாசமூகத்திற்குப் பயன்படும் எழுத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *