Posted in

பிரிவின் சொற்கள்

This entry is part 17 of 19 in the series 31 ஜனவரி 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

விடைபெற்ற கடைசிக் கணத்தில்

ரயில் நகரும்போது கிடைத்த

சொற்ப அவகாசத்தில்

‘திரும்பி வருவேன்’ என்றாய்

எப்போதென்று சொல்லவில்லை

நான் இங்கு வந்து

காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை

தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை.

பிரிவின் கடைசிக் கணங்களில்
பரிமாறப்படும் சொற்கள்

பிரிவை விடத் துயரம் தருகின்றன.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகோணங்கள்English translation of Tamil Naaladiyaar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *