விடை பெறுகிறேன் !

This entry is part 6 of 7 in the series 8 ஜூலை 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++++++++

 

தயவு செய்து எழுப்பாதே என்னை,

நாளைப் பொழுது இரவு வரை !

தாமதம் செய்யேன் நானினி !

இன்றிரவு கழிந்து நாளை

என்றாகும் போது,

விடைபெற்றுக் கொண்டு நான்

வெளியேறுவேன் !

போய் வர்ரேன் !  போய் வர்ரேன்

கண்மணி !

 

உதட்டில் காத்திருக்கும் பாடல்கள்

உணர்ச்சி ஊட்டு மெனக்கு !

ஒளிந்திருக்கும் அவை உள்ளத்தில் !

கையில் கொண்டு வரும் பூங்கொத்தை

கதவருகில்  வைத்துச் செல் !

காத்திருக்கும் ஒருத்திக்கு அதனை

விட்டு வைப்பேன் !

வெகு தூரத்தில் தனித்துப் போன

என் காதலி பாடிக் கொண்டு

என்னை அழைக்கிறாள்

தன்னிடத்துக்கு !

தனித்துப் போன காதலி

பாடி என்னை அழைக்கும் போது,

ஓடிச் செல்ல வேண்டும் நான் !

போய் வர்ரேன் ! போய் வர்ரேன்

கண்மணி !

++++++++++++++++++++

Series Navigationசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்ததுஎழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *