பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 8 in the series 24 மார்ச் 2019

மேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்33. கிழக்கு பாகிஸ்தானின் கேள்வியை தற்போதைக்கு விட்டுவிட்டு இப்போது மேற்கு பாகிஸ்தானுக்கு வருவோம், குறிப்பாக சிந்துவிற்கு. மேற்கு பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு ஒரு லட்சம் பட்டியல் வகுப்பினரை கொண்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் இப்போது முஸ்ஸீமாக மதம் மாற்றப்பட்டுள்ளர். முஸ்ஸீம்களால் கடத்தப்பட்ட பல டஜன் பட்டியல் வகுப்பு சிறுமிகளில் அதிகாரிகளிடம் திரும்ப திரும்ப வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்பு நான்கே நான்கு பேர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகளின் பெயரும் அவர்களை கடத்தியவர்களின் பெயரும் அதிகாரிகளுக்கு தரப்படிருந்தது. கடத்தப்பட்ட பெண்களை மீட்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி கடைசியில் பின்வருமாறு கூறினார், “அவருடைய பணி இந்து சிறுமியரை மீட்பது தான் அவருடைய வேலை எனவும் அச்சூட்ஸ்(பட்டியல் வகுப்பினர்) இந்துக்கள் அல்ல”. சிந்துவிலும் கராச்சியிலும் வாழும் குறைந்த எண்ணிக்கையிலான இந்துக்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கராச்சியிலும் சிந்துவிலும் முஸ்ஸீம்களால் கைப்பற்றப்பட்ட 363 கோயில்கள் மற்றும் குருத்வாராக்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது, அந்த பட்டியலில் இன்னமும் சேர்க்கப்படவேண்டிய கோயில்களும் உள்ளன.

woman-harassed

அதில் சில கோயில்கள், தோல் தைக்கும் இடமாகவும், சில இறைச்சிக்கூடங்களாகவும், சில உணவகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதில் எதையும் இந்துக்கள் திரும்ப பெறவில்லை. எந்த வித முன்னறிப்பு இல்லாமல் இந்துக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வந்த முஸ்ஸீம்களுக்கும் உள்ளூர் முஸ்ஸீம்களுக்கும் தரப்பட்டன. எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவரையில் 200 இல் இருந்து 300 இந்துக்கள் வெளியேற்றக்கூடாதவர்களாக பாதுகாப்பாளரால் நெடுநாள் முன்னரே அறிவிக்கப்பட்டனர். ஆனால் இதுவரையில் அவர்களின் சொத்து ஒருவருக்கு கூட திருப்பி தரப்படவில்லை. கராச்சி பின்சிரபோல் (Pinjirapole, பசு பாதுகாப்பு இடம்) கூட அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி தரப்படவில்லை, அந்த இடம் எப்போதே ஆக்கிரமிக்கப்படக்கூடாத இடமாக அறிவிகப்பட்டுள்ளது. கராச்சியில் இருக்கும் பட்டியல் வகுப்பு தந்தைகளிடம் இருந்தும் கணவன்மாரிடம் இருந்தும் அவர்களின் உறவு சிறுமியரை மீட்டு தர சொல்லி எனக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரண்டாவது தற்காலிக அரசிடம் இந்த புகார்களை எடுத்து சென்றேன். ஆனால் எந்த விளைவும் இல்லை. என்னை மிகவும் வருத்ததிற்கு ஆளாக்கிய செய்தி என்னவென்றால் சிந்துவில் இதுகாரும் இருந்த பட்டியல் வகுப்பினர் இஸ்ஸாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதாகும்.
இந்துக்களுக்கு பாகிஸ்தான் ஒரு சாபம்34. மேல்கண்டவை தான் இந்துக்களைப்பொறுத்தவரை பாகிஸ்தானில் அவர்களின் நிலை என்பதாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் அவர்களில் நாட்டிலேயே எல்லா காரணிகள், செயல்களின் படி நாட்டற்றவர்களாக அவர்களின் வீட்டில் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால் அது மிகையாகாது. இந்து மதத்தை கடைபிடிப்பதை தவிர அவர்கள் செய்த குற்றம் வேறொன்றும் இல்லை. முஸ்ஸீம் தலைவர்களால் பாகிஸ்தான் ஒரு இஸ்ஸாமிய நாடாக ஆகவேண்டும், ஆகும் என்று திரும்ப திரும்ப சூளுரைக்கப்படுகிறது. எல்லாவிதமான உலக சிக்கல்களுக்கும் இஸ்ஸாமே தீர்வு எனும் பரப்புரை செய்யப்படுகிறது. எவ்வாறு முதலாளித்துவமும் சோசிலிசமும் பேசப்படுகிறது அந்த வார்த்தைகளில் நீங்கள் இஸ்ஸாத்தின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றி சர்க்கரை தடவிய வார்த்தைகளில் பேசுகிறீர்கள். ஷரியாவின் படி நடக்கும் முஸ்ஸீம்கள் மட்டுமே ஆளுவோராக இருக்கும் அமைப்பில் இந்துக்களும் மற்ற சிறுபான்மையினரும் விலை கொடுத்து தங்கள் பாதுகாப்பபை வாங்கும் திம்மிக்களாக இருக்கவே முடியும். பிரதமர் அவர்களே மற்ற எல்லாரையும் விட அந்த விலை என்ன என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். நிச்சயமற்ற வெகுகாலமான போராட்டத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இந்துக்களுக்கு அவர்கள் வாழ்வதற்கோ எதிர்காலத்திற்கோ எந்த விதமான இடமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.அவர்களின் எதிர்காலம் மதம் மாற்றப்படுவதிலோ அல்லது அழித்தொழிக்கப்படுவதிலோதான் இருக்கிறது. பெரும்பாலான மேல் வர்க்க இந்துக்களும் அரசியல் நிலை அறிந்த பட்டியல் வகுப்பினரும் கிழக்கு வங்காளத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். பாகிஸ்தானிலேயே தங்கும் சாபத்தை பெற்ற இந்துக்கள், என்னுடைய பயத்தின் படி, கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்ட படி இஸ்ஸாத்திற்கு கட்டாய மதம் மாற்றப்படுவார்கள் அல்லது முழுமையாக அழிக்கப்படுவார்கள். நன்கு படித்த, அனுபவமும் பண்பாடும் உள்ள உங்களைப்போன்ற ஒருவர், மனித சமுதாயத்திற்கே பெரும் தீங்கு விளைவிக்க கூடிய, சமத்துவத்தின் எல்லா விதமான விதகளையும் மீறிய ஒரு கொள்கையை எப்படி முன்னெடுக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது. உங்களுக்கு உங்களின் தொண்டர்களுக்கும் இந்துக்கள் அவர்களின் பிறந்த இடத்திலேயே திம்மிக்களாக நடத்த பயத்தாலோ அல்லது விரும்பியோ அனுமதி தருவார்கள் என நான் சொல்லலாம். இன்று அவர்கள் அப்படி இருக்கலாம், ஏன் அவர்கள் இன்னேரம் சொத்துக்களை பயத்தில் வருத்தத்துடன் விட்டு விட்டார்கள். நாளை அவர்கள், அவர்களின் பிறப்பு உரிமையை கோரலாம். ஆனால் எதிர்காலம் எதை கொண்டுவரும் என யாருக்கு தெரியும்? எப்போது நான் பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பது இந்துக்களுக்கு எந்த வித உதவியையும் கொண்டு வராது என நம்பினேனோ, அப்போது என்னுடைய நல்ல சிந்தனையுடன், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் மனதிலும் வெளிநாடு வாழ் மக்களின் மனதிலும் பாகிஸ்தானில் இந்துக்கள் வாழ்க்கை, சொத்து, மத உரிமை முதலியவற்றில் கவுரவத்துடனும் பாதுக்காப்புடனும் வாழ முடியும் என்ற போலி நம்பிக்கையை உண்டாக்க விரும்பவில்லை. இது இந்துக்களை பற்றியது.
அரசியல் உரிமைகள் முஸ்ஸீம்களுக்கு கூட இல்லை.35. முஸ்ஸீம் லீக் ஆள்பவர்களின் சுற்றத்தாரை தவிரவும், வேலைசெய்யாத அதிகாரிகளின் சுற்றாத்தாராகவும் இல்லாத முஸ்ஸீம்களின் நிலை என்ன? அரசியல் உரிமை என்பதே பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டது. இதற்கு ஆதாரமாக, இவரைவிட சிறந்த முஸ்ஸீம் இந்த உலகத்தில் பல வருடங்களுக்கு இருந்ததில்லை என்று சொல்லப்படும் கான் அப்துல் காபர் கான் இன்  தற்போதைய நிலையும் அவரின் சகோதரரும்வீர தேசப்பற்றாளர் ஆன டாக்டர் கான் சாகிப் அவர்களின் தற்போதைய நிலை என்ன? வடமேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானின் முன்னாளைய முஸ்ஸீம் லீக் தலைவர்கள் இப்போது எந்த வித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருக்கிறார்கள். வங்காளத்தில் முஸ்ஸீம் லிக்குக்கு பெரும் வெற்றிகளை தந்த ஸஹ்ரவர்தி இப்போது பேசுவதற்கும் வெளியே செல்வதற்கும் மேலிடத்தில் உத்தரவு வாங்கும் நிலையில் இருக்கும் சிறைக்கைதி. வங்காளத்தின் பாசத்திற்குரிய தொண்டு கிழவர் என்று சொல்லப்படுவரும் (பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமாக இருந்த) லாகூர் தீர்மானத்தை கொண்டு வந்தரும் ஆன பைசல் ஹக் இப்போது டாக்கா உயர் நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தனியாளாக காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறார், இவைகள் மூலமாக இஸ்ஸாமிய திட்டங்கள் கொடூரமாகவும் இறுதியையும் நோக்கி போயின. கிழக்கு வங்காள முஸ்ஸீம்களை பற்றி குறைவாக சொல்வதே போதுமானது ஆகும். அவர்களுக்கு சுய ஆட்சியும் தனி அதிகாரமும் தருவாத வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கிடைத்தது என்ன? ஒட்டு மொத்த பாகிஸ்தானைவிட அதிக மக்கள் தொகை கொண்டிருந்தும் கிழக்கு வங்காளம் மேற்கு பாகிஸ்தானின் அடிமைநாடாக ஆக்கப்பட்டது. கராச்சியில் இருந்து அனுப்பட்ட ஒரு துணை ஆள், அங்கிருந்து கொண்டு உத்தரவுகளை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். கிழக்கு வங்காள முஸ்ஸீம்கள் உணர்ச்சிப்பெருக்குடன் இஸ்ஸாமிய நாட்டின் புரிந்துகொள்ள முடியாத செயல்பாடுகளின் படியும் ஷரியத்தின் படியும் அப்பம் கிடைக்கும் என்று வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு கல் தான் கிடைத்தது. சிந்துவிலும் பஞ்சாப்பிலும் இருக்கும் முஸ்ஸீம்களுக்கோ இனிப்புகள் கிடைத்தன.

pakistan-condemn-bd-genocide

என்னுடைய வருத்தமான கசப்பான அனுபங்கள்.36 பாகிஸ்தானின் முழுவிவரங்களையும் அது மற்றவர்களுக்கு செய்த கொடும் அநீதிகளையும் விலக்கி பார்க்கையில் என்னுடைய வருத்தமான கசப்பான் அனுபவங்களும் அதை விட குறைவானது இல்லை. உங்களுடைய பிரதமர் பதவியையும் பாராளுமன்ற கட்சி தலைவர் என்ற பதவியையும் கொண்டு என்னிடம் ஒரு அறிக்கை விடும் படி கேட்டீர்கள், அதை நான் கடந்த செப்டமர் 8 ஆம் தேதி வெளியிட்டேன். அந்த அறிக்கை முழுப்பொய்களையும் அதைவிட மோசமான பாதிப்பொய்களையும் கொண்டிருப்பதால் அதை வெளியிட விரும்பவில்லை என உங்களுக்கு தெரியும். உங்கள் அமைச்சரவையில் அமைச்சராக உங்களுக்கு கீழ் பணிபுரியும் வரை உங்களின் வேண்டுகோள்களை மறுப்பது எனக்கு சாத்தியம் இல்லை. ஆனால் என்னால் இனிமேலும் போலியான நம்பிக்கைகளையும் பொய்களையும் கொண்டிருக்க என்னுடைய மனச்சாட்டி மறுப்பதால் என்னுடைய அமைச்சர் பதவியை விட்டு விலகும் கடிதத்தை இப்போது உங்கள் கரங்களில் அளிக்கிறேன், அதை காலதாமமின்றி ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய இஸ்ஸாமிய அரசின் படி நான் வகித்த அமைச்சகத்தை உங்கள் விருப்பப்படி எப்படி தோன்றுகிறதோ அப்படி செய்து கொள்ளலாம்.

உங்கள் நம்பிக்கைக்குரிய

ஜெ. என். மண்டல்
8 அக்டோபர் 1950

Series Navigationபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *