பாதி முடிந்த கவிதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 17 in the series 11 அக்டோபர் 2020

கு.அழகர்சாமி

கீழே

வீழ்ந்து கொண்டே

வெளியின் அகலப் பக்கங்களில்,

காற்று வீசி

அவசரமாய் எழுதும்

சருகின்

பாதி முடிந்த

சாவின்

கவிதை

முழுதும்

எழுதி

முடிவதற்குள்-

சருகு

மண்

சேர்ந்து

கடைசியாய்க்

கண்

மூட

எழுதி

முடிக்க

முடியாது-

மீதியை எழுத முயன்று

முடியாது தோற்றுப் போகும்

என் கவிதை.

கு.அழகர்சாமி

Series Navigationதிரைப்பட வாழ்க்கைபடித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *