ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
கதவு திறந்திருந்தும்
அவன் இன்னும்
உள்ளே போகவில்லை
பயணிக்கிறோம்
என்ற நம்பிக்கையில்
அவன்
அதே புள்ளியில் நிற்கிறான்
இலக்கிய தாகத்தில் அவன்
சில வடிவங்களில்
தன்னை நிரப்பிப் பார்த்தான்
எங்கும் நிலைக்க முடியவில்லை
அவன் மனத்தில்
சில எழுத்துகள் இருக்கின்றன
அவை சொற்களாவதில்லை
சில சொற்கள் இருக்கின்றன
அவை வாக்கியங்களாவதில்லை
சில வாக்கியங்கள் இருந்தும்
அவை கவிதையாவதில்லை
அவன் கோப்பையில் நிரம்பி
விலகிச் செல்லும் காற்றைக்
கவிதையென அவன்
தரிசித்து மகிழ்கிறான்
—– கதவு திறந்திருந்தும்
அவன் இன்னும்
உள்ளே போகவில்லை !
+++++++
- தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய வழிக் கலந்துரையாடல்
- இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது
- மறந்து விடச்சொல்கிறார்கள்
- எனக்கான வெளி – குறுங்கதை
- உப்பு வடை
- ஆசாரப் பூசைப்பெட்டி
- ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன
- கதவு திறந்திருந்தும் …
- ஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்
- அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்
- வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்
- என் அடையாள அட்டைகளைக் காணவில்லை
- கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும்
- ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்
- உறக்கம் துரத்தும் கவிதை