ரோகிணி
வான வெளியில்
இறக்கைகள் நீட்டி
பறக்கும் ஆசைப் பறவையின்
இறக்கைகள் வெட்டப்பட்டு
கீழே விழுந்த போது
ஆரம்பித்தது அந்த
மெல்லிய விசும்பல்கள்…
கனவுகளை கழுவிலேற்றி
கழுவேற்றியவர்கள்
கைதட்டி சிரித்தபோது
அது ஓ வென்று அலறியது..
தாயின் மரணத்தின் போதும்
தவிக்க விட்டுப்போன
காதலியின் வெறுப்பின் போதும், பிரம்மாண்டமாய்
படமெடுத்து ஆடியது…
அது ஓடும் பாதையை
முழுங்கிக்கொண்டு
வேகமாய் ஓடியது,
ஒலிம்பிக் பந்தயத்தில்
ஓடும் வீரனைப் போல….
அதன் பாதையில்
ஒரு ஆறோ குளமோ
இருக்கக்கூடும்…
அதில் தன்விசும்பல்களை
தள்ளி படுகொலை
செயதுவிட்டு நம்பிக்கையோடு
திரும்பிவரும் விரக்தி….
________________________________
தண்டவாளம்
________________
இரும்புச் சக்கரங்களின்
உரசலால் உண்டான
முதுகு வலியைப்
பொறுத்துக்கொண்டு
ரயிலுடன் பயணிக்கிறது
பயணிகளின் பாதுகாப்பிற்காக…
_____________________________
- மலர் தூவிய பாதையில் …
- 4.ஔவையாரும் முருகக் கடவுளும்
- அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!
- யோகம் தரும் யோகா
- விரக்தியின் விசும்பல்கள்
- நானின்றி வேறில்லை
- சிகப்பு புளியங்கா
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்
- பயணங்கள்….
- படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்