சிற்சில

This entry is part 33 of 45 in the series 9 அக்டோபர் 2011


சிற்சில சொல்லாடல்கள்

பிரித்து அறியப்படாமலே
 வாதங்கள் என
மேல்போர்வை கொண்டு
ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன ..
மீட்சி என்னும் சொல்லறியா அவை
தனக்குள் முடங்கி
 “தான் ” விடுத்து..
தர்க்கத்தில்
கலந்து பிணைந்து  பின்னர்
தானாய் கரைந்தும் விடுகின்றன
அவைகளுள் சிலவோ
நீரினடியில் வேர் பிடித்து
தண்டின் வழி உண்டு
எங்காவது  மலர
சேற்றின் அடியில் இன்னும்
சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன
அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை …
ஷம்மி முத்துவேல்
Series NavigationStrangers on a Carகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை
author

ஷம்மி முத்துவேல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *