கவிதை

This entry is part 33 of 45 in the series 26 பிப்ரவரி 2012

எச்சத்தாற்காணப்படும்

உட்கார
உறங்க
களிக்க
இசை பாட
கூடு கட்ட
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்க
உணவுகொடுத்து
பசியாற்றிய
மரம்,
விழுங்கிய
பழத்தின்
விதையை
பிறிதொரு இடத்தில்
எச்சம் வழி
ஊன்றச்செய்த
பறவை.

—————-

உருப்படியான கவிதை

சலவைக்குச்சென்று
திரும்பிய துணிகளில்
போடாத என்
உருப்படியைத்தேடுவது போல
இதழ்களுக்கு அனுப்பாத
என் கவிதைகளை
அதன் பக்கங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

— சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *