author

கம்பரின் ஏரெழுபது

This entry is part 2 of 7 in the series 27 ஏப்ரல் 2025

முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வு துறை, பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1.  ஏரெழுபது  கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான் நினைவுக்கு வரும். ஆனால், கம்பர் தன் கவித் திறமையால் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுவது என்று பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் உழவர்களைப் பற்றியும் உழவுத்தொழிலைப் பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ள ஏரெழுவது என்னும் நூலின் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.  ஏரெழுபது […]

“தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”

This entry is part 1 of 7 in the series 27 ஏப்ரல் 2025

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை  @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி  @ விடாமுயற்சியே வெற்றி  பேச வந்தவரின் ஒலிவாங்கியில் தொடர் சிக்கல் @ பிள்ளையார் சிலை மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார் கைபேசியில் பூசாரி  @ வீட்டைப் பூட்டிய பின் இழுத்து உறுதி செய்தார் பணிக்குச் செல்லும் திருடன் @ பசிக்கும் வயிறு அவசரமாய் சாப்பிட்டான் ஆகாரத்துக்கு முன் மாத்திரை  @ குத்துச்சண்டை வீரர் கதறி கதறி அழுகிறார் சொத்தைப் […]

 தெரிவு

This entry is part 1 of 1 in the series 20 ஏப்ரல் 2025

    சோம. அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் […]

சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 6 of 6 in the series 13 ஏப்ரல் 2025

அன்புடையீர், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.  சொல்வனம் பதிப்புக் குழு இதழைப் படிக்க வலை […]

ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

This entry is part 5 of 6 in the series 13 ஏப்ரல் 2025

சுலோச்சனா அருண் கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre  மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி […]

சந்தி

This entry is part 1 of 6 in the series 13 ஏப்ரல் 2025

சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம்  தவற, சொல் தடுமாற, சொல்லும் பொருளும் மாற்றம் அடைய, சொல் மாறி வரும் நாவில்.  சந்தியில், மனம் பொருந்தா சந்தியில் சந்தி சிரிக்க; சொற்கள் தனித்தனியாக;  சந்தியின்  சந்தியில்  என் சொற்கள். சசிகலா விஸ்வநாதன் சசிகலா விஸ்வநாதன்

 நம்பாதே நீ

This entry is part 2 of 6 in the series 6 ஏப்ரல் 2025

  மீனாட்சி சுந்தரமூர்த்தி.     நகரின் மையப்பகுதியில் வானளாவ வளர்ந்திருந்த அந்த மருத்துவமனை வாயிலில்  சிவப்பு சைரன் ஒலிக்க  வந்து நின்றது  ஆம்புலன்ஸ். காத்திருந்த அந்த வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் . வண்டியிலிருந்தப் பெண்மணியை ஸ்ட்ரெச்சரில் மாற்றிப் படுக்கவைத்து வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.அங்கிருந்த மருத்துவர் ஓடி வந்து பார்த்தார், அந்தப் பெண்ணின் மகளும், மருமகனும் கவலை தேக்கிய முகங்களுடன் நின்றனர். மருத்துவர் , ‘ என்ன ஆச்சு சொல்லுங்க’ ‘டாக்டர் அம்மாவுக்கு  ஒரு வாரமா […]

பழையமுது

This entry is part 3 of 6 in the series 6 ஏப்ரல் 2025

சசிகலா விஸ்வநாதன் நட்சத்திர உணவு விடுதியில், குதிக்கும் மெழுகுவர்த்தியின்  மங்கின ஒளியில், இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில், மெத்தென்ற நுரையிருக்கையில் நான் அமர; பனி வெள்ளை கையுறையுடன்,  வெண் சீருடையில் பணிவுடன் பணியாள் ஒருவன்; பிழிந்து  வைத்த  பழைய சோறு; அலங்கார  பளிங்கு வட்டிலில் வகுந்து வைத்த பச்சை மிளகாய்; சிறு குத்து குச்சிகளுடன்; திருத்தின பச்சை வெங்காய சிதறல் சிறு தாமரையென அலங்காரமாய், பங்குனி வெயிலில், பசித்த வயிற்றில்  இறங்கும்  நேரம் நினைவில்  வரும் […]

அப்படியா?

This entry is part 4 of 6 in the series 6 ஏப்ரல் 2025

ஆர் வத்ஸலா அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை ஆனால் அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லை ஆனால்  அவற்றை வேறொருவர் விமர்சித்தால் எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான் ஆனால்  சில சமயம் அவனுடைய காரணமற்ற கோபங்களை சிறுபிள்ளைத்தனம் என பொறுத்துப் போவேன்  அவன் போன பிறகு ஒரு சந்தேகம் எழுகிறது நான் அவனை காதலித்தேனோ?

மத்தேயு  6 : 3

This entry is part 5 of 6 in the series 6 ஏப்ரல் 2025

சோம. அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் […]