author

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

This entry is part 4 of 11 in the series 1 டிசம்பர் 2024

ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

தொடர் மழை

This entry is part 3 of 11 in the series 1 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க ஏழாவது மாடிக்கு ‘ஸ்விக்கி’ பையன் ஐந்து நட்சத்திரம் வாங்கும் ஆசையில் ‘கார் பார்க்கிங்’ இல் நிற்கும் வாகனங்களை பாதுகாக்க இருமிக் கொண்டே தள்ளுகிறாள் குடியிருப்பின் கீழ்தளத்தில் தேங்கிய தண்ணீரை குடியிருப்பு உரிமையாளர் சங்கத்தால் அதிகார […]

வெற்றியின் தோல்வி

This entry is part 6 of 7 in the series 24 நவம்பர் 2024

சசிகலா விஸ்வநாதன்                கடற்கரை சாலையில் அமைந்த அந்த அரசு அலுவகத்தில் அன்று  பரபரப்பு  கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு முயற்சிகள், வெகு வருட காத்திருப்புகள், அலுப்பூட்டும் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள்; இதை எல்லாம் கடந்து நேர்முகத் தேர்விற்குத் தேர்ச்சியான  இருபது பேர் வந்திருந்தனர். பத்து காலியிடங்களுக்கு இருபது பட்டதாரிகளுக்கிடையே போட்டி. அனுராதா ஆட்டோவில் இருந்து இறங்கின அதே தருணத்தில் தன் அண்ணனோடு கூட வந்து இறங்கிய சத்யாவைக் கண்டு […]

பரிதாபம்

This entry is part 5 of 7 in the series 24 நவம்பர் 2024

              வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப் பரிதாபம் அதன் கண்களில். . அடைக்க இயலாதவர் வாங்கிய கடன்போல வளர்க்க இடமி8ல்லாதவர் வாங்கிய ஜீவன் அது. கன்றுக்குக் கொஞ்சமாவது சுரக்க வேண்டுமெனச் சுவரொட்டியையும் நெகிழியையும் தேடிப் போகிறது நம் தேசத்தில்

ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து

This entry is part 2 of 7 in the series 24 நவம்பர் 2024

வெங்கடேசன் நாராயணசுவாமி (அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் Thinnai இதழின் வழியே இலக்கிய சிந்தனைகளையும் ஆன்மிக விழிப்புணர்வையும் பரப்பும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இணைக்கப்பட்டுள்ள என் சமீபத்திய பணி, “ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து”, ஸ்ரீவேதவ்யாச மகாமுனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம் அடிப்படையில் தமிழ்ப் பாடல்களாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாக எழுந்த பாடல்களாகும். இவ்வடிப்படையில், ராஸக்ரீடை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகளை எடுத்துரைக்கிறது. இது மனித மனதின் காமம் எனும் விகாரமான உணர்ச்சியை வெல்லும் வழிகளை பக்தி மற்றும் சத்சங்கத்தின் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ்

This entry is part 4 of 4 in the series 17 நவம்பர் 2024

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: நேர்காணல் பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல் – நம்பி கட்டுரைகள் கலை கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால் – அருணாசலம் ரமணன் இலக்கியம்/கருத்து மூன்று அறிஞர்கள் – பி.ஏ.கிருஷ்ணன் பிறப்பு எனும் அதிசயம் – மீனாக்ஷி பாலகணேஷ் அறிவியல் வருங்காலப் பாதுகாப்பில் […]

பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்

This entry is part 2 of 4 in the series 17 நவம்பர் 2024

ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

உனது வருகை

This entry is part 3 of 4 in the series 17 நவம்பர் 2024

ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் “அடையாளம் தெரில்ல இல்லெ” “பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ” என திட்ட நினைத்தேன் மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து வைத்த அத்தனை திட்டுகளுடன் அதுவும் ஆவியாக நான் பேச்சற்றுப் போனேன் கண் பார்வை மங்கியதற்கு கண்‌புரையை காரணம் காட்டிக் கொண்டு நிதானமாக பழையபடி பாசம் நிறைந்த சொற்களை சிந்தி விட்டு நீ விடைபெற்றுப் போன […]

பண்பலை

This entry is part 4 of 6 in the series 3 நவம்பர் 2024

அஜய் கௌசிக் ஆன்லைன் வகுப்புகள் முடிந்து அறையினின்று களைப்பும், சற்று கவலையும் கூடிய முகத்தை சுமந்துக்கொண்டு வெளிவந்த தனது பேரன் சுரேனை குழப்பத்துடன் எதிர்கொண்ட ராஜசுப்ரமணியத்திற்கு தோராயமாக 70 வயது இருக்கலாம். உருவ தோற்றத்தில் நடிகர் டெல்லி கணேஷை நினைவுபடுத்தினார். வனத்துறையில் உயரிய பதவி வகித்து ஒய்வு பெற்றவர். தனது பணிநாட்களில் ஒய்வு கிடைக்காதா என்று ஏங்கிய அவருக்கு இந்த பத்து வருட ஒய்வு சலிப்பையே தந்திருந்தது. தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ட்ரான்ஸிஸ்டரில் யாரோ […]