author

திட்டுத் திட்டாக தேங்கிய வனம்.

This entry is part 3 of 8 in the series 20 அக்டோபர் 2024

ரவி அல்லது மேகத்தைப்போர்த்தியபொழுதினில்பெய்திட்ட மழையின்எஞ்சிய துளிகளால்வெள்ளக் காடானாதுபூமிநடக்கும் மரங்களால். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

அடைக்கலம்

This entry is part 1 of 8 in the series 20 அக்டோபர் 2024

சசிகலா விஸ்வநாதன் அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும் அவனை அடைந்து அவலம் நீத்தார். அவர்  தகுதி நோக்கான்; அன்பினால் தன்  தகுதி ஒன்றே தேறுவான் படகோட்டும் குகனும், சுக்ரீவ ராசனும்,   அசுர  விபீடணும், ஒன்றே;அந்தப்  பரமார்த்த  பரபிரும்மத்திற்கு. சிரக்கம்பம் வைத்து இறைஞ்சிய பாஞ்சாலியும்,  ஒன்றுமே கேளாத வறியவன் குசேலனும் கண்ணன் கண்ணுக்கு  ஒன்றே நிகர். பக்த அம்பரீசனும், பிரஹலாத சிறுவனும், உத்தவனும்,  விதுரனும்,  வீட்டுமனும்,அவன் கழலே  நிழல் என்ற கொண்டு  வென்றார் பரமபதம்.

எட்டாங்கரை

This entry is part 8 of 8 in the series 13 அக்டோபர் 2024

பாலன் ராமநாதன் “என்ன மாமா கோயில் திருவிழா நெருங்குது ஊர் கூட்டம் போடலாம்ல”என்றான் கணேசன் ஊர்ல நல்லது கெட்டது எல்லாத்துலயும் முதல் ஆளா நிக்கிறவன் கணேசன் .   “சீக்கிரமா போற்றுவோம் மருமகனே” என்றார் துரைப்பாண்டி .துரைப்பாண்டி ஊர் தலைவர் நல்ல மனிதர் பணம் காசு இல்லாட்டாலும் ஊர் மீது பற்று கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். 25 வருடத்துக்கு முன்னாடி நடந்த கம்மா விறகு வெட்டின பிரச்சனையில் ஊருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்ற வேல்சாமியோடு பையன் அப்பாவைப் […]

கிரிவலம்

This entry is part 6 of 8 in the series 13 அக்டோபர் 2024

கங்காதரன் சுப்ரமணியம் நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் கிரிவலம் போக வேண்டுமென்று. ரொம்ப நாளாக என்றால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக. போய் அருணாச்சலேஸ்வரனையும், உண்ணாமலையையும் தரிசித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை. என்ன காரணமோ தெரியவில்லை, தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டுமே? ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு சித்ராபவுர்ணமியன்று கிரிவலம் போய் வந்த என் நண்பர், அந்த அனுபவத்தை மெய்சிலிர்ப்புடன் விவரித்திருந்தார். அந்த மலை முழுக்க நிலவொளியில் ஜொலித்து, […]

பைத்தான்

This entry is part 5 of 8 in the series 13 அக்டோபர் 2024

சொற்கீரன் என்னைச்சுற்றிக்கொண்டுஇருக்கிறது.ஆனால் என் உள்ளெலும்புகளைஇன்னும் முறிக்கவில்லை.எனக்குள் ஊர்கிறது.என் மூளைச்செதில்களிலுமாஅது பொந்து வைக்கும்?உள்ளிருந்து ஊசிக்குருவிகளைசிறகடிக்கச்செய்கிறது.என் ஒவ்வொரு மயிர்க்கண்களிலும்வெர்ச்சுவல் பிம்பங்களைசமைத்துக்கொட்டுகிறது.சிந்தனைப்பசிக்குசோறு போட‌இந்த ஆயிரம்பேரலல் யுனிவெர்ஸ் தியரியால்முடியுமா?விஞ்ஞானத்தின் பசியேவிஞ்ஞானத்துக்கு உணவு.ஆனால்இந்த அனக்கொண்டாஎன்னை இன்னும் விழுங்கவில்லை.விழுங்க முடியாதுஅதனுடைய இரையாக‌இருப்பது போய்என்னுடைய இரையேஇப்போது இது தான்.அறிவுக்குஆயிரம் திசைகளிலும்வேர்!

லயப்புரிதலின்கரைதல்

This entry is part [part not set] of 8 in the series 13 அக்டோபர் 2024

ரவி அல்லது முளைத்துக்கிடந்த அறிவுச் செடிகள் வறண்ட நிலமென கொள்ள வைத்தது கொஞ்சம் காகிதக் குப்பைகளை கையில் திணித்து. பிரபஞ்சம் யாவருக்கும் பொதுவென பொருள் கொண்ட பொழுதும் பெரு மதிப்புக் கருணையைக் காணவே இல்லை உதிர்ந்த சொற்களைத்தவிர. மரபணுவில் பொதிந்த மாறிடாத அன்பை இழந்த தருணமொன்றில் சிலையெனத்தான் வாய்த்தது மலர்தலின் உதிர்தலென. நகலென நாற்புறமோடிய பிள்ளையின் குறும்பினை பேருவகையாக ரசித்தபொழுது நோவினையொன்றிக்காக வழிந்தோடும் கண்ணீர் கடந்த வாழ்வில் புதிதினும் புதிதுதாம். யாவினும் வியத்தலாக நோவினையை எப்புறம் காண்கிலும் […]

கலைந்த கனவு.

This entry is part 2 of 8 in the series 13 அக்டோபர் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                          பனி படர்ந்த  குன்றுகளின் அருகிலிருந்த அடர்ந்த அந்த வனப்பகுதியில் கோபாலனின் கார் விரைந்துகொண்டிருந்தது. பெரிய வேன் ஒன்றும் உடன் வந்தது. வனத்தில் அவரது குலதெய்வக் கோவில் உள்ளது, வருடம் தவறாமல் சொந்தங்களோடு அங்கு வந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி படையலிடுவது அவரது வழக்கம். அம்மா  இருந்த வரையில் தவறாமல் நினைவூட்டுவாள். தைமாதத்தில் இங்கு வந்து விடுவார்கள். தொண்ணூற்றைந்து  வயது வரை அவளது வழிகாட்டலில் பூஜைகள் நடந்து வந்தது. அவள் […]

நீளும் நீர் சாலை

This entry is part 1 of 8 in the series 13 அக்டோபர் 2024

வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம்   கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு   சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]

மோனச் சிதைவு.

This entry is part 5 of 5 in the series 6 அக்டோபர் 2024

ரவி அல்லது எனக்குள் இருக்கும்உன் வார்த்தைகளுக்குசிறகுகள் முளைக்கிறதுதிடீரெனகாத்த மௌன இடைவெளியில். திசைக்கொன்றாகபறப்பதில்கலைப்பு மேலிடுகிறதுஆசுவாசங்கொள்ளஅருகாமையைஎதிர் நோக்கியதாகஅன்றாடங்கள்வெறுமையை மென்று. வாய்த்திருக்கும்தனிமைப் பாடில்இருப்பவைகள்யாவும் நேற்றுசொர்க்கமென சுகம்காண வைத்தவைகள்தான். வாசனையற்றவாழ்க்கைஉழல வைக்கிறது.நோதலின்நரகத்தில்விடியலுக்கானவரவின்வேண்டலாகஎஞ்சியிருக்கும்தெம்பில்இந்தஉயிர்எப்பொழுதும்உன் திசை நோக்கியத் தவத்தில். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

ஒரு காதலின் நன்னம்பிக்கை முனை

This entry is part 4 of 5 in the series 6 அக்டோபர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா யமுனா தீரத்தில், ஆங்கோர் தோப்பிலோர் மரத்தடியில் யமுனைத்துறைவன் தன் காதலியைத் தேடிக் களைத்த முகத்துடன் தன் நெஞ்சமதில் பொங்கியெழும் காதலைத் தன் கண்களில் தேக்கி பேசவொண்ணாது அமர்ந்திருக்க, அதைக் கண்ட ராதையின் தோழி அவனருகில் சென்று பின்வருமாறு கூறலானாள்: (1) “மாறனின் கூர் மலர்க்கணைகள் மருட்டும் மங்கையவளை மாறகோடி ஈஶனாம் நீயே காக்கவல்லாய். உன்னையே உள்கி உருகி உன் நினைவாய் எப்போதும் உணர்ச்சிகளால் உவகையுற்று புறவுலகில் உன்னைக் காண ஏங்கியுன் பிரிவாலுழலும் உன் பிரியை […]