author

பெருந்திணை மெய்யழகா?

This entry is part 3 of 5 in the series 6 அக்டோபர் 2024

சோம. அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு […]

வேலிகளற்றலும் பூக்கும்.

This entry is part 2 of 5 in the series 6 அக்டோபர் 2024

ரவி அல்லது குடிசையில்பூத்திருந்ததுஅழகெனவாசனைப்பூயாவரையும்ஈர்த்து.வேலிகளற்றாலும்முட்களின்நம்பிக்கையில்தான் இருக்கிறதுநிறைவாகஉயிர்த்து.

அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்

This entry is part 4 of 4 in the series 29 செப்டம்பர் 2024

ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக வானம் பார்த்த தரிசு நிலத்தில் நின்றாடும் தண்ணீரின் நித்தியங்கள் யாவும் அய்யாவின் இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில் நின்ற நீர் ஒப்படியாகவே அமைந்து நெகிழ்வில் நாற்றுகளைப் பற்ற இஞ்சாமல் தயாராக இருந்தது. இயந்திர இத்யாதிகளற்ற நாளில் வாரங்களைக் கடந்து வாழ்க்கையே சகதியாக தோல் இறுக்கி இன்று போலல்லாமல் தாளடி நடவு சாகுபடிகள் தாங்கொணா துயரங்கள் […]

ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு

This entry is part 2 of 4 in the series 29 செப்டம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும்,  மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள் ஏங்கியே தவித்தனரே! [ஶ்ரீம.பா.10.32.2] பட்டுப் பீதாம்பரமுடுத்தி பன்மலர் வனமாலையணிந்து பங்கயத் திருமுகம் தன்னில் மோஹனப் புன்னகை மிளிர மன்மதன் மயங்கும் மாறகோடி ஸுந்தரனாய் மதுஸூதனன் அவர்கள் முன்னே தோன்றினாரே! [ஶ்ரீம.பா.10.32.3] பிரிந்த உயிர் திரும்பி வர மிக உவகையுடன் வரவேற்கும் விறைத்தவுடல் போல் அருளால் ஆருயிர் […]

தெறிப்பு

This entry is part 1 of 4 in the series 29 செப்டம்பர் 2024

பென்னேசன் வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு?  எதுக்குக் கிளம்பறே?  சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா.  நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே சொல்லிட்டுப் போனா அவருக்கும் ஒரு சமாதானமா இருக்கும் இல்லை.  வர்ற நேரம்தான்.  பார்த்துட்டே போயிடேன்’ என்று அவனை நிறுத்திப் பார்த்தாள் கல்பனா சித்தி.  வரதனுக்கு அங்கிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இருந்தது.  தான் வந்தபோது சித்தப்பா இல்லாமல் போனதே நல்லது.  இருந்திருந்தால் முதல் காரியமாக அவனுடைய அழைப்பையே படுகேவலமாக உதாசீனப்படுத்தி இருப்பார்.  “அன்னிக்கு […]

ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு

This entry is part 7 of 7 in the series 22 செப்டம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் போல் தவியாய் தவித்து நின்றனரே! [ஶ்ரீம.பா.10.30.2] திருமகள்கேள்வனின் பீடுநடை, காதல் ததும்புமின் முறுவல், சுழன்று வீசும் கடைக்கண்ணாடல், உள்ளங்கவர் உவகைமிகு சொல்லாடல் முதலிய திருவிளையாடல்களால் தங்களையே பறிகொடுத்து, மனதால் அவனையே வரித்து, அவனாகவே மாறி, அவனது லீலைகளை அப்படியே நடித்தும் ஆடியும் பாடியும் ஆனந்தித்தனர் கோபியரே! [ஶ்ரீம.பா.10.30.3] தமதன்பனாம் அச்சுதனின் நடையுடை பாவனை, புன்னகை, […]

மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்

This entry is part 4 of 7 in the series 22 செப்டம்பர் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி.                      பாட்டும் தொகையுமான  சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம்  இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் தலைவன் நன்னன் வேண்மாள். பாடியவர் இரண்ய முட்டத்துப்  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். திணை பாடாண் ,துறை ஆற்றுப்படை.. ஆசிரியப்பாவால் ஆனது . தன் வறுமை தீர வள்ளல் ஒருவனை நாடிப் பாடிப் பரிசில் பெற்று வரும் கூத்தர் , தன் எதிர்ப்படும் இரவலனை அந்த வள்ளலிடம் செல்ல விடுப்பது ஆற்றுப்படை  என்பதாகும். அவ்வகையில். தன் வறுமை […]

தீராக் கடன்.

This entry is part 3 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ரவி அல்லது யாவும் கடந்துஆசுவாசத்திற்குள்தள்ளபட்ட பாடுகளின்விசும்பலில்அம்மாவிற்குஇன்னும்கொஞ்சம்இந்த வாழ்வுகருணை காட்டி இருக்கலாம்பழஞ்சேலையின் கிழிசல்களைதைக்கும்நிலைதாண்டும் பொழுதினில்அழைக்காமல். -ரவி அல்லது.

கண்ணுசாமியும் காத்தவராயனும்

This entry is part 2 of 7 in the series 22 செப்டம்பர் 2024

கங்காதரன் சுப்ரமணியம் கண்ணுசாமி, குமார், சீனு, ராமானுஜம், முரளி இவர்கள் அனைவரும் பள்ளியில் ஆறாம் கிளாஸ்ஸிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கண்ணுசாமி இன்று குடும்ப பிஸினஸை நடத்தி வருகிறார். மற்றவர்கள் தனியார் கம்பெனி, பேங்க்  என்று வெவ்வேறு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அனைவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள்; பேரன், பேத்திகளை எடுத்து வாழ்கையில் தங்களுடைய கடமைகளை முடித்து விட்டவர்கள். இதில் கண்ணுசாமியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிளாஸில் கடைசி பெஞ்ச்சில் தான் உட்காருவார். தான் ஒருவரையும் […]