சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் […]
ஹிந்தியில் : வினோத் பத்ரஜ் தமிழில் : வசந்ததீபன் __________________________ எனது கையில் ஒரு கடிதம் இருக்கிறது உள் நாட்டுக் கடிதம் அதன் மீது என்னுடைய முப்பது வருட பழைய முகவரி எழுதப்பட்டு இருக்கிறது ஆ..! அந்த கையெழுத்தில்… அந்த கையெழுத்தின் அனைத்துக் கடிதங்களை நான் கிழித்துப் போட்டேன் எரித்துப் போட்டேன் தூரக் கொட்டினேன் துச்சமான வாழ்வை பாதிப்பில்லாமல் ஆக்குவதற்காக… ஆனால் தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தது இது , ஏனெனில் ஒருவேளை எப்போது இது கிடைக்கலாம் என்று அக்கம்பக்கம் இருந்து கொண்டிருக்கலாம் […]
சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான் விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில் பட்டு தெறிக்கும் பந்து போல்… பொங்கும் பால் மேல் தெளி நீர் என…மறையும் மாயம்… அவற்றை நான் நன்றாக புரிந்தேபுறங்கையால் தள்ளிவிடுகிறேன்! உள் மனம் கசிந்துஊசி முனையால்குத்தும் வலி; எனக்குஎன நினைத்து நீ மகிழலாம். தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல் ஏன்? நான் […]
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ___________ நதிகள் இருந்தன எமது வழியில் அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன. ஒரு சூரியன் இருந்தது அது மூழ்காமல் இருந்தது எப்படி யோசித்து இருக்கிறாய் ? அதற்குப் பிறகு… நமக்கு என்ன நடக்கும் என்று. ஒரு காடு இருந்தது நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது கொஞ்சம் பூக்கள் இருந்தன நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம். ஒரு வயல் இருந்தது நெல்லினுடையது விளைந்து இருந்தது அது […]
தமிழில் : வசந்ததீபன் (1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை…. _____________________________________ அவைகள் இருப்பதில்லை உடன் செல்வதற்காக. அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன. அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும் முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன அவைகள் மட்டும் இங்கே சந்தோஷம் கொண்டு பெறுகின்றன என அவைகள் ஏதாவதொரு இருதயத்தில் இருக்கின்றன என அவைகள் ஏதாவதொரு மூளையில் இருக்கின்றன என யாரோ ஒருவன் அவற்றின் நினைவுகளை நெய்கிறான் என யாரோ ஒருவர் அவற்றிற்காக […]
ஆர் வத்ஸலா உண்மை! உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது அளவிலா துன்பம், சொல்லொணா சோர்வு இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை… ஓ! அது பிரமை தான்! பாரேன்! நான் எழுந்து விட்டேன் – தஞ்சாவூர் செட்டியார் பொம்மை போல! நீ போ, அப்பா! உன் மனதாழத்தில் துளி குற்ற உணர்வு இருந்தால் அதனையும் துடைத்தெறிந்து விட்டு போ போ அளவற்ற காதலின் மதிப்பை அறியாமலேயே
சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான் விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில் பட்டு தெறிக்கும் பந்து போல்… பொங்கும் பால் மேல் தெளி நீர் என…மறையும் மாயம்… அவற்றை நான் நன்றாக புரிந்தேபுறங்கையால் தள்ளிவிடுகிறேன்! உள் மனம் கசிந்துஊசி முனையால்குத்தும் வலி; எனக்குஎன நினைத்து நீ மகிழலாம். தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல் ஏன்? நான் […]
ஆர் வத்ஸலா எனக்குள்ளது ஒரு துன்பம் என உன்னிடம் நான் சொல்லிக் கொண்டேன் உனக்கு துன்பமே இல்லை என நான் கருதுவதாக அர்த்தம் செய்துக் கொண்டு கோபித்தாய் நீ உன்னிடம் என் துன்பத்தைச் சொல்லி ஆற்றிக் கொள்ள எண்ணியது மட்டுமல்ல உன்னை எனக்கு உற்றவனாகக் கருதியதே தவறு என புரிந்து விட்டது
சோம. அழகு வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]