author

அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்.

This entry is part 1 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ரவி அல்லது சகதியின்சேறு வாடையில்அய்யாவின்கால் தடங்களில்மூழ்கிய மனம்உழுவதற்குவிலா கோலியது. முற்புதர்கள் மண்டிமுகடுகளாகவானம் பார்த்ததரிசு நிலத்தில்நின்றாடும்தண்ணீரின்நித்தியங்கள்யாவும்அய்யாவின்இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில்நின்ற நீர்ஒப்படியாகவேஅமைந்துநெகிழ்வில்நாற்றுகளைப் பற்றஇஞ்சாமல்தயாராக இருந்தது. இயந்திர இத்யாதிகளற்ற நாளில்வாரங்களைக் கடந்துவாழ்க்கையே சகதியாகதோல் இறுக்கிஇன்று போலல்லாமல்தாளடி நடவுசாகுபடிகள்தாங்கொணாதுயரங்கள்தந்தது. அந்தி சாயும்நேரத்திற்குள்வயல்கள்யாவும்பச்சையாடை போர்த்தியபாங்கில்கழித்துச் செதுக்கியவரப்புகளில்நடக்கும் பொழுதுஉள்ளம் மகிழ்வில்உருமாறி திளைத்தது. புல்லொன்றில்கிடந்தசோற்றுப் பருக்கையைபொறுக்கி எடுத்துவிழுங்கிய பொழுதின்வியாபித்த பதறலில் எனக்குள் ஒலித்த‘ஒற்றைப் பருக்கையிலும்உழவனின்உயிர் இருக்கிறது’என்றஅய்யாவின் குரல்அறுவடைகள் செய்ய முடியாதநெற்பயிராகநெஞ்சுக்குள்நெடு நாட்கள்கடந்த பொழுதும்வாழிப்பாகவளர்கிறது. -ரவி அல்லது.பிகு:கண்டு முதல்: லாபம்.விலா கோலுதல்:ஏர் ஓட்டும் பொழுது சிறிய சிறிய […]

விடுதலை

This entry is part 4 of 4 in the series 15 செப்டம்பர் 2024

கங்காதரன் சுப்ரமணியம் நான் அந்த பெண்மணியை முதன்முதலாக சந்தித்தது எங்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே இருந்த காய்கறிக்கடையில் தான். அடுத்த சில நாட்களுக்கு வேண்டிய காய்கறிகள், பழங்களை வாங்கிய பின், மொபைல் ஃபோனை எடுக்க ஜோல்னா பைக்குள் கையை விட்டு துழாவிய போதுதான், வீட்டிலேயே மறந்து வைத்து வந்தது தெரிந்தது. கூகுள்பே, பேடீயெம் என்று வசதிகள் வந்தபின், பர்ஸை எடுத்துக் கொண்டு வரும் பழக்கம் அறவே போய்விட்டது. சில்லறைக்கு அலைய வேண்டியதில்லை, பாருங்கள். என்னுடைய நிலமையைப் புரிந்து கொண்ட […]

கற்றவர் அவையில் கல்லாதவர் அரங்கேற்றமா?

This entry is part [part not set] of 4 in the series 15 செப்டம்பர் 2024

கோ. மன்றவாணன் திருக்குறளில் உள்ள கல்லாமை அதிகாரத்தில் ஒரு குறள் : கல்லா தவரும் நனி நல்லர், கற்றவர்முன் சொல்லாது இருக்கப் பெறின். கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்பதுதான் இந்தக் குறளின் பொருள். பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையும் இதுதான்.  கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்றால், கல்லாதவர்கள் கெட்டவர்களா என்றோர் உள் கேள்வி எழுகிறது. கல்லாதவர்களும் என்ற சொல்லில் வருகிற உம்மின் அழுத்தத்தைக் கவனியுங்கள். ஒருவர் படிக்கவில்லை என்றால்… கற்கவில்லை […]

கஞ்சி வாடை

This entry is part 1 of 4 in the series 15 செப்டம்பர் 2024

ரவி அல்லது கொளுந்துவிட்டுஎரியும்அடுப்பில்வெந்துகொண்டிருந்ததுபசி. குளிர்ந்த நீர்வயிற்றுக்குள்சூடாகியதற்குபெரும் காரணம்தேவையில்லைஅடுப்புஎரிவதைத் தவிர. புத்தகத்தில்சுருண்டுக்கிடந்தபிள்ளைமதியம் மண்ணில் விழுந்தசாதத்தைசாப்பிட்டிருக்க வேண்டுமெனநினைத்தவாறுஒழுகும்எச்சிலால்காகிதத்தை நனைத்து.வருவது தூக்கமாமயக்கமாவெனதெரியாமலையேகிடந்தது. தட்டியை விளக்கிவெளிவந்தஅம்மாகுப்புறக் கிடக்கும்கணவனைத் தெரியதவாறுகதவுத் தட்டியை மூடிபிள்ளையைஎழுப்ப வேண்டுமென்றபெருங் கவலையோடுஅவசரமாகஅடுப்படிக்குப் போனாள். சோறாகாமல்கூழான கஞ்சிக்குவருத்தப்படும்அம்மா.வாஞ்சையோடுஅணைத்துமுத்தம் கொடுக்கும்போதுஇன்றும்சாராய வாடைவராமலிருந்தால்தேவலாமெனகனவு கண்டதுபிள்ளைகுமட்டும் கொடுமையிலிருந்துதப்பிக்க.வடிக்காத கஞ்சிவாடையைமுகர்ந்தவாறு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

சிறுகதை ஒன்றை வாசித்தேன்!

This entry is part 4 of 6 in the series 8 செப்டம்பர் 2024

கலைவாணன் கணேசன் ஓர் இலக்கிய விமர்சகரிடம் ஒருவர் கேட்டார்: “இக்கவிதையில் அது  சரியில்லை! இது சரியில்லை! என்று சொல்கிறாயே, உன்னால் ஒரு கவிதை எழுத முடியுமா ?” அவர் சொன்னார்: “ஒரு நாற்காலி செய்ய ஆர்டர் கொடுத்தேன். தச்சர் செய்து கொண்டு வந்தார்.  அதை நான் பார்த்து, நாற்காலி சரியாக நிற்கவில்லையே! கால்களை சரியாக அளந்துதான் வைத்தாயா ? என்றவுடன் தச்சர் அதை சரி செய்துதர எடுத்து சென்று விட்டார். தச்சர் “நீயே செய்து கொள்ளவேண்டியதுதானே? என்று […]

யாவிற்குமான பொழிதல்.

This entry is part 3 of 6 in the series 8 செப்டம்பர் 2024

ரவி அல்லது.  சூழும் கருமேகம்  விரைந்தோட வைத்தது யாவையும் அதனதன் காரணங்களுக்கு அச்சம் மேலிட.  பொழிந்து விடும் கன மழைக்கான குளிர் காற்றை வெளியிலிருப்பவர்கள் ரசிப்பதாக இல்லை குளிர்மை கூடியிருந்தாலும். வீழ்ந்து கிடக்கும் விவசாயிகள் சாலையோரம் தானியங்களை கூட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள் ரவறண்ட வாழ்க்கையில் ஈரப்பதமற்று கண்டு முதலாக்கிவிட.  இரை  எடுத்துச்சென்ற ஏதோவொன்று தவறவிட்ட தட்டைக்கார மீனை சேமிப்பாக்கிக் கொண்டிருந்தது சிற்றெறும்புகள் நிதானமாக.  பிய்தெடுத்த சதைகளற்ற முள் கூடு வசீகர அழகு கூட்டியது மழைக் கணத்தை மறக்க […]

அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்.

This entry is part 5 of 6 in the series 8 செப்டம்பர் 2024

குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் […]

மேவிய அன்பில் திளைக்கும் கருணை

This entry is part 1 of 6 in the series 8 செப்டம்பர் 2024

ரவி அல்லது கைகளசைத்தஇடப்பக்கம் நின்றுருந்தஇரு சிறுவர்களின்கையிலிருந்ததுஇனிப்பாக இருக்குமெனநினைத்தேன்.வேகமாகவாகனத்தில்வந்தபொழுதுஅவதானிக்க தவறியதால். கூப்பிடு தூரத்தைகடந்துவிட்ட போதும்திரும்ப நினைத்ததுபிறந்த நாளுக்குஇனிப்பு கொடுக்கநினைத்திருக்கும்.அவர்களின் அறச் சிந்தனையைஉதாசீனம் செய்யலாகாது.ஆட்களைப் பார்த்துவருவது இல்லைஅறமென்பதனால். முன்பொரு முறைசுட்டெரிக்கும் வெயிலின்மதியப்பொழுதில்கல்லூரி மாணவர்கள்கரும்பு பானம்வாங்கிக் கொடுத்தார்கள்தாகத்தணிதலாககடந்து செல்கிறவர்களுக்கு.பிறந்த நாளுக்கென்றுசொன்னாலும்கைபேசியின்விருப்பு எண்ணிக்கை கூடலின்ஆசையென்பதைமறுக்கவியலாதுநற்பயனாகவந்தவர்களின்உள்ளம் குளிர்ந்தாலும். திரும்பிச் சென்றபிறகுதான்தெரிந்தது.வீதியோரவழிபாட்டு பாடல்களால்விளைந்ததுஇச் சிறுவர்களின்மகிழ்ச்சி பொழுதுகளென்பதுநம்பிக்கையைபாலத்தின் திண்டில் வைத்துபூக்கள் தூவி இருந்ததால். மீச்சிறுநிகழ்வு கூடஆழப் புரிதலுக்குள்தள்ளுகிறது.புறங்களை மறக்கவைக்கும் படியாக.வீதியோரங்களில்விண்ணதிரபாடல்கள் ஒலித்தாலும்சிந்தயைச்சிதைக்காத பயணமாகவாய்க்கிறது. இப்போதெல்லாம்யாவரின்மீதான கரிசனமாக. பிறகொரு நாள்வரும்பிறந்த நாளில்பிரித்து எடுத்துக்கொள்ளுங்களெனஐம்பது ரூபாய் கொடுத்தேன்ஆதுரச் சிரிப்பில்.‘டேய்…ஆளுக்கு இருபத்தஞ்சிடா’ […]

மன்னிப்பு

பென்னேசன்            இதுவரை ஐந்து முறை   வாட்ஸாப் அழைப்பை நிகராகரித்து விட்டான் ருக்மாங்கதன். இப்போது ஆறாவது முறையாக மீண்டும் அழைப்பு. ஒலிப்பானை அமைதிப்படுத்தியிருந்தாலும் தொலைபேசித் திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அமைதியானது. நிச்சயம் மெசேஜ் அனுப்பியிருப்பான் மாங்கேலால்.  இடது பக்கத்து இருக்கைக்காரன் படம் பார்க்கும் சுவாரசியத்தில் இந்தத் தொந்தரவைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மஞ்சுளாவின் உச்சுக் கொட்டும் சத்தம் அதிகரித்து வந்தது.  அவன் பக்கம் சாய்ந்து காதில் கிசுகிசுத்தாள். “இதோ பாரு ருக்கு உனக்கு சினிமா எல்லாம் பிராப்தம் […]

கோமா

ஜீயெஸ் வானத்தின் இருளை இரண்டாகக் கிழித்துக் கொண்டு,  பல கிகாவாட் சக்தியோடு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை  தாக்கியது அந்த மின்னல். தொடர்ந்து, காதை பிளக்கும் ஓசையுடன் பாறாங்கற்களை உருட்டி விட்டாற்போல இடியும் இறங்கியது. அந்த உக்கிரசக்தியை தாங்க முடியாமல் அந்த ஹாஸ்பிடலில் இருந்த பல கோடி மதிப்புள்ள நவீன சாதனங்கள் சேதமடைந்தன. ஹாஸ்பிடல் முழுவதும் இருளில் மூழ்கியது. அந்த சமயம் இன்னொரு சம்பவமும் அங்கு நடந்தது. அந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் மாடி அறை ஒன்றில் மானிட்டருடன் […]