காலமும் கணங்களும் : இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் ! முருகபூபதி பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள். தேநீரின் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இனிய இசையொலி மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.பளீரென ஒளிவெள்ளம் பரவாமல், இதமாக மெல்லிய விளக்கொளி தவழ்ந்து கொண்டிருந்தது.முகப்பில் செயற்கை நீரூற்று, நான்கு புறமும் நான்கு மயில்கள் நீரை உமிழ்ந்துகொண்டிருந்தன. நடுவில் ஒயிலாக மணிமுடி தரித்த வெண்சிறகுத் […]
வெங்கடேசன் நாராயணசாமி யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர் வல்லினரொடு வானளாவி வியந்து வேணு காணமதில் மயங்கி காமன் கணையொறுத்த சித்தம் கலங்கி வெள்கி அரையிடை அழுக்காடை அவிழ்வதையும் அறியாதசையா நின்றனரே! [ஶ்ரீம.பா.10.35.4,5] நங்கைமீர்காள்! இந்நந்தகுமாரர் நலிந்தோர்க்கு நலம்பல செய்து தேற்றும் வெண்முத்துச்சர சிரிப்பழகர், […]
சோம. அழகு ‘வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது!’ என்று கவித்துவமாக சிலர் கூறக் கேட்டு ‘ரசித்து மகிழ்ந்த’ காலம் சமீபமாகக் கானல் நீராகத் தெரிகிறது. இப்போதெல்லாம் இது போன்ற வாக்கியங்கள் உடனடியாக சில முகங்களை அகக்கண் முன் கொண்டு வந்து ‘பரந்து கெடுக…!’ என சபிக்கப் பணிக்கிறது. ‘இவருக்கா இப்படி?’ எனத் தோன்ற வைக்குமே? அவ்வகை முகங்கள். இக்கேள்விக்கு இரு தொனிகள் உண்டு. ‘கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட இவருக்கு வந்த வாழ்வைப் பாரேன். […]
வெங்கடேசன் நாராயணசாமி கோபிகைகளின் இனிய கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா. 10.31.1] வெல்க இவ்விரஜ பூமி இங்கு நீர் பிறந்ததால் தங்கினாள் திருமகள் இங்கு நிரந்தரமாக. உம்மிடமே உயிரை வைத்து உம்மையே சாரும் உன்னடியார் உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம் உற்று பாரும் அன்பரே! [ஶ்ரீம.பா. 10.31.2] குதிர்காலக் குளத்தில் பூத்த பங்கயத்தைப் பழிக்கும் செங்கமலக் கண்ணா! வரதா! கூலியில்லாக் கொத்தடிமைகள் எம்மை கொல்லாமல் கொல்கிறாயே நின் கடைக்கண் பார்வையாலே எமதன்புக் காதலா! [ஶ்ரீம.பா. 10.31.3] யமுனையின் […]
வெங்கடேசன் நாராயணசாமி ஒரு கூட்டில் சிறு பறவையாகப் பிறந்தேன். அன்பின் இழைகளாலும், பாதுகாப்பின் கிளைகளாலும் பின்னப்பட்ட கூடு. இவ்வாறே வாழ்வின் பரந்த வலிமைமிக்க மரத்தில் வளர்ந்தேன். நோய்ப் பாம்புகள் மற்றும் விதிக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பாக வளர்ந்தேன். ஆகாயத்திலிருந்து மரத்திற்கும், மரத்திலிருந்து ஆகாயத்திற்குமாகப் பறந்து பறந்து வளர்ந்தேன். மரத்தின் இனிமையான பழங்களை உண்டு நான் விரைவில் வளர்ந்தேன். விழைவு மற்றும் ஆசையின் சிறகுகள் என்னை விசும்பெனும் வாழ்வில் பறக்க உதவின. நான் காட்டின் பிற பகுதிகளுக்குப் பறந்தேன் – […]
சசிகலா விஸ்வநாதன் தரையில்விழுந்தவளை தாங்கியது பல கரங்கள். கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது ஒரு செய்தி. நாளை அடுக்களை வேலை, எனக்கா? அலுப்புடன்! மருத்துவர் என்ன செலவு சொல்கிறாரோ? அச்சம்! என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்? ஆயாசம்! பேசாமல் படு; இரண்டு நாள்கள்!கனிவு! என் கரம் பற்றியது; எந்தக் கரத்தை? சசிகலா விஸ்வநாதன்
முதல் சந்திப்பு : எங்கிருந்தாலும் சோர்ந்துவிடாமல் அயராமல் இயங்கும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் ! கற்றதையும் பெற்றதையும் சிந்தனை வடிவில் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் ! ! முருகபூபதி “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் “ என்ற சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது. 1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் எனக்கு நண்பர்கள் உருவானார்கள். அவ்வாறு 1975 இல் […]
ரவி அல்லது பறித்தாலும் பழகாத அறம். அவர்கள் ஏற்படுத்திய வலிகள் இருக்கிறது தழும்புகளாக வெறுப்புகள் சூழ. தண்ணீர் விடாமல் தவிக்கவிட்ட ஆற்றாமை அடங்கவே இல்லை இப்பொழுதும். மேலூட்டமிடாத கலைப்பு தருகிறது மேனி வாடுமாறு. அனவரத ரணத்திலும் பூத்தலை நிறுத்தவே முடியவில்லை இச்செடிகளால் யாவுமதன் இயல்பில் இருப்பதால். *** எதிர்பாராதது. பார்வை தூரத்தில் பலரிடம் கையேந்தி வரும் முக்காடிட்ட கிழவிக்கு நான் உதவிட காத்து நிற்கிறேனென்பது தெரியாது இலக்கு நானாக இல்லாமல் இருப்பதால். அதன் புறக் கணிப்புகள் தாண்டி […]
விஜயலட்சுமி கண்ணன் கலாவுக்கு வயது இருபது நிறைந்து விட்டது.பி.காம் முடித்து நல்ல வங்கி வேலையும் கிடைத்தது. கலாவின் தந்தை ரவிக்கு ஜோசியம், ஜாதகம் இதில் எல்லாம் நம்பிக்கை அதிகம்.கலாவின் தாய் சுஜாதாவுக்கு இதில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. “ஆமா,, எங்கப்பாவும் ஜாதகமும் கையுமாக அலைந்து ஒரு ஜோசியர் பத்துப் பொருத்தத்தில் எட்டு பொருத்தமும் அமைந்த ஜாதகம் என்று சொன்னதனால் தானே ரவிக்கு கழுத்தை நீட்டினாள். என்னத்தை சாதிக்க முடிந்தது? காலம் ஓடியது. அதோடு நாமும் ஓடியது தான் […]