-ரவி அல்லது. கோடைக்காலங்களில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது குளித்துவிடுவேன். அதற்குமேல் குளிப்பது என் வேலைகளையும் மனோநிலையையும் பொருத்தது. “தலையில தேய்ச்சி எவ்வளவு நேரம் வச்சிருப்பீங்க. சீக்கிரம் குளிங்க நான் குளிக்கனும்.” என்றார்கள் வழக்கம்போல மனைவி. பெண்கள் தலையில் முடிகள் கொட்டுவதற்கு நரைக்காமல் இருப்பதற்கென்று ஏதாவது இலைகளை அரைத்து தலையில் தடவுவார்கள். சின்ன வயதிலிருந்தே அக்காமார்கள் ஆறு பேருக்கு ஒரு தம்பி என்பதால் அவைகள் எனக்கு இலவச இணைப்பாக கிடைக்கும். அப்போது அவைகளை நான் விரும்பாவிட்டாலும் கையில் […]
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி – 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்: இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். போட்டியின் நடுவர்களாகப் […]
ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உன்னை சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ என்று தெரியும் என்னை கைபேசியில் அழைக்க மாட்டாய் நீ என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உன்னை நான் கைபேசியில் அழைப்பதை விரும்ப மாட்டாய் நீ என்று தெரியும் எனக்கு நீ குறுஞ்செய்தி அனுப்ப மாட்டாய் என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உனக்கு நான் குறுஞ்செய்தி அனுப்புவதை […]
ஒருவன் பரோட்டா வாங்கச் சென்றிருக்கிறான். பரோட்டா பொட்டலத்தின் வெளியில் சுற்றப்பட்டிருந்த துண்டுத் தாளில், குறுக்கும் மறுக்குமாகச் சென்ற நூற்கோடுகளின் அடியில், “பரோட்டா சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி சாவு” என்ற செய்தி அம்மாணவியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்திருக்கிறது. அதைப் புகைப்படம் எடுத்து அதில் ‘உனக்கு பரோட்டா கட்டி குடுக்க வேற பேப்பரே கிடைக்கலியா? ஏன்டா இப்பிடி அநியாயம் பண்றீங்க?’ என நகைச்சுவையாக தட்டச்சு செய்து மீம் ஒன்றை வலைதளத்தில் உலவ விட்டான். யாரும் பார்த்தவுடன் சிரித்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்துவிடுகிற விஷயம்தான். […]
முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வு துறை, பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1. ஏரெழுபது கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான் நினைவுக்கு வரும். ஆனால், கம்பர் தன் கவித் திறமையால் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுவது என்று பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் உழவர்களைப் பற்றியும் உழவுத்தொழிலைப் பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ள ஏரெழுவது என்னும் நூலின் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம். ஏரெழுபது […]
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி @ விடாமுயற்சியே வெற்றி பேச வந்தவரின் ஒலிவாங்கியில் தொடர் சிக்கல் @ பிள்ளையார் சிலை மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார் கைபேசியில் பூசாரி @ வீட்டைப் பூட்டிய பின் இழுத்து உறுதி செய்தார் பணிக்குச் செல்லும் திருடன் @ பசிக்கும் வயிறு அவசரமாய் சாப்பிட்டான் ஆகாரத்துக்கு முன் மாத்திரை @ குத்துச்சண்டை வீரர் கதறி கதறி அழுகிறார் சொத்தைப் […]
சோம. அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் […]
அன்புடையீர், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். சொல்வனம் பதிப்புக் குழு இதழைப் படிக்க வலை […]
சுலோச்சனா அருண் கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி […]
சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம் தவற, சொல் தடுமாற, சொல்லும் பொருளும் மாற்றம் அடைய, சொல் மாறி வரும் நாவில். சந்தியில், மனம் பொருந்தா சந்தியில் சந்தி சிரிக்க; சொற்கள் தனித்தனியாக; சந்தியின் சந்தியில் என் சொற்கள். சசிகலா விஸ்வநாதன் சசிகலா விஸ்வநாதன்