…………………………………………………………………………………… இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது வெளியிடுவதற்காண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றது எனவே கவிதாயினிகள் தாங்களது தரமான 05கவிதைகளுடன் , உங்களைப்பற்றிய குறிப்புக்களும் , பாஸ்போட் அளவு புகைப் படமும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம மேலதிக விபரங்களுக்கு […]
வாணி. பாலசுந்தரம் கடந்த மே மாதம் 20ம் திகதி கனடா, ஸ்காபரோ நகர மண்டபத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. நினைவரங்கு அழைப்பிதழ் மின்னஞ்சல் ஊடாக எனக்குக் கிடைத்ததுமே –அக்காலப் பல்கலைக் கழகச் சூழலும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சகமாணவர்கள், எமது அன்றய வாழ்வின் நிகழ்வுகள் யாவும் மனதில் திரையோட – நானும் அன்றைய தினம் நினைவரங்கில் சென்றமர்ந்தேன். நிகழ்ச்சிகள் யாவும் அமைதியான முறையில், அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. […]
கோமதி சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி விட்டுக்கொடுப்பதாக திரு மணத்திற்கு ஒப்புதல்கொடுத்தனர். எப்படியோ, அடுத்தமாதத்தில் திருநீர் மலையில் சிக்கனமாக மணமுடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. அன்று, தன்னைக் காக்கவைத்துவிட்டு நேரங்கழித்து வந்த சைத்ராவுடன் சைதன்யன் பேசவில்லை. கோபமாக […]
ஜாசின் ஏ.தேவராஜன் பட்டணத்தையொட்டியுள்ள சேவல் இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டிருக்கிறது. “ இப்ப எந்திரிக்கப் போறியா இல்ல… தொடப்பக்கட்டையக் கொண்டாரவா!” “ எந்திரிக்கிறேன்னு சொல்றேன்ல…! யேம்மா காலங்காத்தாலே நாய் மாரி கத்திக்கிட்டிருக்க… நிம்மதியா தூங்கக்கூட முடியாதா?” “ ஓ அம்மாவையே நாயின்னு சொல்றீயா..! சொல்லுவடா சொல்லுவெ… சீனங்கடையில மங்கு கலுவி வேளா வேளைக்கிக் கொட்டுறேன்லெ… சொல்லுவெடா… நல்லா சொல்லு… இவ்வள நாளு ஒங்கப்பாதான் சொல்லிக்கிட்டிருந்திச்சு… இப்ப நீயுமா?” “பெசாம வாயெ மூடுமா ! எப்பப் பாத்தாலும் கிறுக்குப் புடிச்ச […]
மார்வி சிர்மத் பெண்கள் படிப்பதற்கு எதிராக ஆணை பிறப்பித்த தாலிபான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியுடன் நின்று, பெண்கள் படிக்க உதவ வேண்டும் என்று உறுதியுடன் அறிவித்த மலாலய் யூசுப்ஜாய் என்ற பாகிஸ்தானிய பெண்ணே நாம் அனைவரும் பார்க்க விரும்பும் பாகிஸ்தானின் முகம். ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் மறுதலிப்புமாக நாம் ரிங்கிள் குமாரியை உதாசீனம் செய்து மலாலய் யூசுப்ஜாயை பார்க்க விரும்புகிறோம். ரிங்கிள் குமாரி 19 வயது சிந்தி இந்து பெண். இவர் கடத்தப்பட்டு கட்டாயமாக […]
அன்புடையீர். வணக்கம். ஈழத்து மறைந்த அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின்தொகுப்புதயாராகிறது..நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மறைந்த அறிஞர்களைப்பற்றி 4/5 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி உடன் அனுப்புங்கள். அனுப்பவேண்டியமுகவரி: R.Mahendran,34 Redriffe Road, Plaistow,London,E13 0JX. மின்னஞ்சல்:mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்
குருசு.சாக்ரடீஸ் பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை தவிர அனைவரும் போப் இரண்டாம் ஜாண்பாலை காணவந்த புனித யாத்ரீகர்கள். விமான நிலையத்தின் சில அடி தூரங்களில் பேருந்து நிறுத்தபட்டது. அதற்கு மேல் பேருந்தை நகர்த்த ரோட்டை அடைத்துகொண்ட திருவிழா தனம் சம்மதிக்கவில்லை. யாவோவின் உடமைகளையும் பேருந்திலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் கால்களால் உதைத்து தள்ளினார்கள். ஒரு தகர டிரங்கு பெட்டியும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு அட்டைபெட்டிகளும் ரோட்டில் உருண்டன. ரோட்டு ஓரமாக அவைகளை எடுத்து வைக்க கூட அவகாசம் தராத […]
குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் போன்சாய்கள் முணுமுணுக்கும் வெதுவெதுப்பான காலையை வரவேற்க காத்திருக்கின்றன போக்கிடமற்ற பறவைகள் பிரார்த்தனைக்கான பாடல்கள் கை தவறிய நாணயத்தைப் போல கூடத்தில் உருள்கின்றன வெளியேறும் வழியற்ற உலகத்தின் அறைக்குள் தண்ணீர் சிற்பங்களை செதுக்கும் போன்சாய்கள் திராட்சை ரசத்தில் கரைக்கின்றன ஹிருதயங்களை பெருமூச்சில் கருத்தரிக்கின்றன பூக்கின்றன வண்ணத்துபூச்சிகள் அமர இலை விரிக்கின்றன கனவுகளை குவளையில் பருக தருகின்றன […]
மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம். ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் […]
எழுதியவர்: ’கோமதி’ காலை முதல் பக்கத்து போர்ஷனில் ஏதோ தகராறு. விவரம் சரியாகப் புரியவில்லை. ஆனால், காரசாரமான விவகாரம். நான் அலுவலகம் புறப்படும் வரை தொடர்ந்ததால் எனக்குப் புறப்படவே முடியவில்லை. எப்படியாவது விவரம் அறியவேண்டும். என் மனைவியோ அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பவள். எதையும் காதில் வாங்க அவளால் முடியாது. நான் வாசலில் வண்டியை புறப்படவைக்க முயன்றுகொண்டி ருந்த போது ஜகன் இரைந்துகொண்டிருந்தான். ”ஒன்று, நீ போகணும், இல்லை, நான் […]