மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம். (சிதனா, கோலாலம்பூர்) மலேசியாவில், ஆண்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஈடாக, நவீனம், குறு நாடகம், புதினம், கட்டுரை, கவிதை என மலையகத்துப் பெண் படைப்பாளர்களும் தங்கள் பங்கினை நிறைவாகவே வழங்கி வந்துள்ளனர். புத்தாக்க சிந்தனைகளும் எழுத்தாற்றல் திறமைகளும் கொண்ட பெண்கள் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர் என்ற போதிலும், அவர்களைப் பற்றிய செய்திகள் அதிகம் பேசப் படாமல் இருப்பதற்கு, இவர்களுடைய படைப்புகள் முறையாக ஆவணப் படுத்தப்படவில்லை என்பதை முக்கியக் காரணமாகக் கொள்ளலாம். […]
உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் […]
ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ——————————————- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012 *அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்மணவாளன் 18, பத்மாவதி நகர் மாதவரம் பால் பண்ணை சென்னை-600 051 செந்தமிழ் […]
கனடியத் தமிழரின் அடையாளமாக, வரலாற்றுப் பதிவாக தன்னை நிலைநாட்டி, தொடர்ந்து 21 வருடங்களாக வெளிவந்து சாதனை படைக்கும் தமிழர் தகவல் இவ்வருடத்திற்கான இலக்கிய விருதை எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு (Kuru Aravinthan)வழங்கிக் கௌரவிக்கின்றது. பல விருதுகளைப் பெற்ற இவர் நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், நாடகம், கட்டுரை, திரைக்கதை என பன்முக ஆளுமைகொண்டவர். ஓன்ராறியோ அரசின் தொண்டர் சேவை விருதைப்பெற்ற இவர் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். தமிழ்த்துறைசார் எழுத்து, இலக்கியம், சிறுவர் கல்வி, […]
பேரன்புடையீர், வணக்கம். எம் தலைமையில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி சமுதாய மன்றத்தில் 03.03.2012ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். நண்பர்கள் வாழ்த்துச் செய்தியாவது அனுப்பி வைக்கவேண்டுகிறேன். நன்றி. தமிழன்புடன், முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ் இணைப் பேராசிரியர் ஏவிசி கல்லூரி – மயிலாடுதுறை. — தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் […]
Dear All Kalachuvadu is delighted to publish a collection ancient Chinese poems in Tamil, the first ever direct translation from Chinese to Tamil. We are releasing the book on Feb 25th evening in Delhi Tamil Sangam . The proceedings of the meeting will be in English. Find the invite attached. Please come to the event. […]
தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்டு வெளிவரும் சிற்றேடு இதழ் பல முக்கியமான அறிமுகக் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. கடந்த இதழ்களில் கேரலத்தின் புதிய அறிவுஜீவி எம் கே ஹரிகுமார் பற்றிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. க முத்துகிருஷ்ணனின் “யாதுமற்றவர்” நாவல் பற்றிய விமர்சனமும் அறிமுகமும் வெளியாகியுள்ளது. தமிழவனின் நாவலான “வார்ஸாவில் ஒரு கடவுள்” பற்றிய பல பார்வைகள் வெளியாகியுள்ளன. இன்னொரு முக்கியமான கட்டுரை “எந்திரன் திரைப்படமும் எடிபஸ் சிக்கலும்” ஆகும். எந்திரன் படத்தில் எப்படி […]
மாயன் இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மற்றபடி […]
சிபிச்செல்வன் இந்த ஆண்டிற்கான விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் விழா மதுரையில் ஜனவரி 28,2012 காலை 10,30 மணியளவில் ஓட்டல் ராம் நிவாஸில் நடைபெற்றது. விளக்கு விருது தேர்வு குழு சார்பில் சிபிச்செல்வன், விழாவில் சிறப்பரையாற்ற எஸ்.ராமகிருஷ்ணன்,விழா ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன் ஆகியோருக்கு நடுவில் விருது பெறும் கவிஞர் தேவதச்சன் மேடையில் அமர்ந்திருக்க பார்வையாளர்கள் அவர்களைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்தனர். முதலில் வெளி ரங்கராஜன் விளக்கு விருது குறித்தும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக விருது பெற்றவர்களைப் பற்றியும் […]
மாயன் இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்… இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது. […]