author

திறக்காத கதவின் மன்றாட்டம்

This entry is part 8 of 10 in the series 22 டிசம்பர் 2024

ரவி அல்லது தேவகுமார பாடுகளின்திருப்பலியில்சிதறியோடியமந்தையைசேகரம்பண்ணஜீவிக்கும்பொருட்டு.உயிர்தெழும்உன்னத சுவிசேஷத்தில். ஹிருதய சுத்தியற்றவிசுவாசகீதங்கள்இசைத்த வண்ணமிருக்கிறதுபரலோக சாம்ராஜ்யத்தைபற்ற முடியாதபரிசேய பாங்கில். நித்திய ஜீவியத்தில்நானே வழியெனதட்டும் கதவுகள்போஜனம்பண்ணாதபுதிராகதிறக்கப்படாமல் இருக்கிறதுஎப்பொழுதும்பெலனாகாத ஜெபித்தலில் மட்டும் ப்ரியம் பண்ணி.  -ரவி அல்லது.ravialladhu@gmail.com

முகராத வாசனையின் நோதல்

This entry is part 7 of 10 in the series 22 டிசம்பர் 2024

ரவி அல்லது வழித்தெடுத்த நேசத்தை வாசனை திரவியமாக தடவினேன்.  இக் கமகமத்தலைத்தான்.  இவர்கள் காதலென்கிறார்கள்.  நான் கசிந்துருகும் உயிர்த்தலென்கிறேன்.  இங்குதான் என்னுலகம் வேறாகிப்போனது பித்தனென இவர்கள் பிதற்றுவதற்கும் பிறகென்னை வெறுப்பதற்குமான அந்நியப் போக்கில்.  *** -ரவி அல்லது.  ravialladhu@gmail.com

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

This entry is part 3 of 10 in the series 22 டிசம்பர் 2024

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான் செய்து கொள்கிறேன் எனது பகுத்தறிவு எப்போதும் கடவுளுக்கு இடம் கொடுத்ததில்லை எனது மனதின் அறைகூவல்கள் பிரபஞ்சத்தில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன இவர்களையெல்லாம் சந்திக்க வைத்த விதியை நான் நொந்து கொள்வதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை இறக்கும் வரை பிறரிடம் இரந்து பெறவேண்டிய […]

மொகஞ்சதாரோ 

This entry is part 1 of 10 in the series 22 டிசம்பர் 2024

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி இருந்தது.  இரவில்  பட்சிகள் வந்து  மெளன ராகம் பாடி செல்லும்.  வறண்ட நதியின்  கர்ப்பத்தின்  ஆழமான  சதைப்பிண்டங்களை  அள்ளி சென்றனர்  இரக்கமற்ற மனிதர்கள்.  ஒவ்வொரு மணித்துளிகளில்  காசை வலக்கையில் வாங்கி  கஜான ரொப்பினார்கள். மறைந்து […]

வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை  நனவாக்கிய விலங்கு மருத்துவர் நடேசனுக்கு இம்மாதம் 70 வயது !!  

தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !!                                                                                                                                   முருகபூபதி இலங்கை வடபுலத்தில்   ஐந்து தீவுகள்   சங்கமமாகும்  இந்து சமுத்திரக்கரையோரத்தில்   ஒரு  காலத்தில்    விரல்விட்டு  எண்ணக்கூடியளவு   வாழ்ந்த   மக்களின்  பூர்வீகம் எழுவைதீவு     கிராமம். பனையும்  தென்னையும்   பயன்தரு   மரங்களும்   மட்டுமல்ல  ஆர்ப்பரிக்கும் கடலின்  உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு  வாழ்வளித்தன. ஒருகாலத்தில்   தீப்பெட்டிக்கும்  எண்ணெய்க்கும்  உப்புக்கும்  மாத்திரம்  கடைகளை   நாடிச்சென்ற  அந்தச்சிற்றூர்  மக்களுக்கும் கனவுகள்  இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து   மக்களுக்கு தமது       பிள்ளைகளின் எதிர்காலம்   குறித்து   கனவுகளும் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ்

This entry is part 9 of 9 in the series 15 டிசம்பர் 2024

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ், 8 டிச., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-4 – அருணாசலம் ரமணன் இலக்கியம்/கருத்து நூல் அறிமுகங்கள் –  சித்ரா பாலசுப்ரமணியன் பசிப்புலவர்கள் (Hungryalist Generation) – வங்காள இலக்கிய இயக்கம் – ஆர். சீனிவாசன் Fire on the Ganges – அச்சுதன் இராமகிருஷ்ணன் பெரும் வீழ்ச்சியின் கதைகள்: […]

மனிதநேயம்

This entry is part 8 of 9 in the series 15 டிசம்பர் 2024

அந்த வீட்டுவசதிக் கழக வீட்டுக்கு நாங்கள் புதிதாக குடிவந்திருக்கிறோம். புதுக்கோழிகளாக பண்ணையில் சேர்ந்த நாங்கள்  கொஞ்சம் கொஞ்சமாக பழகிய கோழிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.  எங்கள் வீட்டில் 6 பேர். என் மகள், மருமகன், அவர்களின் இரண்டு குழந்தைகளோடு நாங்கள் இருவர். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை 50 உருப்படிகள் துவைத்தாக வேண்டும். மூன்று ஆயாக்கள் சேர்ந்தாலும் முடியாத காரியத்தை நகராமலேயே என் துவைக்கும் இயந்திரம் துவைத்துவிடுகிறது. பாவம் அது.  மேற்கூரையில் கொண்டி அடித்து ஆறு மூங்கில் கழிகளைக் கிடத்தி […]

திளைத்தலின் உன்மத்தம்

This entry is part 7 of 9 in the series 15 டிசம்பர் 2024

ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு

This entry is part 6 of 9 in the series 15 டிசம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  எப்போதுமுள்ள மௌனமே  நம்மிடையே – நாம் நம்முள் உறைவதின் அத்தாக்‌ஷியாய், நம்மிருப்பே இடையறாத  சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்,  பார்க்காத மாதிரிதான், பார்க்காது இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பது போல்தான். ஒன்றாயிருப்பது என்பதென்ன? நீயில்லை என் ஆழ்துயிலில். உன் ஆழ்ந்த உறக்கத்திலென்னைக் கண்டாயோ? நம் நிழல்களுறவாடுவதை? பின்னிப் பிணைந்திருப்பதை? நம் நினைவுகள்  முயங்கியிருப்பதை? நம்மிருவுடல்கள் ஓரிடத்தில் இணைவதை? நம்முணர்வுகள் பிணைவதை? விழிப்பில் நாம் ஒருவரையொருவர்  பார்த்துக்  கொண்டிருந்தாலும் பார்க்காத மாதிரிதான். நீ நினைப்பதையே நான் […]

சித்தம் ஒருக்கி

This entry is part 5 of 9 in the series 15 டிசம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி  பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க. காற்றைக் குறை கூறுவானேன்?