author

சீப்பு

This entry is part 10 of 23 in the series 21 ஜூன் 2015

  ‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன்   சீவிப் பார்த்து வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு வருடும் சீப்பை வைத்துக் கொண்டார் புதுப்புளி நிறத்தில் புலிவரிச் சீப்பு அது   பின் சீப்பு வாங்கும்போதெல்லாம் சீவீப்பார்க்காமல் வாங்கியதில்லை எத்தனையோ சீப்புகள் வாங்கிவிட்டேன்   சிங்கப்பூர்ச் சச்சா தந்த பேனாச் சீப்பொன்று என் பேனாவோடு வெகுகாலம் பேசிக்கொண்டிருந்தது வாங்கிப் பார்த்தவர்களெல்லாம் வாங்கிக் கேட்டார்கள்   இந்தோனேஷிய நெருக்குப்பல் மரச்சீப்பு இரண்டிருந்தது […]

சிரித்த முகம்

This entry is part 6 of 32 in the series 29 மார்ச் 2015

ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் தலைவனை தொண்டனை தொலைத்து விட்டோம் நீ உறக்கம் தொலைத்த இரவுகளையும் சேர்த்தால் இருநூறு உன் ஆயுள் முகவரி தந்த உன் முகம் பார்க்கும் இறுதி நாள் கடந்து கொண்டிருக்கிறது சிங்கைத் தீவை இன்று கண்ணீர் சூழ்ந்திருக்கிறது மண்ணோடு மக்களையும் செதுக்கிய தலைவ! இனி எங்கள் சிங்கைக் கொடியே உன் சிரித்த முகம் அமீதாம்மாள்

முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

    வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை   நூலாக்கினேன்   கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது   என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார்   பைரனின் நகலாம் நான் ஒரு பேராசிரியர் புகழ்ந்தார்   மின்சாரம் எனக்குள் மிருதங்கம் இசைத்தது   விழாவில் கொஞ்சம் விற்றது மிச்சம் தோற்றது இன்றுவரை கேட்பார் எவருமில்லை   என் கவிதைகளை தேர்வு செய்யாத அந்த வாரஇதழ்களின் […]

குளத்தங்கரை வாகைமரம்

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

    குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம்   உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது என் காலை   பனம்பழம் சுட்டது பட்டம் விட்டது பதின்மக் காதலைப் பகிர்ந்துகொண்டது நட்புகள் பிரிவுகள் முகிழ்ந்தது முடிந்தது இன்னும் இன்னுமென்று வாகையடியே வாழ்க்கையானது   தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள் தாவத் தயாராய் தவளைகள் முதுகு சொரியும் வாத்துக்கள் சுழிக்கும் மீன்கள் கலையும் அலைகளில் உடையும் முகில்கள் அத்தனையும் அதிகாலைத் தூறலில் மனவெளி […]

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் …….எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன …….எனக்குப் புரிகிறது   மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது   கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது   எடிஎம்மில் எனக்கு முன்னால் நிற்பவர் வழிவிட்டு வழிகிறார் …….எனக்குப் புரிகிறது   ரயிலில் இடம்விட்டு எழுகிறார் இடிப்பதுபோல் நிற்கிறார் …….எனக்குப் புரிகிறது   நாற்பதைத் தாண்டியவள் நான் எனக்கே […]

மக்களாட்சி

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி   ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்   சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம் சில பழைய மரங்கள் கழிக்கப்படலாம் அதற்குமுன்   ஆணிவேரைத் தோண்டிய பெருச்சாளிகளை விரட்டுங்கள் இல்லையேல் அசாதாரண வெற்றிக்கும் அற்ப ஆயுளே   இந்தியாவின் இமயம் மக்களாட்சி இமயம் இருக்கும்வரை இந்தியா பேசப்படும்   அமீதாம்மாள்

கவிதை

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது   ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது   நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது   கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   எப்படி எரிப்பது?   இதோ மனோவியல் ஞானி ஜேகேயின் ஜெயிக்கும் வார்த்தைகள்   காணும் பொருளாக காண்பவன் மாறிவிட்டால் கிளறும் வேலையை மறக்கும் மனம் பின் ஜெயிப்பது நிஜம்   […]

உயிர்த் தீண்டல்

This entry is part 7 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு   ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் காதல் பொறியாய் மங்கையிடம் வீழ்ந்தான் மன்மதன்   மலையடியின் சுளைகளையும் கனிகளையும் மங்கையிடம் கொட்டினான் தழைகளால் பந்தல் செய்தான் கொடிகளால் ஊஞ்சல் செய்தான் ராணியானாள்  மங்கை சேவகனானான் மன்மதன்   கருவுற்றாள் மங்கை ஒன்று இரண்டு மூன்று   அடிக்கடி மலையடி செல்லும் மன்மதன் அப்பா முதுகு சொறிவான் அம்மாவுக்குப் பேன் பார்ப்பான் பாட்டி […]

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

This entry is part 17 of 24 in the series 8 செப்டம்பர் 2013

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர்   ஆசிரியர் கிச்சாவைக் குடைந்தார் ‘நீ இல்லையென்றால் கூட்டிப் பெருக்கும் ருக்குப் பாட்டிதான் ஒளிக்காமல் சொல்’   எடுத்தேன் என்றோ இல்லை யென்றோ சொல்லாமல் ஊமையாய் நின்றான் கிச்சா அது திமிரின் அடையாளமாம் முட்டியில் அடித்தார் மண்டி போட வைத்தார்   அடுத்த […]

நாவற் பழம்

This entry is part 21 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

1960களில் நாவற்பழம் விற்கும் பாட்டியின் நங்கூரக் குரலால் தெருக்கோடி அதிரும்   ‘நவ்வாப்பழோம்……’   உழக்கரிசிக்கு உழக்குப் பழம் பள்ளிக் கூடத்திலும் ஒரு தாத்தா நாவற் களிகளை கூறு கட்டி விற்பார்   செங்காயை உள்ளங்கைகளில் உருட்டி கனிந்துவிட்ட தென்று களித்த காலங்கள் அவை   ஒரு நாள் விளையாட்டாய் விதைத்து வைத்தேன் ஒரு நாவல் விதையை இரண்டே மாதத்தில் இரண்டடி வளர்ந்தது புதிதாய்ப் பிறக்கும் பொன்தளிர் கண்டுதான் என் பொழுதுகள் புலர்ந்தன இருபது ஆண்டுகளில் இருபதடி […]