முகவரி கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார் தபால்காரர். அவரா என்று எளனமாக பார்த்தான் சந்தைக்காரன். அதோ மூலையிலுள்ள புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை எடைப்போட்டுக் கொண்டே. அவரா நேத்து தான் அந்த மூலை பழைய புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார். நாலு பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை வாங்கி சென்றார் நாலு ரூபா பாக்கியுடன். அவரா ஜிப்பாவோடு அலைவரே தோளில் ஜோல்னாப்பையோடு. அவரா முனைத்தெரு டீக்கடையில் பேசீக்கொண்டே இருப்பாரே. அவரா வேல வெட்டி இல்லாம எழுதிக்கொண்டிருப்பரே. அவரா லைப்ரரில […]
நகுலன் வீதிகளை மறந்து வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி. கவி, தொலை தூரத்து பறவைகளின் பாடல் கேட்பதாக சொல்லும் வயோதிகன். பூதக்கண்ணாடிகளை இலக்கிய பூச்சோலையில் விட்ட கவிஞன். ராமசந்திரன் வந்து விட்டான என கேட்டுக்கொண்டே இருக்கின்றார். பூனைகளிடம் தான் கேட்க வேண்டும் நகுலன் வீடு எங்கே, அவைகள்தான் நகுலன் கவுச்சி வாசனை பிடிக்க இழுத்துச்செல்லும். ஜெயானந்தன்
“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும் ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான். அது எது என்ற தேடுதல் கடவுளைச்சுற்றியோ, இஸங்களை சுற்றியோ, இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ, வனங்களை சுற்றியோ, போர்களை சுற்றியோ எது எது என அறிதலின் பொருட்டு வாழ்க்கை நகரும் மெல்ல நத்தையென எது பொருட்டும் கவலை இல்லாமல் நடப்பது வேதாந்திகள் வேலை. எதையோ ஒன்றை பற்றி, சுற்றி ஊர்வலம் வருவது சுயம்பிகளின் வாழ்க்கை. ஆணைச்சுற்றி பெண்ணும், பெண்ணைச்சுற்றி ஆணும் ஆடிப்பாடி வருவது ஆனந்தக்கூத்தன் சொன்னது. […]
புரண்டு புரண்டு படுத்தார் தர்மகர்த்தா. தூக்கம் வரவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடம் சொல்லி அழுவது. மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை. அந்த அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான் நேற்றே தூக்கியாச்சே!! இனி யாரிடம் சொல்லி அழ. காலையில் ஓதுவார் வந்தார் தொங்கிப்போன முகத்துடன் மீளா துக்கம் கண்ணில் புரண்டது. “சிவன் சொத்து குலநாசம் “, தேம்பி தேம்பி அழுதார் தர்மகர்த்தா ! தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி! பாடினார் ஓதுவார். கண்ணில் வழிந்தோடியது தோற்றப்பிழையா? […]
படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும், சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற, வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின் மன உணர்வுகளை வைத்து, இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு, வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர். திஜாவின் கதைகளில் வரும் மண்வாசனை இதிலும் தெரிகின்றன. வீடு என்பது, வெறும் கல்லும் மண்ணம் கட்டிய வஸ்து அல்ல. அதற்கும் உயிர் உண்டு. அதுவும் அம்மா அப்பாவோடு பேசும். அக்கா தங்கை தம்பியோடு உறவாடும். வளர்க்கும் நாய் பூனையோடு […]
விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள். ——–‐——————————— தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி மார்க் கோலி சோடா பெட்டியில் நிற்கும் வரிசையாக. வாலை ஆட்டும் பேட்டை நாய்கள் எப்போதும் நிற்கும் அவரோடு. குத்தாலம் நல்லக்கண்ணு ஆர்மோனியத்தை ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு […]
ஜெயானந்தன் நடைப்பயணத்தில் எதிர் திசையில் மழலை ஒன்று கையசைத்து மழலை பள்ளிக்கு தவழ்ந்தது. திரும்பிப்பார்க்கையில் ரோஜா மொட்டவிழ்த்து புன்னகை பூத்தது. முதல் மாடியில் சாருகேசி வீணை வருடினாள். மூன்றாம் மாடியில் மாலி புல்லாங்குழல் தவழ்ந்தது. நேற்று சென்ற அதே பூங்காவிற்கு சென்றேன். கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. சில பூக்கள் எனக்காக பூத்திருந்தன. சிலர் அமர்ந்திருந்தார்கள் யாரும் யாரோடும் பேசவில்லை. நான் என் கவிதை பிரசவத்திற்கு தவம் கிடந்தேன். -ஜெயானந்தன்.
ஜெயானந்தன் தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி மார்க் கோலி சோடா பெட்டியில் நிற்கும் வரிசையாக. வாலை ஆட்டும் பேட்டை நாய்கள் எப்போதும் நிற்கும் அவரோடு. குத்தாலம் நல்லக்கண்ணு ஆர்மோனியத்தை ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு கர்ணத்தை சூடேற்றுவார். வாலாஜா வரதராஜன் தவிலுக்கு […]
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் காது மடல்களில் பட்டு உலக மனிதர்களோடு உறவுக்கொள்ள அழைக்கின்றது. விரைந்தோடும் மனிதக்கூட்டம் வணிகப் பாடல்களில் செத்து முடிகின்றது. நடந்து சென்ற தாகூர்தான் என்னை அணைக்க ஓடிவந்தார். அவர் உடல் முழுக்க கவிதை தோட்டம். உள்ளத்திலோ ரவீந்திர சங்கீதம். “நளந்தா அழிந்து விட்டதா” எனக்கேட்டு அழுதார். சாந்தி நிகேதன் கதி என்னவோ எனக்கு தெரியாது. நான் […]
நேற்றைய நடைப்பயிற்ச்சியில் காலில் மிதிப்பட்டது, ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம் அவ்வழி நடந்தேன். வா! என அழைத்து விருட்சமாக, மனதார வாழ்த்தியது வீசும் தென்றலாய். ஜெயானந்தன்