இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள் தலைகீழ் விகிதங்களாய் வெளவால் குடும்பங்கள்1 செவந்தி மலரில் கால் பதிக்கும் வண்ணத்து பூச்சிகள்! பாடித் திரியும் தேனீக்கள். ஊர்வலமாய் பாடித் திரியும் ஊசித் தும்பிகள்! செவ்வாய் நாரைகள் ஓடையில் நீந்தும் களவாய் மீன்கள் சுகித்து […]
இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே – உன் பிஞ்சுக் கால்களில்தான் – என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் – நீ பிறப்பெடுத்தாய் – உன் குழி விழுந்த கன்னத்தில் – யார் புன்னகையை தவழ விட்டான் ! கம்பளி பூச்சிப்போல் – என் அன்பு உன் மேனியெங்கும் தவழும் நீ நெளியும் போது – நான் வண்ணத்துப் பூச்சியாய் பறந்து விடுவேன் ! என்னையே சுமந்து சென்று – மீண்டும் குழந்தையாக்கினாய் என்னை ! உனது […]
இரா.ஜெயானந்தன். முதல்வரின் கடைக்கண் பார்வை, ஸ்டாலின் மேல் விழுந் துள்ளது. மு.க.வின் பிள்ளையாக பார்க்காமல், எதீர்க்கட்சி தலைவர் என்ற நோக்கில் அவரை அணுகுகின்றார். அந்த காலத்திலிருந்தே, ஸ்டாலின் ஒரு நாகரீக அரசியல்வாதிய வலம் வந்துள்ளார். யாருக்குமே வளையாத முதல்வர், திமுகவுடன் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு அரசியல் முதிர்ச்சி என்று, அவரது தொண்டர்கள் பாரட்டுகின்றனர். எல்லாம், அரசியல் சதி […]
ஜெயானந்தன். தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல் கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை செய்துவிட்டார். இந்த விளையாட்டில், பாவன் ஒரு காதநாயகன் தன் உரு இழந்து, கோமாளியாக மாறிப்போனக்கதை, அவருக்கும் அவர்து மனைவிக்கும் புரிந்திருக்கும். போன தேர்தலில், ஒரு காமடியன், தன் சினிமா வாழ்க்கையே இழ்ந்தார். அம்மா உணவகம், அம்மா வாட்டர், அம்மா டாஷ்மார்க், அம்மா மிதிவண்டி, அம்மா கனணி, […]
இரா. ஜெயானந்தன். “இதுவரை எழுதி என்ன கண்டோம் “என்று மூத்த எழுத்தாளர் மாதவன் 1994-ல் சலித்துக் கொண்டார். கூடவே, “தாசிக்கு வயசானலும் கொண்டை நிறைய பூ வைத்துக்கொள்ள ஆசைதான்” என்றும் தனது ஆசையினையும் கூறியுள்ளார். 2015-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும், டெல்லிக்கும் வெகு தூரம்தான்.கூடவே, அரசியலும் நுழைந்துக்கொண்டு படாய்படுத்துக்கின்றது. திருவனந்துப்புரத்து சாலை வட்டாரத்தழிழை, மனிதர்களை உயிர்துடிப்புடன் பேசவைத்தவர் மாதவன் என்று, மலையாள எழுத்தாளர் சி.மணி கூறியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் கூட, […]
இரா. ஜெயானந்தன். சாதிமத பேதங்கள் வேரோடு களைய மாமழையே வருக ! மனிதமன மாசுகள் முற்றிலும் அகல மாமழையே வருக ! ஏழை பணக்காரன் எண்ணங்கள் ஒழிய மாமழையே வருக ! இந்து முஸ்ஸீம் கிருத்துவம் இணய மாமழையே வருக ! இளைய நெஞ்சங்களின் இணப்பகம் அறிய மாமழையே வருக போலி அரசியல் முகமூடிகள் கிழிய மா மழையே வருக ! உண்மை அரசியல்தோன்றி ஊழ்கள் ஒழிய மா மழையே வருக ! மனிதம் என்றொரு மாமேரு […]
(`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிகழ்கலைக் கலைஞர்களுக்கு முக்கியமாக அகாலத்தில் மறைந்த ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம் அவர்களுக்கு வெளி ரங்கராஜன் அர்ப்பணித்திருக்கிறார்.) வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள். ஆசிரியர்; வெளி ரங்கராஜன். நம்மோடு வாழ்ந்து, பல நிகழ்கலைப் படைப்பாளிகள், […]
ஜெயானந்தன். இந்திய நாட்டின் ” புது அவதாரமாக ” மோடியை ஏற்று, இந்திய மக்களில் 30% மக்கள், வாக்களித்து, தங்களின் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். மீதம் 70% மக்கள், ஒருவித குழப்பதோடும்,பயத்தோடும் , எட்டி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். நமது புதிய பிரதமர், இந்த 70% சதவிகத மக்க்ளின், நம்பிக்கை சின்னமாக் மாற வேண்டும், அதற்கு , காவி மனது , மாற வேண்டும். டீக்கடைக்காரர்எனற முத்திரை, அவருக்கு, இந்த தேர்தலில், காங்கிரஸ் கொடுத்த கொடை.இது, இவருக்கு, கோடான்கோடி […]
ஜெயானந்தன். எல்லாமாய் நின்றேன் எனக்கு பசி கிடையாது எனக்கு ஆசை கிடையாது. மோகம் கிடையாது, காமம் கிடையாது. யாருமற்ற அநாதையாய் வானாந்தரத்தில் நின்றேன். மீண்டும் மீண்டும் சூரியனும், சந்திரனும் காற்றும் மழையும், புயழும், பூகம்முமாய் என்னை தீண்டிச் செல்லும். எல்லாமுமாய் நின்றேன் யாருமற்ற அநாதையாய் ..! – ஜெயானந்தன்.
ஜெயானந்தன். எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று, யார் உளரோ ? – பூவுலகில், நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே நாயாய், பேயாய், நரியாய் திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ ! எள்ளாய், முள்ளாய் , எரிமலையாய் போனபின்பு திருநீராய் தேகமெங்கும் பூசி ஓதி தெய்வத்தை தேடுவதால் யாது பயன் ?