சேதுரத்தினத்துக்குஒன்றும் விளங்கவில்லை. எனினும் ராமரத்தினம் கேட்டுக்கொண்டபடியே எதுவும் பேசாமலும், கேள்வி எதுவும் கேட்காமலும் அவனோடு நடந்தான். ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும்புரிந்தது. அந்த இரண்டு மனிதர்களையும் தாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்என்பது. “எம்புட்டுப்பணம்டா கிடைச்சிச்சு?” “ரெண்டுபவுன் போக ரெண்டு பவுன்தானே பாக்கி இருந்திச்சு? லீலாராம் சேட்டு பத்தாயிரம்குடுத்தான். பழகின சேட்டா இருந்ததாலே அம்புட்டுக் குடுத்தான்…” “அல்லாத்தையும்இன்னாடா பண்ணினே?” “ரெண்டுஒய்ன் ஷாப்ல எட்டாயிரம் கடன் இருந்திச்சில்லே? அத்த அடச்சேன். ஒரு ஆயிரம்செலவளிஞ்சு போயிடிச்சு. மீதி ஆயிரம் இருக்கு.” […]
15 “சாரி, சேது சார். நான் ராமு பேசறேன். ஆஃபீஸ் டயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று ராமரத்தினம் சொன்னதும், “இல்லேப்பா. இப்ப எங்களுக்கு லஞ்ச் டைம்தான். சொல்லு. என்ன விஷயம்?” என்று சேதுரத்தினம் விசாரித்தான். ஊர்மிளாவுக்குத்தான் மறுபடியும் ஏதோ என்று கவலைப்பட்டபடி தொலைப்பேசியை நெருங்கிய அவனுக்கு நிம்மதியாக இருந்தது. “சொல்லாம கொள்ளாம எங்கே சார் போயிட்டீங்க? உங்க கிட்ட சொல்றதுக்கு எக்கச்சக்கமான விஷயங்கள் வெச்சிருக்கேன், சேது சார். இன்னைக்கு ஓட்டலுக்கு வருவீங்களா? ஒங்க ஒய்ஃபுக்கு உடம்பு […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சில நாள் முன் நான் தெரிவித்த ஆங்கில Ramayana in Rhymes வெளிவந்துவிட்டது. பதிப்பகத்தின் முகவரி CYVBERWIT.NET PUBLICATIONS H.I.G. 45, KAUSHAMBI KUNJ, KALINDIPURAM ALLAHABAD 211 011 (U.P.)http://www.cyberwit.net email – info@ciberwit.net மிக்க நன்றி. ஜோதிர்லதா கிரிஜா
மேசை இழுப்பறையை ஓசைப்படாமல் திறந்த மாலா அதிலிருந்து ஒரு வெள்ளைத்தாள், எழுதுஅட்டை, பேனா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து சமையலறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினாள் அவளது நோக்கம் ராமரத்தினத்துக்குப் புரிந்தது. இரண்டு நிமிடங்கள் தாமதித்ததன் பின்ன்ர் அவனும் மெதுவாக எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். கதவருகே நின்று சில நொடிகளைச் சிந்தனையுடன் கடத்திய பிறகு, அதன் கதவை மெல்லத் தட்டினான். மாலா வியப்புடன் கதவைத் திறந்தாள். அவள் எடுத்துச் சென்றிருந்த அட்டை, காகிதம் […]
12. ஓட்டமும் நடையுமாக ராமரத்தினம் கோவிலின் நுழை வாயிலை யடைந்த போது அவன் உடம்பு முழுவதும் வேர்வையில் சில்லிட்டிருந்தது. புழுக்கமான அந்நிலையிலும் கோவிலின் அரசமரத்துக் காற்றின் குளுமையால் வேர்வையின் பிசுபிசுப்புச் சற்றே தணிந்த உணர்வை அனுபவித்தவாறு அவன் விரைவாய்க் கோவிலுள் நுழைந்தான். கோவில் பூட்டப்படும் நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்ததை ஆளரவம் குறைந்திருந்ததி லிருந்து அவன் புரிந்துகொண்டான். மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் அவன் எண்ணெய் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் இருந்த பிராகாரத்துக்குப் போனான். அங்கே தட்சிணமூர்த்தியின் சன்னதிக்குப் பின்புறத்திலிருந்து […]
இலேசான கைநடுக்கத்தைச் சமாளிக்க முயன்றவாறு ராமரத்தினம் அந்த உறையை வாங்கிப் பார்த்தான். அதன் மீது ரமணியின அலுவலக முகவரி முத்துமுத்தான கையெழுத்தில் காணப்பட்டது. அவனுள் குப்பென்று ஒரு சூடு பரவி முகம் வியர்க்கலாயிற்று. ‘மாலாவின் கையெழுத்து!’– பாதிக்கு மேல் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. “என்னப்பா பிரமிச்சுப் போய் உக்காந்துண்டிருக்கே? உன் தங்கை அந்த மாலாவோட கையெழுத்துதானே அது?” “ஆமா, சார்.” “அதுக்குள்ள இருக்கிற லெட்டரை எடுத்துப் படிச்சுப் பாரு.” அவன் அப்படியே செய்துவிட்டு நான்காக மடிக்கப்பட்டிருந்த கடிதத்தைப் […]
11. இலேசான கைநடுக்கத்தைச் சமாளிக்க முயன்றவாறு ராமரத்தினம் அந்த உறையை வாங்கிப் பார்த்தான். அதன் மீது ரமணியின அலுவலக முகவரி முத்துமுத்தான கையெழுத்தில் காணப்பட்டது. அவனுள் குப்பென்று ஒரு சூடு பரவி முகம் வியர்க்கலாயிற்று. ‘மாலாவின் கையெழுத்து!’ – பாதிக்கு மேல் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. “என்னப்பா பிரமிச்சுப் போய் உக்காந்துண்டிருக்கே? உன் தங்கை அந்த மாலாவோட கையெழுத்துதானே அது?” “ஆமா, சார்.” “அதுக்குள்ள இருக்கிற லெட்டரை எடுத்துப் படிச்சுப் பாரு.” அவன் அப்படியே செய்துவிட்டு நான்காக […]
ஜோதிர்லதா கிரிஜா 10. பேருந்தில்ஏறி அமர்ந்து வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லலிதாவுக்கு நிம்மதியாகஇருந்தாலும், தன் அந்தரங்கத்தைக் கணவனின் நண்பனோடு பகிர்ந்து கொள்ள நேர்ந்துவிட்டகட்டாயம் அவளது செருக்குக்குப் பங்கம் விளைவிப்பதாக இருந்தது. ரங்கன் மிகவும்நல்லவன்தான். எனினும், தன்னைப் போன்ற கறைபடிந்த கடந்த காலம் உள்ள மனைவியை மன்னித்துஎதுவுமே நடக்காதது போல் இருந்துவிடுகிற அளவுக்குப் பெருந்தன்மையானவனா என்பதை அவளால்கணிக்க முடியவில்லை. … ஒருவனுடன்ஓடிப்போய்க் குழந்தையும் பெற்றுக்கொண்டு திரும்பியவளை அவள் பெற்றோர் அந்தக்குக்கிராமத்தில் ஏற்றுக்கொண்டதே பெரிய விஷயம்தான். ஊராரின் ஏச்சுப் […]
ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினத்தின் முகத்தில் திகைப்பு அப்பியிருந்தது.. அவனது விரிந்த விழிகளிலிருந்து அவனது திகைப்பை லலிதாவும் புரிந்துகொண்டாள். தற்செயலான சந்திப்பாக அது இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. தன் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்து தன்னைப் பின்தொடர்ந்து ஓட்டலுக்கு வெளியேயும் காத்திருந்துவிட்டு அவள் வந்திருந்ததாக அவன் ஊகித்தான். அவளை எண்ணி அவனுக்குப் பாவமாக இருந்தது. அவன் பார்வை சுழன்றது. ரங்கன் அன்று கடற்கரைக்கு வந்தது போல் இன்றும் வந்து தங்களைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது எனும் கேள்வி அவனை […]
ஜோதிர்லதா கிரிஜா 1984 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் 3 ஆம் நாள் இந்தியாவுக்கு மிக மோசமான நாளாகும். அந்நாளில்தான் போபால் நகரத்தில் இருந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் MIC Gas எனப்படும் நச்சு வாயு கசிந்ததன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பல்வேறு உபாதைகளுக்கும் உடற்குறைபாடுகளுக்கும் ஆளாகி மருத்துவ விடுதிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் 4-8-1985 தேதியிட்ட ஆங்கில நாளிதழ் த ஹிந்து வில் வெளியான ஒரு கட்டுரையில் கண்டிருந்தபடி, போபாலின் […]