ஜோதிர்லதா கிரிஜா 10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை […]
ஜோதிர்லதா கிரிஜா 8. ரமணியின் வீட்டை யடைந்த ராமரத்தினம் கூப்பிடு மணியை அழுத்திய போது அந்த வீட்டுச் சுவர்க் கெடியாரம் `டங்’ என்றது. மணி சரியாக ஆறரை என்று அவன் நினைத்துக்கொண்டான். ரமணியின் அப்பாவே கதவைத் திறந்தார். “வாப்பா!” என்று வழக்கம் போல் சொல்லாமல், அதன் பொருளில் தலையை மட்டும் இலேசாக அசைத்தார். உள்ளே நடக்கத் தொடங்கிய அவரை அவன் பின்பற்றிச் சென்றான். அவரது முகத்தில் புன்னகையே இல்லை என்பதையும் அது இறுகி யிருந்ததையும் கண்டு அவனுக்கு […]
ஜோதிர்லதா கிரிஜா ரங்கன் சேதுரத்தினத்தை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்ததன் பிறகு தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டான். சேதுரத்தினம் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். லலிதா அவனை ஓரத்துப்பார்வை பார்ததவாறு சமையற்கட்டினுள் நுழைந்தாள். ஒரே ஒரு கணம் இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்ட போதிலும், இருவருமே முகத்தில் எதையும் காட்டாமல் இருந்தார்கள். ரங்கன் எழுந்து மின்விசிறியைச் சுழலவிட்டபின் மறுபடியும் உட்கார்ந்து கொண்டான்: “லலிதா நல்லா சமையல் பண்ணும்…” என்று இரைந்த குரலில் அறிவித்தான். தன் புகழ் மொழிகள் மனைவியின் […]
ஜோதிர்லதா கிரிஜா 1970 களின் நடுவில் ஒரு தமிழ் எழுத்தாளர் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். வரவேற்பு நங்கையாகப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரியை முதலில் அவர் மயிலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாள நண்பருடன் சந்தித்தார். அப்போது சாப்பாட்டுக்கான இடை வேளையாதலால், ராஜேஸ்வரி தொலைபேசியில் சேதியைக் கூறி என்னைக் கீழே வரவேற்பறைக்கு வரச் சொன்னார். அந்த எழுத்தாளர் அப்போது கல்கி வார இதழில் ஓர் அருமையான சிறுகதையை எழுதியிருந்தார். அவர் அதிகம் எழுதியவர் அல்லர். அந்தக் கதையைப் […]
ஜோதிர்லதா கிரிஜா சிந்தனை தேங்கிய விழிகளால் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை ஏறிட்டபடி அதை வைத்த ராமரத்தினத்தின் மீது ஓட்டல் முதலாளியின் பார்வை ஆழமாய்ப் படிந்தது. “என்னப்பா? ஏதானும் பிரச்சனையா?” ஒரே ஒரு நொடி திகைத்த பிறகு, “எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், சார். அதான் என் தம்பிதான் கூப்பிட்டுச் சொன்னான்,” என்று சட்டென்று தோன்றிய பொய்யைச் சொல்லிச் சமாளித்தான். “என்னமோ `சரிங்க, சார்’னு சொன்னே? `சாயங்காலம் ஓட்டலை விட்டுக் கெளம்பினதும் நேரே உங்க வீட்டுக்கு வர்றேன்’னு வேற சொன்னே?” என்று […]
ஜோதிர்லதா கிரிஜா மறு பிறவி என்பது உண்டா இல்லையா? – உண்டு என்று சில மதங்கள் சொல்லுகின்றன. இந்து மதம் இந்த விஷயத்தில் மிக உறுதியான கருத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிறவியில் எந்தத் தவறும், பாவமும் செய்யாத நல்ல மனிதர்கள் நல்லவற்றை அனுபவிப்பதற்குப் பதில் எண்ணிறந்த துன்பங்களுக்கு ஆளாவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் முந்தைய பிறவிகளில் புரிந்துள்ள பாவங்களே என்று இந்து மதம் அடித்துச் சொல்லுகிறது. ’ஆன்மாவுக்கும அழிவு கிடையாது, அது திரும்பத் திரும்பப் பிறக்கிறது’ என்கிறது கண்ணன் […]
ஜோதிர்லதா கிரிஜா எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் புதிதாக ஓர் இளைஞர் வேலையில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். என்றோ படித்தவற்றை யெல்லாம் சொல்லுக்குச் சொல் நினைவுகூரும் ஆற்றலும் படைத்தவர். முக்கியமாய்த் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாருக்கும் சொல்லித் தாம் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கும் தன்மையுள்ளவர். வேலையில் சேர்ந்த பின் வந்த முதல் ஜூன் மாதம் முதல் தேதியன்று, ”இன்றைக்கு என் பிறந்த நாள்!” என்று சொல்லிக்கொண்டு என் இருக்கைக்கு வந்து சாக்கலேட் கொடுத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு […]
ஜோதிர்லதா கிரிஜா 5. ராமரத்தினத்தின் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவன் அன்று அந்த இதழில் படித்த ஒரு சிறு கதை ஓர் ஏழைப் பையனுக்கும் ஒரு பணக்காரப் பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல் கருகிப்போனது பற்றியதாக இருந்தது. அவன் சோர்வுடன் அதை மூடி வைத்தான். மாலாவும் அந்தக் கதையைப் படித்திருந்திருப்பாள் என்று தன்னையும் அறியாது அவன் எண்ணமிட்டான் அன்றிரவு உணவு அருந்துகையில், ‘அந்தப் பையன் – அதான் உன் சிநேகிதன் ரமணி – மட்டும் பணக்காரப் பையனா இல்லாம இருந்தா […]
ஜோதிர்லதா கிரிஜா 4. சேதுரத்தினம் அவனை வியப்புடன் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான் இந்த ராமரத்தினம்? ஒருவேளை கடன் கிடன் கேட்கப்போகிறானோ? சேச்சே! அப்படி இருக்காது..’ ”சொல்லுங்க. எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க, ராமரத்தினம்!” ”நான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன்.” “அட! ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டா ஓட்ட்ல்லே செர்வெரா இருக்கீங்க? ஏன்? வேற வேலை கிடைக்கல்லையா?” “ஓட்டல்ல வேலை பண்றது கேவலம்னு நினைக்கிறீங்களா, சார்?” “சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? படிக்கிறவங்க யாரும் ஓட்டல்ல வேலை […]
ஜோதிர்லதா கிரிஜா நான் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் ஆன புதிதில் எழுத்தாளர் தொடர்புள்ள கூட்டங்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் மிகுந்த ஆர்வத்துடன் போவதை வழக்கமாய்க் கொள்ளலானேன். ஆனால் சில கூட்டங்களுக்குப் போனதன் பின் அலுத்துப்போகத் தொடங்கிவிட்டது. காரணம் உருப்படியாக இலக்கியம் பற்றி எதுவும் பேசாமல் பேச்சாளர்கள் – பெரும்பாலும் எழுத்தாளர்கள் – தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை மட்டந்தட்டிப் பேசுவதையோ அல்லது கேலிசெய்வதையோ, தாக்குவதையோ பொறாமையின் விளைவாகச் செய்துகொண்டிருந்ததுதான். அப்போதே எழுத்தாளர்களில் “கோஷ்டிகள்” இருந்தன. (இப்போது அவை இன்னும் அதிக […]