author

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

This entry is part 2 of 5 in the series 1 ஜூன் 2025

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை _ லதா ராமகிருஷ்ணன் காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி, தான் செய்துகொண்டிருக்கும் கணினி தட்டச்சுவேலையையும் சரிவர செய்ய இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்’கில் வெளியாகிக்கொண்டிருக்கும் அவருடைய சமீப கால கவிதைகள் அவருடைய வாழ்வியல் சார் நெருக்கடியை, இயலாமையை, அதனால் அவர் ’ஃபேஸ்புக்’ நட்பினரிடம் […]

முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2

This entry is part 4 of 5 in the series 1 ஜூன் 2025

(ANAAMIKAA ALPHABETS வெளியீடு) _ லதா ராமகிருஷ்ணன் awaamikaa’முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை’ என்ற தலைப்பு பொருத்தமானதாகத் தோன்றியது. இதுவொரு புதிய முயற்சி. இந்த நூல் வாசிப்போருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும், மொழிபெயர்ப்புக் கலை குறித்த சில கோணங்கள், பாணி களை அறிந்துகொள்ள வழிவகுப்பதாகவும் அமையும் என்று நம்புகிறோம்.  நன்றி மொழிபெயர்ப்பாளர்கள் லதா ராமகிருஷ்ணன் – எஸ்.ஆர்.தேவிகா * இருநூல்களிலும் வெளியாகியிருக்கும் என்னுடைய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்: மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் கண்ணோட்டங்கள் – உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் […]

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

This entry is part 5 of 5 in the series 1 ஜூன் 2025

 _லதா ராமகிருஷ்ணன் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், பள்ளி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளும் அரசு பள்ளிகளில் மிகவும் நன்றாகவே உள்ளன  அப்படி இருந்தும் தங்கள் வசதியின்மையையும் மீறி அடித்தட்டு மக்கள் வட்டிக்கு கடன் […]

நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்

This entry is part 7 of 7 in the series 11 மே 2025

இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்பதாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை காரியார்த்த மானது என்றும், பாவனை என்றும் இன்னும் வேறாகவும் சிலர் சொல்லக்கூடும்; சொல்ல முடியும். ஆனால், இந்தப் பேரணி இன்றைய இந்திய அரசின் மீதுள்ள வெறுப்புக்கும், இந்தியா என்ற நாட்டின் மீதே உள்ள வெறுப்புக் குமான பிரிகோட்டை கவனமாக வெளிப்படுத்துகிறது. இது அவசியமானது. இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய […]

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்

This entry is part 5 of 7 in the series 11 மே 2025

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்  (அல்லது) கொடும் போர்ச்சூழலும் காகிதக் கிளர்ச்சியாளர்க ளும் காரியார்த்தக் கலகக்காரர்களும் …………………………………………………………………………………………………………………………………… _ லதா ராமகிருஷ்ணன் ஒரு போர்ச்சூழலைப் பயன்படுத்தி தம்மை மனிதநேய, பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலராக, போராளியாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பவர் களைப் பற்றி என்ன சொல்ல? எழுத்தாளர்கள் கூடவா இப்படி இருப்பார்கள்? ஒரு போரை உரிமைப்போர் என்று சொல்லி உயர்த்திப்பிடிப்பார்கள் -ஒரு போரை வன் முறை என்று வரையறுப்பார்கள். பல நேரங்களில், வசதிக்கேற்ப வேறு வேறு […]

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு

This entry is part 4 of 7 in the series 11 மே 2025

(*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த கணக்கிலா? அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து  குட்டிவாய் திறந்து  பின் மீண்டும் உள்ளோடி சதுரப்பரப்பின் மையத்திலிருந்த உருளையருகே சென்று  அங்கே அதற்கென்று வைக்கப்பட்டிருந்த உணவை ஓரிரு கவளங்கள் அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு மீண்டும் சதுரமாய் வட்டமிடத் தொடங்குகிறது. சமுத்திரவாசி எத்தனை சிறிய சதுரநீர்ப்பரப்பிற்குள்…. ஆனால், நானுமோர் சமுத்திரவாசிதான் – நிலம் நீராக காற்றாக – […]

மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் நிலவரம்

This entry is part 11 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

லதா ராமகிருஷ்ணன் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி இது குறித்துப் பேசுவதில்லை என்றும் ஏற்கெனவே பேசியிருக்கவேண்டும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன.  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசும்போது இந்தியப் பிரதமர் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரங்களைப் பட்டியலிட்டார். இப்போதைய கலவரங்களுக்குப் பொறுப் பேற்காமல் நழுவுகிறார், பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்குகிறார் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டன.  இன்னொரு புறம் திரு.ராகுல் காந்தி பிரதம […]

கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்

This entry is part 10 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

லதா ராமகிருஷ்ணன் 11.8.2023 அன்று படித்த செய்தி இது.  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூரில் அரசு – உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியொன் றில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த +2 பள்ளி மாணவரை அவருடைய சக மாணவர்கள் – அந்தப் பகுதியில் மேலாதிக்கம் பெற்று விளங்கும் இடைச் சாதியை சேர்ந்தவர்கள் மதிப்பழித்து நடத்தியதால் பள்ளி செல்லாமல் இருந்திருக்கிறார் அந்த மாணவர். பள்ளி ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்க விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். தலைமையாசிரியர் அந்த […]

ஊடக அறம்

This entry is part 9 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

_ லதா ராமகிருஷ்ணன் ஊடக அறமா இது – 1 தற்போது பரபரப்பாகக் காண்பிக்கப்படும் காணொளி மணிப்பூர் அவல நிகழ்வுக்குக் காரணமாகக் கைது செய்யப் பட்டிருக்கும் நபரின் வீட்டை அவனுடைய இனத்தைச் சார்ந்த பெண்களே அடித்து நொறுக்கும் காட்சிகள். மணிப்பூரில் நடந்திருக்கும் மிக அவலமான, அராஜகமான நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது.  அதை பகடைக்காயாக, துருப்புச்சீட்டாக, தங்களைப் பீடமேற்றிக் கொள்ளக் கிடைத்த பெருவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் ஆழ்ந்த அனுதாபத்துக் கும், கண்டனத்திற்கும் உரியவர்கள் ஊடக அறமா இது – 2 […]

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?

This entry is part 8 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

_ லதா ராமகிருஷ்ணன் _  Section 509 IPC, as defined under the code states as, “Whoever intending to insult the modesty of a woman, utters any word, makes any sound, or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, or that such gesture or object shall be seen, by such […]