முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின் ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், […]
தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை 9442913985 புதுக்கவிதை உலகில் குறிக்கத்தக்க மூத்த கவிஞர்களுள் ஒருவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். இவர் வானம்பாடி இயக்கக் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பாவலர். தேர்ந்த கட்டுரையாளர், மேடைக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்று ஆசிரியர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்டு தமிழகத்தின் தற்கால இலக்கியப் போக்கிற்குத் தடம் வகுத்துத் தருபவராக விளங்கி வருகிறார். புதுக்கவிதையின் குறியீட்டுப்பாங்கிற்கு இவரின் சர்ப்ப யாகம் அசைக்கமுடியாத […]
முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்னும் நீதி நூல் ஆகும். இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண் செந்துறை சா்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள். முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை – […]
முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. நாசா என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பழங்காலத்தில் கடல்வழிப் பாலம் இருந்ததாக செயற்கைக்கோள் வரைபடத்தைச் சான்றாகக் காட்டுகின்றது. இசுலாமிய சமயத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆதாம் பாலம் என்றொரு […]
மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறேன். நன்றி அன்புடன் மு.பழனியப்பன்
முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர் அரசு தலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவகோட்டை பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியப் பனுவல்களில் பாடினி, விறலி பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக இடம்பெற்றிருக்கும். இப்பாத்திரம் கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ள திறம் படிப்பவர் மனதில் விறலி பற்றிய அழகான சித்திரத்தை படியச்செய்யும். இவ்வருணனை பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றது. சங்க இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வகைமையில் […]
முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை தமிழ் அக இலக்கண மரபில் பெருந்திணை வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. அகன் ஐந்திணையில் தொல்காப்பிய கால வளர்ச்சி நிலை அப்படியே இருக்க, கைக்கிளையும் பெருந்திணையும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களால் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளன. இவ்வளர்ச்சி ஆண், பெண் இருவர் பக்கத்திலும் ஒத்த அன்பினைக் கொள்ளாத கைக்கிளையும், பெருந்திணையும் புறப்பொருள் திணைகளாகவும் கொள்ளத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தொல்காப்பியப் பெருந்திணை தொல்காப்பியர் பெருந்திணைக்கான இலக்கணத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். […]
முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஞான சம்பந்தப் பெருமானை அழைத்து வந்து சைவம் செழிக்க வைத்தது. தொடர்ந்து குமரகுருபரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் என்று நாளும் பக்திப் பயிர் வளர்க்கும் பகுதியாக பாண்டியநாட்டுப்பகுதி விளங்கி வருகின்றனது. பக்தியும் […]
ஆண்டுதோறும் சிங்கப்பூரில் திருமுறை மாநாடு நடைபெற்று வருகின்றது. முப்பத்து நான்கு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட வரும் திருமுறை மாநாடு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1, 2. 3 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் நகரின் டாங்க் சாலையில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் திருமுறை சார்ந்து இயங்கி வரும் பேச்சாளர் ஒருவரை அழைத்து இம்மாநாட்டில் பேசவைப்பது என்ற அடிப்படையில் இவ்வாண்டு அடியேன் செல்லும் வாய்ப்பு […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561 அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக […]