author

முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்

This entry is part 41 of 45 in the series 2 அக்டோபர் 2011

தமிழில் எஸ். சங்கரநாராயணன் >>> ஆச்சர்யமான விஷயம். அல்ராய் கியருடன் நான் விருந்து சாப்பிட்ட ரெண்டு மூணு நாளில் எனக்கு எட்வர்ட் திரிஃபீல்டின் விதவையிடமிருந்து ஒரு கடிதம் –   பிரியமான நண்பரே, கடந்த வாரம் ராயுடன் நீங்கள் எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பற்றி மனப்பூர்வமாய் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதாய் அறிய மகிழ்ச்சி. அடிக்கடி அவர் உங்களைப் பற்றி என்னிடம் பேசுவார். உங்கள் எழுத்துத் திறமையை அவர் பெரிதும் வியந்து போற்றிவந்தார். […]

முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்

This entry is part 35 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அந்த பிறைச் சந்திர தெருவில் மேடேறிப் போகிறேன். பிகாதிலியின் உற்சாகப் பொங்கலும் கலகலப்பும் அடங்கி இங்கே அமைதி ஆளைத் தழுவியது. கௌரவமான, பிறத்தியாரை மதிக்கிற அமைதி அது. நிறைய வீடுகள் பகுதிகளை வாடகைக்கு என்று அளித்தன. என்றாலும் அதை பறைசாற்றி வாடகைக்கு என அறிவிப்பு தொங்கவில்லை. சில வீடுகளில் பளபளப்பான பித்தளைத் தகடு அவர்கள் பெயர்பொறித்து. அவர் மருத்துவர் என்றால் தொழிலை அவை அறிவித்தன. வாசல் கதவுக்கு மேல்பக்க ஜன்னலில் அழகாய் அபார்ட்மென்ட் […]

முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்

This entry is part 36 of 37 in the series 18 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.” கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார். ”எப்பிடி தேங்காவெடல் போடறீங்க! அப்பிடிப் பார்த்தாலும், உங்க மாதிரி அவரை மதிக்கிற, அவமதிக்கிற ஆட்கள் சொல்பம் தான். அதை நீங்க ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? இதைச் சொல்ல எனக்கு கூச்சம் கிடையாது. அவரோட நாவல்களை யெல்லாம் நான் ஒருதடவை, ரெண்டுதடவை அல்ல, அஞ்சாறு தடவை வாசிச்சிருக்கேன். எப்ப வாசிச்சாலும் அவை முன்னைவிட அருமையா […]

முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்

This entry is part 32 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக ஒரு ஒருமணிப் போல மெல்ல சவாரிவிட்டேன். நடராஜா சர்விஸ். சிறு அளவில் ‘சுதி’ ஏத்திக்கொண்டேன். ராய் எனக்கு காக்டெய்ல் தரமாட்டார் என்பது நிச்சயம். இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. கடைகளை பராக் பார்த்தபடி தெருவில் […]

முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்

This entry is part 52 of 54 in the series 4 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 3 >>> ஜீவிதத்தில் ஒவ்வொருத்தனுக்கும் பொதுவான சிக்கல் ஒன்று உண்டு. ஒருகாலத்தில் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி, நீ இல்லாமல் நான் இல்லை, என்கிற தினுசில் ஒட்டி உறவாடிய நட்பு, காலாவட்டத்தில் தீயமர்ந்து விடுகிறது. இந்த நட்பை என்ன செய்ய வேண்டும். வலியப்போய் திரும்ப மூட்டறதா, அல்லது அப்பிடியே விட்டுர்றதா என்பது பிரச்னை. இருவருமே ஒரே ஸ்திதியைக் கடைப்பிடிப்பதாய் இருந்தால், அந்தப் பிரிவு இயல்பாய் தண்ணிக்குள் மீனாய் அடங்கிவிடும். ஆனால் ரெண்டில் ஒருத்தர் கிச்னு பிரகாசமாக […]

முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

This entry is part 43 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ”சார் இருக்காரா?” – ”இல்லையே, வெள்ல போயிருக்கார்…” – ”அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?” என்னத்த முக்கியமான விஷயம், அநேகமாய் அவருக்குத்தான் அது அதிமுக்கியமானது, நமக்கல்ல, என்று பிற்பாடு தெரியவரும். நம்மைப் பாராட்டி எவனாவது பரிசளித்தாலோ, எவனாவது நமக்கு உபகாரம் செய்தாலோ, அவன் மனசாரச் செய்கிறான் என்பதில்லை… பல்கடித்து பொருமலை மறைத்து பொறுமை […]

முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

This entry is part 44 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

CAKES AND ALE WILLIAM SOMERSET MAUGHAM A NOVEL >> தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 வில்லியம் சாமர்செட் மாம் பாரிசில் 1874ல் பிறந்தார். லண்டனின் மருத்துவராகப் பயின்றுகொண்டிருந்தபோது தமது ஆரம்பகட்ட நாவல்களை அவர் எழுத ஆரம்பித்தார். 1907ல் அவர் ‘சீமாட்டி ஃப்ரிதரிச்’ நாவல் மூலம் புகழ்பெற்றார். 1908ல் ஒரே சமயத்தில் அவரது நான்கு நாடகங்கள் லண்டனில் அடுத்தடுத்து பலமுறை அரங்கேறின. 1926ல் பிரான்சின் ஃபெரத் முனையில் வீடுவாங்கிக் குடியமர்ந்தார். அது அநேக எழுத்தாளர்களின், கலைஞர்களின், […]

சொல்

This entry is part 40 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு உண்டுதான். அதன் கூர்த்த மௌனத்தில் காதுகள் தானறியாமல் ஒரு பாதுகாப்பு பிரக்ஞையுடன் எதிர்பார்ப்புடன், அதாவது எதிர்பாராத ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கவே செய்கின்றன. சப்தங்களின் ஊடே இந்த எதிர்பாராத்தன்மை இல்லை தான். சப்தங்களின் ஊடே மௌனந்தான் […]