ஹிந்தியில் : ஆலோக் தன்வா தமிழில் : வசந்ததீபன் _______________________________ ஒன்று ______________ வீட்டின் சங்கிலிகள் எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன ? எப்போதும் வீட்டிலிருந்து ஏதாவதொரு சிறுமி ஓடிப்போகிறாள்? என்ன அந்த இரவின் நினைவு வந்து கொண்டிருக்கிறதா? அது பழைய சினிமாக்களில் அடிக்கடி வந்து இருந்தது எப்போதும் ஏதாவதொரு சிறுமி வீட்டிலிருந்து ஓடிப் போயிருந்தாளா? மழைக் காலத்தினால் வீழ்ந்த அந்தக் கல் விளக்குத் தூண் வெறுமனே கண்களின் அமைதியின்மை காட்டும் அதிகமாக அதனின் ஒளியா? மற்றும் அந்த […]
ஆர் வத்ஸலா சோகங்களை பகிர்ந்து கொள்ள இனி யாரும் இல்லை தான் வெற்றிகளை கை தட்டிக் கொண்டாட என்னோடு இனி யாரும் இல்லை தான் மரங்களின் குளியலை இலைகளின் ஆட்டத்தை உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும் வேர்களின் மெல்லதிர்வை காற்றின் கவிதையை என்னுடன் சேர்ந்து ரசிக்க இனி யாருமில்லை தான் கண்ணீரில் பார்வை மங்கியிருப்பது உண்மை தான் ஆனாலும் உயிர்த்திருக்கிறேன் நான் எனது ரசனையின் கதகதப்பில்
ஆர் வத்ஸலா தீர்மானங்கள் தாண்டாது ஒரு நாள் கூட எனத் தெரிந்தும் செய்த நாட்கள் போய் விட்டன துரோகங்களுக்காக கொதித்த நாட்கள் போய் விட்டன நம்பிய கட்சியும் தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று ‘மைக்’கில் குரலோங்கிய நாட்கள் போய் விட்டன அனுபவங்கள் கனக்கின்றன அவற்றை தூக்கி போட்டு மிதித்து மீண்டும் போராடும் மன இளமை தா தாயே பராசக்தி!
ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்
என் பயணத்தில் என்னைக் கடக்கும் வாகனங்கள் பல நான் கடக்கும் வாகனங்களும் பல அவரவர்களுக்கு அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை
நதியின் இறுதி நாள் இதோ நெருக்கத்தில் கடல் அன்று மாட்டுக்கு விலை இன்று தோலுக்கு விலை விழுந்த தேங்காய் தென்னையைப் பார்த்து அழுகிறது இனி எல்லா நாளுமே ஞாயிறுதான் மான்களை விரட்டிய புலி இன்று ஈக்களை விரட்டுகிறது குலை தள்ளியது சேய்வாழை சாயத் தயாராய் தாய்வாழை தீர்ப்பு எழுதப்படுகிறது இனி வாதாடி என்ன பயன் இறுதி அத்தியாயத்தின் இறுதி வரி காத்திருக்கிறது முற்றுப்புள்ளி கொம்புகள் சாய்ந்தன தள்ளாடுகிறது கொடி கனரகக் கப்பல் காகிதக் கப்பலானது வந்துவந்துபோன […]
வளவ. துரையன் அந்த முச்சந்திக்கு வேறு வேலையில்லை. எல்லாரையும் முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததை எடுத்து வருவார்களா என எல்லாக்கால்களையும் பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடை போணியாகி விற்றுவிடாதா என்றேங்கும் பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியை இழுக்க முடியாமல் அடிகள் வாங்கி இழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டு அடம்பிடிக்கும் அறியாச்சிறுவனை அனைத்தையும் பார்த்துப் பார்த்து அதுவும் வாழ்வினைக் கற்றுக் கொள்கிறது.
வளவ. துரையன் என் தோழனே! நான் உன்னை வானத்தை வில்லாக வளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொரு கயிறாகத் திரிக்கச் கூறவில்லை. என் கடைக்கண்ணிற்கு மாமலையும் கடுகென்றாயே அந்த மாமலையைத் தோளில் தூக்கிச் சுமக்குமாறு நான் வற்புறுத்தவில்லை. நான் தானாக அழும்போது ஆறுதலாய்ச் சாய உன் தோளில் கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால் என் கண்ணீரைத் துளியைத் துடைத்துவிடு. அதுவே போதும்
ஆர் வத்ஸலா மல்லாந்து படுத்து கருநீல வானின் வைரங்களை விடிய விடிய எண்ண ஆசைப்படும் வரை ஒவ்வொரு பூனையின் ஒவ்வொரு முகபாவமும் வெவ்வேறாகத் தோன்றும் வரை முன்பின் தெரியாத கைக்குழந்தை என்னை பார்த்து களுக்கென சிரிக்கும் வரை மரத்தில் இருந்து உதிர்ந்த மலரின் அழகை காணத் தெரிந்த வரை ஜன்னல் வழியே பறவைகளையும் பறக்கும் விமானத்தையும் கண்டு அதிசயக்கும் வரை இருக்கிறது தகுதி எனக்கு வாழ
ஆர் வத்ஸலா வேண்டியவர்களுக்கு கணினியில் மின்னஞ்சல் செய்து கொண்டு அறித்திறன் பேசியில் மற்றதை தன்னை புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டு புலனக் குழுக்களில் உள்ளூர் வெளியூர் உறவுகளுடன் நண்பர்களுடன் குறுஞ்செய்திகளில் (முகம் பார்க்காமலும் பார்த்தும்) புலன அழைப்புகளில் நட்பும் விரோதமும் பாராட்டிக் கொண்டு தேவைப்படும் பொழுது காதில் குட்டிக் கருவிகள் அணிந்து மற்றவரை தொந்தரவு செய்யாமல் இணைத்திரை ரசித்துக் கொண்டு புது செயலி வரும் போதும் தெரிந்த செயலி புது அவதாரத்தில் தெரியாமல் போகும் போதும் பேரக் […]