கவிமன வேதியியல் மாற்றங்கள் Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும் மாறிக்கொண்டே யிருப்பவர்கள் முன்னவராக இருக்கும்போது அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்…. பின்னவராக மாறி காது கூசுவதாய் தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட ஆரம்பித்து விடுகிறார்கள். கொன்றழிக்கத்தோதாய் சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி வெடிகுண்டு வகையறாக்கள் வேகமாய் துடிக்கவைக்கின்றன ஏற்கெனவே எதனாலெல்லாமோ எந்நேரமும் படபடப்பாக உணரும் பாழ் இதயத்தை. முன்னவராக எண்ணி நட்புபாராட்டிக்கொண்டிருந்தவர்கள் காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து மூர்ச்சையாகிவிழும் தருணம் […]
====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாதகுகைவழிப்பாதை என்று. நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம். ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃபன்ஹாக்கிங்…பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த “மாறிலி” எனும்சோழியை குலுக்கிதூர உயரே எறிந்து விட்டார். முதல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூடஉடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்கவேண்டியது தான். கணித சமன்பாடுகளின் சுரங்கம்வர்க்கமும் வர்க்கமூலமும்டெல்டாவும் லேம்ப்டாவும்வழி நெடுக நிரடும். கருந்துளைக்கும்உண்டுதொப்பூள் கொடித்துளை. அந்த புழுத்துளைக்குள்போனால்அதி நவீன கணிதப்பேராசிரியர்எட்வர்டு மிட்டனும்அங்கு தான்பக பக வென சிரிக்கிறார். போகட்டும்விஞ்ஞானிகளின் மூச்சுகளின்விழுதுகளின் ஊஞ்சல்பிடியைவிட்டுவிட்டால்…“தொபுக் கடீர்” தான். இந்த பிரபஞ்ச […]
முகக்கண் காணுமா ? சி. ஜெயபாரதன், கனடா முகக்கண் காணுமா ? சொல் முகக்கண் காணுமா ?அகக்கண் பேணுமா ? தோழீ முகக்கண் காணுமா ? முக்கண் முதல்வனை, ஆதி மூலனை முகக்கண் காணுமா ? அகக்கண் பேணுமா ? சொல், சொல், சொல், சொல் தோழீ ! முகக்கண்ணா ? அகக்கண்ணா ? எது காணும் ? யுகக் கண்ணனை எது காணும் இப்பிறவியில் ? சொல், சொல், சொல் தோழீ ! மும்முக […]
சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும் நாதம் !ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை !முதன்முறைப் பதிவு !இயற்கை அன்னை வீணை நாதம்மயக்குது மாந்தரை !துளையிட்டுக் கேட்க பூமிக்குள்நுழைவது யார் ?கடற்தட்டுகள் துடித்தால்சுனாமி அலை அடிப்பு !புவித் தட்டுகள் மோதினால்பூகம்ப நடனம் !குடற் தட்டு நெளிந்தால்நிலக் குலுக்கல் !சூழ்வெளி மாசாகதாரணி வயிற்றுக் குள்ளும்ஆறாத தீக்காயம் !
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன…. இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்… தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி….. மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில் மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள் அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன. சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான் எத்தனை சுவாரசியமாக இருக்கிறது! […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்தத் தீப்பொறி விழுந்தது இவன் நட்பின் இனிய பசுமையான மென் பிரதேசங்கள் எரிந்து கருகின இடைவெளி அந்த நண்பர்களைக் கடுமையாக அமைதிப்படுத்திவிட்டது ஒரு மலரின் எல்லா இதழ்களும் மீண்டும் கூம்பி மொட்டானதுபோல் அவர்கள் மௌனமானார்கள் அன்பு கெட்டிதட்டிப்போய் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து கிடக்கிறது ஆனாலும் இப்போதும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள் உயிர்ப்பில்லாமல் …
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். திருத்தாத தவறு வருந்தாத நினைவு விரும்பாத மனது வினை செய்த பழக்கம் அளவொன்றை மீறி வடிகாலை தாண்டி நனைத்த இடமெல்லாம் நேரம் என்னை மறக்க செய்து கொண்டிருந்தது நான் விழித்து கொண்டிருந்தாலும் அங்கே வழுக்கும் நிகழ்கால உணர்வுகளுடன் கமுக்கமாய்
சல்மா தினேசுவரி மலேசியா அற வாழ்வென்று புற வாழ்வொன்று வாழும் பட்டியல் நீளாமல் இல்லை, துறத்தலில் துப்பல்களும் துரோகங்களும் நிறைத்துக் கொண்டு புத்த சிலைகளுக்கு மத்தியில் முகம் மறைத்து வாழும் நாகரிகம் அறிந்தவர்கள்… வெறுப்புகளும் பகைமைகளும் மூளை வரை நிரப்பி வாயின் வாசற்படியில் போதிமரம் வளர்த்து நிஜங்களின் நிழலாடும நிறங்களாய் நம்மை ‘கருப்பாக்கி’ … நல்ல ‘எருமை’ கிடைத்தால் கொம்பு சீவி.. மனிதம் தெரிந்தால் மிருகமாக்கி சித்துவேலை செய்யும் கைங்கரியம் கூடு […]
அடிவானப்பறவை தினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்….. உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்தடவிக்கொண்ட இடத்தில்சுளீரென எரிவதில்இரட்டிப்பாகும் இழப்புணர்வு. இறங்கிவாராப் பறவையின் காலில்அதற்கேயானதொரு மடலைக்கட்டியனுப்பவும் இயலாது. பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழியெது? மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்வழிமொழியுமோ பறவை? பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடுஅது எனக்கேயெனக்காய் பேசுமோ என்றஎதிர்பார்ப்பும் சேர _ சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்ஆகாயமோவிரிந்துகொண்டே போகிறது. ஒருபோது சற்றே யப் […]
அன்னையர் தினக் கவிதை கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய் என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய் உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய் துளி எனைத் தந்த நதியே ‘என்னப்பெத்த ராசா’ என்று என்னை நதியாக்கி நீ துளியானதில் தியாகம் அர்த்தம் பெற்றது தூளியின் தூக்கத்தில் கைபிசைந்த அமுதில் பொய்யாகிப் போயின என் எல்லா சுகங்களும் என் தாகங்கள் என் பசிகள் […]
பின்னூட்டங்கள்